பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் வெளியேறி இருப்பது, பொருந்தாத காதலர்கள் இருவர் விவாகரத்து செய்வதை போன்று உள்ளதாக ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கிண்டல் செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் மேலும் கூறும் போது, நரேந்திர மோடிக்கு ஆதரவு காட்டி, ஆர்எஸ்எஸ் இயக்கம் அத்வானியை ஓரங்கட்டியது. மோடி முன்னிறுத்தப்பட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறி விடுவோம் என்று மிரட்டல் விடுக்குமாறு ஐக்கிய ஜனதா தளத்திடம் அத்வானி கேட்டுக் கொண்டார். ஆனால் பாஜகவில் மோடியே முன்னிறுத்தப்பட்டார். இதனால் சரத் யாதவும், பிகார் முதல்வர் நிதீஷ் குமாரும் அத்வானிக்கு ஆதரவாக உடன் கட்டை ஏறிவிட்டனர் என லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.
|