நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றின் மீது புகார் மனு அளித்துள்ளார்.
அதில், ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நான் பயன்படுத்திய 'என்னமா இப்படி பண்றீங்களேமா?' என்ற வார்த்தையை வைத்து தனியார் தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் புண்படுத்தியது. என்னை இழிவுபடுத்தும் வகையில் இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். முதல் முறை என்பதால் விட்டு விட்டேன். இப்போது மீண்டும் என்னை புண்படுத்தும் வகையில் அதே நிகழ்ச்சியை நாளை ஒளிபரப்பவுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
தொடர்ந்து என்னை இழிவுபடுத்தும் வகையில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்புவதை அனுமதிக்க முடியாது. இதனை எதிர்கொள்ளும் சக்தியும் பொறுமையும் எனக்கு இல்லை. எனவே அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் என லட்சுமி ராமகிருஷ்ணன் தனது மனுவில் கூறியுள்ளார்.
|