LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

கேப்டன் லட்சுமி சேகல்

நாம் காலனிய ஆட்சியில் இருந்துதான் சுதந்திரம்

அடைந்து விட்டோம் . ஆனால் சமூகரீதியாகவோ ,

பொருளாதாரரீதியாகவோ நாம் இன்னும்

சுதந்திரம் அடையவில்லை .


சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக துப்பாக்கி ஏந்திப் போராடிய வீராங்கனை லட்சுமி சேகல் ( Lakshmi Sahgal ) ஆவார் . இவர் சென்னை மாகாணத்தில் 1914 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று பிறந்தார் . இவரின் தந்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தார் . இவர் சென்னையில் மருத்துவம் பயின்றார் . கல்லூரியில் படிக்கும்போது பகத்சிங்கின் வழக்கிற்காக நிதி திரட்டினார் . சிங்கப்பூரில் ஏழைப் பெண்களுக்கு மருத்துவ சேவை புரிந்தார் . அங்கு நேதாஜியை சந்தித்த பின் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார் .1943 ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணிப் படையின் தலைவராக லட்சுமி செயல்பட்டார் . இப்படையில் 1500 பெண்கள் இருந்தனர் . இப்படையே ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் படையாகும் .

கேப்டன் லட்சுமியின் தலைமையில் பர்மாவிலிருந்து பெண்கள் படை டில்லியை நோக்கி புறப்பட்டது . பர்மாவின் எல்லையில் போர் மூண்டது . விமான குண்டு வீச்சிலிருந்து உயிர் தப்பினார் . கைது செய்யப்பட்ட கேப்டன் லட்சுமி அடர்ந்த காட்டுப் பகுதியில் ஓராண்டு காலம் சிறை வைக்கப்பட்டார் . இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைப் பிரதிநிதியாக 1971 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார் . அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்தார் . இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்துள்ளது . இவர் 2012 ஆம் ஆண்டு ஜூலை 23 இல் இயற்கை எய்தினார் .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.