LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

மொழிப் பயிற்சி - 11 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! - கவிக்கோ ஞானச்செல்வன்

 

பேசும்போதும், எழுதும்போதும் சொற்றொடர்கள் அமைப்பதில் அத்து எனும் சாரியைக்கு ஒரு சிறப்பிடம் உண்டு.
ஒரு திருமடத்தின் தலைவரைக் (அதிபர்) காண புலவர் பலர் வந்தனர். இறுதியாக வந்தவர் சோழநாட்டின் கடைமடைப் பகுதியைச் சார்ந்தவர். மடாதிபதி சற்றே கேலியாக அந்தப் புலவரை நோக்கி ""வாரும் கடை மடையரே'' என்றார். புலவர் என்ன ஒன்றும் அறியாதவரா? ""வந்தோம் மடத் தலைவரே'' என்று திருப்பியடித்தார்.
இப்படி இருபொருள் தோன்றத் தமிழில் நிரம்பச் சொல்லலாம்.
மடத்தலைவர் என்று சொல்லாமல், மடத்துத் தலைவரே என்று சொல்லியிருந்தால் பொருள் நேராக அமையும். இதற்கு அத்து என்ற சாரியைப் பயன்படுகிறது. சார்ந்து வருவது சாரியை. இதற்குத் தனியே பொருள் இல்லை.
மனம் என்பது தனித் தமிழ்ச் சொல். (மனசு, மனது வேறு ). இச்சொல்லுடன் "இல்' உருவு சேர்த்தால் மனத்தில் என்று எழுத வேண்டும். ஏன்? மனம் + அத்து + இல் என்று இடையில் அத்துச் சாரியை சேர்க்க வேண்டும் என்பது இலக்கண விதி.
குளம் + இல் என்பதும் குளத்தில் (குளம் + அத்து + இல்) என்றுதானே சொல்லப்படுகிறது. பணத்தில் பாதி என்று சொல்லுகிறோம். இங்கு பணம் என்ற சொல்லுடன் அத்துச் சாரியை இணைந்துள்ளது. ஆக, தமிழில் "அம்' என்று முடியும் பல சொற்களுடன் அத்துச் சாரியைச் சேர்த்தல் என்பது வழக்கத்தில் உள்ள இலக்கண விதியே.
இன்னும் வேண்டுமா? குலம் - குலத்தில், நலம் - நலத்தில், இனம் - இனத்தில், வலம் - வலத்தில். இப்படி எல்லாவற்றிலும் "இல்' உருபு சேர்த்தால் "அத்து' சேர்வதைப் பார்த்தோம். அத்துச் சாரியை இல் உருபோடு மட்டுமே வருவதா? இல்லை. உடன் எனும் உருபு சேர்த்துப் பாருங்கள். நலம் + உடன் = நலத்துடன், சினம் +உடன் = சினத்துடன் இன்னும் முன் கூறிய பணம், குணம், மனம், மணம் எச்சொல்லோடும் உடன் சேரும்போது அத்துச் சாரியைத் தோன்றும். அத்துச் சாரியையின் அவசியத்தை உணர இவை போதும்.
சொற்றொடர் முடித்தல்
வாக்கியங்களை முடிக்கும்போது ஒருமை, பன்மை மாறாதிருத்தல் வேண்டும் என்பதோடு ஐம்பால் வினைமுடிவுகள் பொருத்தமாக அமைத்தல் வேண்டும்.
எடுத்துக்காட்டாக:
அவன் நல்லவன் அல்லன் (ஆண்பால்)
அவள் நல்லவள் அல்லள் (பெண்பால்)
அவர் நல்லவர் அல்லர் (பலர் பால்)
அது நல்லது அன்று (ஒன்றன் பால்)
அவை நல்லவை அல்ல (பலவின் பால்)
காலப்போக்கில் இந்த இலக்கணத்தைப் பலரும் பொருட்படுத்துவதில்லை. அல்லது மறந்து போயினர் என்று சொல்லலாம். எல்லா பால், இடங்களிலும் நாம் இப்போது பயன்படுத்தும் ஒரே சொல் அல்ல என்பது மட்டுமே. நானல்ல, அவரல்ல, அதுவல்ல, அவையல்ல என்றுதான் பேசுகிறோம், எழுதுகிறோம்.
இல்லை, அல்ல
இன்மைப் பொருளை உணர்த்த மட்டுமே இல்லை எனும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பது விதி. புத்தகம் மேசை மீது இல்லை- இது சரியான வாக்கியம். "நான் அப்படிப்பட்ட மனிதன் இல்லை' - இது பிழையுடைய வாக்கியம். இது "நான் அப்படிப்பட்ட மனிதன் அல்லன்' என்று இருந்தால் சரியாகும். "மரத்தில் காய்கள் இல்லை', "வயிற்றுக்குச் சோறு இல்லை'என்பன போன்று இன்மைப் பொருளை உணர்த்தவே இல்லை எனும் சொல் பயன்பட வேண்டும். "இன்று பள்ளி இல்லை' என்பது பிழை. "இன்று பள்ளிக்கு விடுமுறை' என்பதே சரியானது.
"அல்லன்', "அல்லள்' என்பனபோல் "அல்லை' எனும் சொல்லும் உயர்திணைப் பயன்பாட்டில் நம் இலக்கியங்களில் காண முடியும். மந்தரையிடம் கைகேயி உரைக்கின்றாள்:
"" எனக்கு நல்லையும் அல்லை என்மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை தருமமே நோக்கில் உனக்கு நல்லையும் அல்லை'' என்று முன்னிலை இடத்தில் வந்து நல்லவள் ஆகமாட்டாய் எனப் பொருள் தந்தது.

 

பேசும்போதும், எழுதும்போதும் சொற்றொடர்கள் அமைப்பதில் அத்து எனும் சாரியைக்கு ஒரு சிறப்பிடம் உண்டு.

 

ஒரு திருமடத்தின் தலைவரைக் (அதிபர்) காண புலவர் பலர் வந்தனர். இறுதியாக வந்தவர் சோழநாட்டின் கடைமடைப் பகுதியைச் சார்ந்தவர். மடாதிபதி சற்றே கேலியாக அந்தப் புலவரை நோக்கி ""வாரும் கடை மடையரே'' என்றார். புலவர் என்ன ஒன்றும் அறியாதவரா? ""வந்தோம் மடத் தலைவரே'' என்று திருப்பியடித்தார்.

 

இப்படி இருபொருள் தோன்றத் தமிழில் நிரம்பச் சொல்லலாம்.

 

மடத்தலைவர் என்று சொல்லாமல், மடத்துத் தலைவரே என்று சொல்லியிருந்தால் பொருள் நேராக அமையும். இதற்கு அத்து என்ற சாரியைப் பயன்படுகிறது. சார்ந்து வருவது சாரியை. இதற்குத் தனியே பொருள் இல்லை.

 

மனம் என்பது தனித் தமிழ்ச் சொல். (மனசு, மனது வேறு ). இச்சொல்லுடன் "இல்' உருவு சேர்த்தால் மனத்தில் என்று எழுத வேண்டும். ஏன்? மனம் + அத்து + இல் என்று இடையில் அத்துச் சாரியை சேர்க்க வேண்டும் என்பது இலக்கண விதி.

 

குளம் + இல் என்பதும் குளத்தில் (குளம் + அத்து + இல்) என்றுதானே சொல்லப்படுகிறது. பணத்தில் பாதி என்று சொல்லுகிறோம். இங்கு பணம் என்ற சொல்லுடன் அத்துச் சாரியை இணைந்துள்ளது. ஆக, தமிழில் "அம்' என்று முடியும் பல சொற்களுடன் அத்துச் சாரியைச் சேர்த்தல் என்பது வழக்கத்தில் உள்ள இலக்கண விதியே.

 

இன்னும் வேண்டுமா? குலம் - குலத்தில், நலம் - நலத்தில், இனம் - இனத்தில், வலம் - வலத்தில். இப்படி எல்லாவற்றிலும் "இல்' உருபு சேர்த்தால் "அத்து' சேர்வதைப் பார்த்தோம். அத்துச் சாரியை இல் உருபோடு மட்டுமே வருவதா? இல்லை. உடன் எனும் உருபு சேர்த்துப் பாருங்கள். நலம் + உடன் = நலத்துடன், சினம் +உடன் = சினத்துடன் இன்னும் முன் கூறிய பணம், குணம், மனம், மணம் எச்சொல்லோடும் உடன் சேரும்போது அத்துச் சாரியைத் தோன்றும். அத்துச் சாரியையின் அவசியத்தை உணர இவை போதும்.

 

சொற்றொடர் முடித்தல்

 

வாக்கியங்களை முடிக்கும்போது ஒருமை, பன்மை மாறாதிருத்தல் வேண்டும் என்பதோடு ஐம்பால் வினைமுடிவுகள் பொருத்தமாக அமைத்தல் வேண்டும்.

 

எடுத்துக்காட்டாக:

 

அவன் நல்லவன் அல்லன் (ஆண்பால்)

 

அவள் நல்லவள் அல்லள் (பெண்பால்)

 

அவர் நல்லவர் அல்லர் (பலர் பால்)

 

அது நல்லது அன்று (ஒன்றன் பால்)

 

அவை நல்லவை அல்ல (பலவின் பால்)

 

காலப்போக்கில் இந்த இலக்கணத்தைப் பலரும் பொருட்படுத்துவதில்லை. அல்லது மறந்து போயினர் என்று சொல்லலாம். எல்லா பால், இடங்களிலும் நாம் இப்போது பயன்படுத்தும் ஒரே சொல் அல்ல என்பது மட்டுமே. நானல்ல, அவரல்ல, அதுவல்ல, அவையல்ல என்றுதான் பேசுகிறோம், எழுதுகிறோம்.

 

இல்லை, அல்ல

 

இன்மைப் பொருளை உணர்த்த மட்டுமே இல்லை எனும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பது விதி. புத்தகம் மேசை மீது இல்லை- இது சரியான வாக்கியம். "நான் அப்படிப்பட்ட மனிதன் இல்லை' - இது பிழையுடைய வாக்கியம். இது "நான் அப்படிப்பட்ட மனிதன் அல்லன்' என்று இருந்தால் சரியாகும். "மரத்தில் காய்கள் இல்லை', "வயிற்றுக்குச் சோறு இல்லை'என்பன போன்று இன்மைப் பொருளை உணர்த்தவே இல்லை எனும் சொல் பயன்பட வேண்டும். "இன்று பள்ளி இல்லை' என்பது பிழை. "இன்று பள்ளிக்கு விடுமுறை' என்பதே சரியானது.

 

"அல்லன்', "அல்லள்' என்பனபோல் "அல்லை' எனும் சொல்லும் உயர்திணைப் பயன்பாட்டில் நம் இலக்கியங்களில் காண முடியும். மந்தரையிடம் கைகேயி உரைக்கின்றாள்:

 

"" எனக்கு நல்லையும் அல்லை என்மகன் பரதன்

 

தனக்கு நல்லையும் அல்லை தருமமே நோக்கில் உனக்கு நல்லையும் அல்லை'' என்று முன்னிலை இடத்தில் வந்து நல்லவள் ஆகமாட்டாய் எனப் பொருள் தந்தது.

 

by Swathi   on 09 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.