LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

குயிற்பத்து - ஆத்தும இரக்கம்

 

கீத மினிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான் 
பாத மிரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால் 
சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மை 
ஆதிகுண மொன்று மில்லான் அந்தமி லான்வரக் கூவாய். 348 
ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு வுந்தன் னுருவாய் 
ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர் வண்டோ தரிக்குப் 
பேரருளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச் 
சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய். 349 
நீல வுருவிற் குயிலே நீள்மணி மாடம் நிலாவுங் 
கோல அழகில் திகழுங் கொடிமங்கை உள்ளுறை கோயில் 
சீலம் பெரிதும் இனிய திருவுத் தரகோச மங்கை 
ஞாலம் விளங்க இருந்த நாயக னைவரக் கூவாய். 350 
தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேயிது கேள்நீ 
வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் 
ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது வாய வொருத்தன் 
மான்பழித் தாண்டமெல் நோக்கி மணாளனை நீவரக் கூவாய். 351 
சுந்தரத் தின்பக் குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல 
அந்தரத் தேநின் றிழிந்திங் கடியவ ராசை அறுப்பான் 
முந்தும் நடுவும் முடிவு மாகிய மூவ ரறியாச் 
சிந்தூரச் சேவடி யானைச் சேவக னைவரக் கூவாய். 352 
இன்பந் தருவன் குயிலே ஏழுல கும்முழு தாளி 
அன்பன் அமுதளித் தூறும் ஆனந்தன் வான்வந்த தேவன் 
நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரி மேல்வரு வானைக் 
கொம்பின் மிழற்றுங் குயிலே கோகழி நாதனைக் கூவாய். 353 
உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன் 
பொன்னை அழிந்தநன் மேனிப் புகழில் திகழும் அழகன் 
மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய 
தென்னவன் சேரவன் சோழன் சீரப்புயங் கன்வரக் கூவாய். 354 
வாயிங்கே நீகுயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி 
ஓவியவ ருன்னி நிற்ப ஒண்தழல் விண்பிளந் தோங்கி 
மேவிஅன் றண்டங் கடந்து விரிசுட ராய்நின்ற மெய்யன் 
தாவி வரும்பரிப் பாகன் தாழ்சடை யோன்வரக் கூவாய். 355 
காருடைப் பொன்திகழ் மேனிக் கடிபொழில் வாழுங் குயிலே 
சீருடைச் செங்கமலத்தில் திகழுரு வாகிய செல்வன் 
பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்தெனை யாண்ட 
ஆருடை அம்பொனின் மேனி அமுதினை நீவரக் கூவாய். 356 
கொந்தண வும்பொழிற் சோலைக் கூங்குயி லேயிது கேள்நீ 
அந்தண னாகிவந்திங்கே அழகிய சேவடி காட்டி 
எந்தம ராம்இவ னென்றிங் கென்னையும் ஆட்கொண்டருளும் 
செந்தழல் போல்திரு மேனித் தேவர்பி ரான்வரக் கூவாய். 357 

 

கீத மினிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான் 

பாத மிரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால் 

சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மை 

ஆதிகுண மொன்று மில்லான் அந்தமி லான்வரக் கூவாய். 348 

 

ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு வுந்தன் னுருவாய் 

ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர் வண்டோ தரிக்குப் 

பேரருளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச் 

சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய். 349 

 

நீல வுருவிற் குயிலே நீள்மணி மாடம் நிலாவுங் 

கோல அழகில் திகழுங் கொடிமங்கை உள்ளுறை கோயில் 

சீலம் பெரிதும் இனிய திருவுத் தரகோச மங்கை 

ஞாலம் விளங்க இருந்த நாயக னைவரக் கூவாய். 350 

 

தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேயிது கேள்நீ 

வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் 

ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது வாய வொருத்தன் 

மான்பழித் தாண்டமெல் நோக்கி மணாளனை நீவரக் கூவாய். 351 

 

சுந்தரத் தின்பக் குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல 

அந்தரத் தேநின் றிழிந்திங் கடியவ ராசை அறுப்பான் 

முந்தும் நடுவும் முடிவு மாகிய மூவ ரறியாச் 

சிந்தூரச் சேவடி யானைச் சேவக னைவரக் கூவாய். 352 

 

இன்பந் தருவன் குயிலே ஏழுல கும்முழு தாளி 

அன்பன் அமுதளித் தூறும் ஆனந்தன் வான்வந்த தேவன் 

நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரி மேல்வரு வானைக் 

கொம்பின் மிழற்றுங் குயிலே கோகழி நாதனைக் கூவாய். 353 

 

உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன் 

பொன்னை அழிந்தநன் மேனிப் புகழில் திகழும் அழகன் 

மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய 

தென்னவன் சேரவன் சோழன் சீரப்புயங் கன்வரக் கூவாய். 354 

 

வாயிங்கே நீகுயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி 

ஓவியவ ருன்னி நிற்ப ஒண்தழல் விண்பிளந் தோங்கி 

மேவிஅன் றண்டங் கடந்து விரிசுட ராய்நின்ற மெய்யன் 

தாவி வரும்பரிப் பாகன் தாழ்சடை யோன்வரக் கூவாய். 355 

 

காருடைப் பொன்திகழ் மேனிக் கடிபொழில் வாழுங் குயிலே 

சீருடைச் செங்கமலத்தில் திகழுரு வாகிய செல்வன் 

பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்தெனை யாண்ட 

ஆருடை அம்பொனின் மேனி அமுதினை நீவரக் கூவாய். 356 

 

கொந்தண வும்பொழிற் சோலைக் கூங்குயி லேயிது கேள்நீ 

அந்தண னாகிவந்திங்கே அழகிய சேவடி காட்டி 

எந்தம ராம்இவ னென்றிங் கென்னையும் ஆட்கொண்டருளும் 

செந்தழல் போல்திரு மேனித் தேவர்பி ரான்வரக் கூவாய். 357 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.