LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

மொழிப் பயிற்சி – 19 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

 

ஒரு சிறிய சொல்லாய்வு செய்வோமா? "இதற்காக ரொம்பவும் மெனக்கெட்டு அலைந்தேன்?' இச்சொற்றொடரில் மெனக்கெட்டு என்பதன் பொருள் என்ன? மனைக்கட்டு நமக்குத் தெரியும். மெனக்கெட்டு? ஒருகால் இப்படியிருக்குமோ? எப்படி? மனம் கெட்டு அலைந்தேன் என்றிருக்கலாமோ? ஒரு வேலையை முடிப்பதற்காக அதே சிந்தையாக அலைதலை மனம் கெட்டு அலைந்தேன் என்று சொல்லுவது சரிதானே?
ஏனிந்தப் பிழைகள்?
வழிபாடு வேறு, வழிப்பாட்டு வேறு. வழிப்பாட்டுக் கூட்டத்தில் அமைதி நிலவியது என்றால் சரியான சொற்றொடர். வழிபாட்டுக் கூட்டத்தில் என்றெழுதினால், வழிச் செல்வோர் பாடும் பாட்டு என்று பொருள் தருமே. அதாவது வழிநடைப் பாட்டு என்பதாம் இது. வழிபாட்டை வழிப்பாட்டு ஆக்க வேண்டா.
தமிழ் கற்றவரே சிலர் தம் ஏடுகளில் நாநிலம் என்றெழுதுகிறார்கள். இதன்பொருள் நாக்கு ஆகிய நிலம் என்பதன்றோ? முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனும் நால்வகை நிலங்களினாலான உலகத்தை நானிலம் எனல் வேண்டும். (நான்கு+ நிலம்= நானிலம்). இவ்வாறே தன்நலம் என்றெழுதுகிறார்கள். தன் + நலம் = தன்னலம் என்றாகும். தம் + நலம் = தந்நலம் என்றாகும். இரண்டுமின்றி தன் நலம் எனல் விட்டிசைக்கிறது. இவ்வாறே என்+ தன் = என்றன் எனவும், எம்+ தம் = எந்தம் எனவும் ஆகுதல் இலக்கணம். எந்தன் என்றெழுதுவது பிழையாகும்.
தேசீயம், ஆன்மீகம், காந்தீயம் என்றெல்லாம் எழுதுகிறார்களே? சரியா? இல்லை. இவற்றை நெடில் போட்டு நீட்டாமல் தேசியம், காந்தியம், ஆன்மிகம் என்றே எழுதிடல் வேண்டும். இஸம் - தமிழில் இயம் என்றாகும். மார்க்சிஸம் - மார்க்சியம் என்றாகும். தேசியம், காந்தியம் இவற்றுள்ளுள் இயம் இருத்தல் காண்க.
தன்வினை செய்வினையா?
திருவாரூரிலிருந்து தமிழாசிரிய நண்பரொருவர் தொலைப் பேசி வழியாக வினவினார்: ""ஐயா, தன்வினை, பிறவினை என்றும், செய்வினை செயப்பாட்டு வினையென்றும் இலக்கணம் கற்பிக்கிறோமே, இவற்றுள் தன் வினையும், செய்வினையும் ஒன்றுபோல்தானே உள்ளன? இவற்றிடையே வேறுபாடு என்ன?''
இஃது அறிவினாவா? அறியா வினாவா? என்று நம்மால் சொல்ல இயலவில்லை. மக்களுக்குத் தெரிந்ததெல்லாம் தன்வினை தன்னைச் சுடும் என்பதும், யாரோ செய்வினை செய்துவிட்டார்கள் என்பதும் அல்லவா? தன்வினையாவது? செய்வினையாவது? எல்லாம் உங்கள் வினை என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளுதல் முறையா?
செயப்பாட்டு வினை வடிவம் என்பது தமிழ்மொழிக்குப் புதியதே ஆகும். பள்ளிப் பாட நூலில் செய்வினை, செயப்பாட்டு வினை என்று வந்தாலும் அது ஆங்கில மொழியின் தாக்கத்தால் விளைந்ததே. சற்றே விளக்கமாக அறிவோமா?
திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். இது செய்வினை வாக்கியம். திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது செயப்பாட்டு வினை வாக்கியம்.
இராசராசச் சோழன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினான். இது தன்வினை வாக்கியம். இராசராசச் சோழன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டுவித்தான் - இது பிறவினை வாக்கியம். செய்வினை வாக்கியமும், தன்வினை வாக்கியமும் அமைப்பில் ஒன்றுபோலவே இருக்கும். ஆனால் செய்வினையை செயப்பாட்டுவினையாக மாற்றுகிறபோது படு - பட்டது
என்ற துணைவினை சேர்கிறது. எழுவாய் இருந்த இடத்தில் செயப்படுபொருள் வந்துவிடுகிறது. ஆல் எனும் உருபு (ஒட்டுச் சொல்) இணைகிறது.
தன்வினை வாக்கியத்தைப் பிறவினையாக மாற்றும்போது வி, பி என்னும் இரண்டு எழுத்துகளுள் ஒன்று ஒட்டிக் கொள்கின்றது.
திருமுழுக்குச் செய்வித்தனர்.
செய்தனர் - தன்வினை, செய்வித்தனர் - பிறவினை (வி சேர்ந்தது)
பாடம் படிப்பித்தனர். படித்தனர் - தன்வினை
பிடிப்பித்தனர் - பிறவினை (பி சேர்ந்தது)
செய்வினை வாக்கியத்தை செயப்பாட்டு வினையாக மாற்றும் போது அத்தொடரின் பொருள் மாறாது. ஆனால் தன்வினை வாக்கியத்தைப் பிறவினையாக மாற்றும் போது அந்தத் தொடரின் பொருளே மாறிவிடும்.
திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்றாலும், திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது என்றாலும் பொருள் ஒன்றே.
இராசராசன் பெரிய கோயிலைக் கட்டினான் எனும் தன்வினை வாக்கியத்தை, இராசராசன் பெரிய கோவிலைக் கட்டுவித்தான் என மாற்றும்போது, இராசராசன் அல்லாத கொத்தனார், சித்தாள்கள் வாக்கியத்தில் நுழைந்துவிடுகிறார்கள். பொருளில் பெரிய மாற்றம் உண்டாகிறது.

 

ஒரு சிறிய சொல்லாய்வு செய்வோமா? "இதற்காக ரொம்பவும் மெனக்கெட்டு அலைந்தேன்?' இச்சொற்றொடரில் மெனக்கெட்டு என்பதன் பொருள் என்ன? மனைக்கட்டு நமக்குத் தெரியும். மெனக்கெட்டு? ஒருகால் இப்படியிருக்குமோ? எப்படி? மனம் கெட்டு அலைந்தேன் என்றிருக்கலாமோ? ஒரு வேலையை முடிப்பதற்காக அதே சிந்தையாக அலைதலை மனம் கெட்டு அலைந்தேன் என்று சொல்லுவது சரிதானே?

 

ஏனிந்தப் பிழைகள்?

 

வழிபாடு வேறு, வழிப்பாட்டு வேறு. வழிப்பாட்டுக் கூட்டத்தில் அமைதி நிலவியது என்றால் சரியான சொற்றொடர். வழிபாட்டுக் கூட்டத்தில் என்றெழுதினால், வழிச் செல்வோர் பாடும் பாட்டு என்று பொருள் தருமே. அதாவது வழிநடைப் பாட்டு என்பதாம் இது. வழிபாட்டை வழிப்பாட்டு ஆக்க வேண்டா.

 

தமிழ் கற்றவரே சிலர் தம் ஏடுகளில் நாநிலம் என்றெழுதுகிறார்கள். இதன்பொருள் நாக்கு ஆகிய நிலம் என்பதன்றோ? முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனும் நால்வகை நிலங்களினாலான உலகத்தை நானிலம் எனல் வேண்டும். (நான்கு+ நிலம்= நானிலம்). இவ்வாறே தன்நலம் என்றெழுதுகிறார்கள். தன் + நலம் = தன்னலம் என்றாகும். தம் + நலம் = தந்நலம் என்றாகும். இரண்டுமின்றி தன் நலம் எனல் விட்டிசைக்கிறது. இவ்வாறே என்+ தன் = என்றன் எனவும், எம்+ தம் = எந்தம் எனவும் ஆகுதல் இலக்கணம். எந்தன் என்றெழுதுவது பிழையாகும்.

 

தேசீயம், ஆன்மீகம், காந்தீயம் என்றெல்லாம் எழுதுகிறார்களே? சரியா? இல்லை. இவற்றை நெடில் போட்டு நீட்டாமல் தேசியம், காந்தியம், ஆன்மிகம் என்றே எழுதிடல் வேண்டும். இஸம் - தமிழில் இயம் என்றாகும். மார்க்சிஸம் - மார்க்சியம் என்றாகும். தேசியம், காந்தியம் இவற்றுள்ளுள் இயம் இருத்தல் காண்க.

 

தன்வினை செய்வினையா?

 

திருவாரூரிலிருந்து தமிழாசிரிய நண்பரொருவர் தொலைப் பேசி வழியாக வினவினார்: ""ஐயா, தன்வினை, பிறவினை என்றும், செய்வினை செயப்பாட்டு வினையென்றும் இலக்கணம் கற்பிக்கிறோமே, இவற்றுள் தன் வினையும், செய்வினையும் ஒன்றுபோல்தானே உள்ளன? இவற்றிடையே வேறுபாடு என்ன?''

 

இஃது அறிவினாவா? அறியா வினாவா? என்று நம்மால் சொல்ல இயலவில்லை. மக்களுக்குத் தெரிந்ததெல்லாம் தன்வினை தன்னைச் சுடும் என்பதும், யாரோ செய்வினை செய்துவிட்டார்கள் என்பதும் அல்லவா? தன்வினையாவது? செய்வினையாவது? எல்லாம் உங்கள் வினை என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளுதல் முறையா?

 

செயப்பாட்டு வினை வடிவம் என்பது தமிழ்மொழிக்குப் புதியதே ஆகும். பள்ளிப் பாட நூலில் செய்வினை, செயப்பாட்டு வினை என்று வந்தாலும் அது ஆங்கில மொழியின் தாக்கத்தால் விளைந்ததே. சற்றே விளக்கமாக அறிவோமா?

 

திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். இது செய்வினை வாக்கியம். திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது செயப்பாட்டு வினை வாக்கியம்.

 

இராசராசச் சோழன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினான். இது தன்வினை வாக்கியம். இராசராசச் சோழன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டுவித்தான் - இது பிறவினை வாக்கியம். செய்வினை வாக்கியமும், தன்வினை வாக்கியமும் அமைப்பில் ஒன்றுபோலவே இருக்கும். ஆனால் செய்வினையை செயப்பாட்டுவினையாக மாற்றுகிறபோது படு - பட்டது

 

என்ற துணைவினை சேர்கிறது. எழுவாய் இருந்த இடத்தில் செயப்படுபொருள் வந்துவிடுகிறது. ஆல் எனும் உருபு (ஒட்டுச் சொல்) இணைகிறது.

 

தன்வினை வாக்கியத்தைப் பிறவினையாக மாற்றும்போது வி, பி என்னும் இரண்டு எழுத்துகளுள் ஒன்று ஒட்டிக் கொள்கின்றது.

 

திருமுழுக்குச் செய்வித்தனர்.

 

செய்தனர் - தன்வினை, செய்வித்தனர் - பிறவினை (வி சேர்ந்தது)

 

பாடம் படிப்பித்தனர். படித்தனர் - தன்வினை

 

பிடிப்பித்தனர் - பிறவினை (பி சேர்ந்தது)

 

செய்வினை வாக்கியத்தை செயப்பாட்டு வினையாக மாற்றும் போது அத்தொடரின் பொருள் மாறாது. ஆனால் தன்வினை வாக்கியத்தைப் பிறவினையாக மாற்றும் போது அந்தத் தொடரின் பொருளே மாறிவிடும்.

 

திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்றாலும், திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது என்றாலும் பொருள் ஒன்றே.

 

இராசராசன் பெரிய கோயிலைக் கட்டினான் எனும் தன்வினை வாக்கியத்தை, இராசராசன் பெரிய கோவிலைக் கட்டுவித்தான் என மாற்றும்போது, இராசராசன் அல்லாத கொத்தனார், சித்தாள்கள் வாக்கியத்தில் நுழைந்துவிடுகிறார்கள். பொருளில் பெரிய மாற்றம் உண்டாகிறது.

 

by Swathi   on 09 Apr 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
20-Sep-2016 13:22:20 குகன் said : Report Abuse
நீங்களும் வழிபாடு,வழிப்பாட்டு என்பதை தவறாக எழுதிவட்டீர்கள்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.