|
|||||
லல்லுபிரசாத் யாதவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை !! ரூ. 25 லட்சம் அபராதம் !!! |
|||||
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியென அறிவிக்கப்பட்ட, பீகார் முன்னாள் முதல்வர் லல்லுபிரசாத் யாதவிற்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்குவதாக ராஞ்சி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி நீதிபதி பவேஸ்குமார் தீர்ப்பளித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டு சிறையும், லாலுவுக்கு ரூ. 25 லட்சம் அபராதமும் விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
பீகார் மாநிலத்தில் 950 கோடி ரூபாய் மாட்டுத் தீவன ஊழல் வழக்கு கடந்த 17 வருடங்களாக நடந்து வருகிறது. இந்த வழக்கில், அம்மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை குற்றவாளி என கடந்த 30 ஆம் தேதி ராஞ்சி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்தது. மேலும், இந்த வழக்கில் லாலு பிரசாத், ஜெகன்நாத் மிஸ்ரா மற்றும் ஜெகதீஷ் சர்மா எம்.பி. உள்பட 45 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். ஆனால், லாலு உள்ளிட்டோருக்கான தண்டனை விபரத்தை இன்று (03.10.13) அறிவிப்பதாக நீதிமன்றம் கூறியிருந்தது.
அதன்படி, இவர்களுக்கான தண்டனை இன்று காணொளி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலமாக அறிவிக்கப்பட்டது. லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் முன்னாள் மாவட்ட கால்நடைத் துறை அதிகாரி பி.என். ஷர்மாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 1.5 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
லல்லுபிரசாத் யாதவிற்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பின் படி அவரது எம்.பி பதவி பறிபோவது உறுதியாகியுள்ளது. |
|||||
by Swathi on 03 Oct 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|