LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

மொழிப் பயிற்சி – 63 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

 

காலாவதியாகிவிட்டது என்பதைக் காலம் முடிந்துவிட்டது என்று கூறலாமே?
யாப்பு இலக்கணக் குறிப்புகளும் ஒன்றிரண்டு அவ்வப்போது எழுதி வருகிறோம். முழுமையாக எழுத வேண்டும் என அன்பர் சிலர் வேண்டுகோள் விடுக்கின்றார்கள். அப்படி விளக்கமாக எழுதினால் இத்தொடர், இலக்கண வகுப்பாக மாறிவிடும். ஆனாலும் சில செய்திகளைச் சொல்லாமல் விட இயலவில்லை.
வெண்பா எழுதுவது மிகவும் கடினம். அப்பழுக்கில்லாத இலக்கணம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஒரு சிற்றிதழில் சிறந்த வெண்பா எனத் தேர்வு பெற்ற ஒன்றில்,
சமையத்திற் கேற்பச் சமைத்தே - நமது
இமயத்தைச் சாய்த்தார்....
என்பதைக் கண்ணுற்றோம். இதில் நமது எனும் தனிச் சொல்லில் "து' வருவதைப் பொருள் விளங்க நமது இமயத்தை எனப் பிரித்துள்ளார். நம+து (த் + உ) இமயத்தை (த்+இ=தி) நமதிமயத்தை (உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்).
"நம' என்ற தனிச்சொல் ஓரசையாகும் (நிரை). ஓரசை, வெண்பாவின் இறுதியில் வரலாம் (அசைச்சீர்) இங்கே தனிச்சொல் ஓரசையாக நின்று யாப்பு சிதைவுற்றது. தளை தட்டிவிட்டது. இவ்வெண்பா பிழையான வெண்பாவாம். "நமதாம்' என்று தனிச் சொல்லை மாற்றிவிட்டால் யாப்பு சரியாகும்.
தமிழில் பிறமொழியை அளவின்றிக் கலந்து பேசுவதும் எழுதுவதும் பிழையன்றோ? அதனால்தான் நாம் பல இடங்களில் கலப்படக் கொடுமைகளைச் சாடி வருகிறோம்.
ஒரு தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் முக்கியப்புள்ளி ஒருவர் சொன்னார்: ""நான் சமீபத்துல பாத்துண்டு வந்ததுல ஒன் எய்ட்டியைவிட ஒரு ரிச்சான மூவி இல்லை'' எப்படி இருக்கிறது தமிழ்? நூற்றெண்பது (180) என்னும் தமிழ்ப்பட பெயரைக் கூட ஒன் எய்ட்டி ஆக்கிவிட்டார். இப்படித்தான் இன்று பலர் பேசுகிறார்கள். ஐம்பது, நூறு ஆண்டுகளில் பின் தமிழ் எப்படியிருக்குமோ? (இழுக்குமோ?)
முதலில் நம் வீட்டுக் குழந்தைகள் தமிழில் பேசுகிறார்களா? எப்படிப் பேசுகிறார்கள்? நாம் கவனிக்க வேண்டாமா? இவர்கள்தாமே நாளைய குடிமக்கள் - தமிழர்கள்.
நம் அருமை வாய்ந்த தமிழ்ப் பெயர்களையே குழந்தைகள் மறந்துவிட்டார்களே. வாழைப்பழம் - தெரியாது; பனானா - தெரியும். மாம்பழம் தெரியாது; மேங்கோ தெரியும். வேப்பிலை தெரியாது, நீம் தெரியும். சந்தனம் தெரியாது, சாண்டல் தெரியும். ஞாயிற்றுக்கிழமை தெரியாது; சண்டே தெரியும். மாலை ஐந்து மணி தெரியாது - ஈவினிங் ஃபைவ் ஓ கிளாக் தெரியும். இவ்வளவு ஏன்? நம் வீட்டுச் சோற்றையும் ரைஸ் ஆக்கிப் பழக்கிவிட்டோமே!
தயிர்ச்சோறு - கர்டு ரைசாம்; இன்னும் லைம் ரைஸ், ஒயிட் ரைஸ் என்றுதானே பழக்கப்படுத்தியுள்ளோம். உணவு விடுதியில் பரிமாறுபவர் கூட அப்படித்தானே சொல்லுகிறார். இந்த நிலை மாறுமா? ஏக்கப் பெருமூச்சுதான் விடையா?
தூய தமிழ்ச் சொற்கள்:
நம் மக்களின் பேச்சு வழக்கில் பயன்பட்டு வரும் தூய தமிழ்ச் சொற்களை நினைவு கூர்வோம். இவற்றின் பயன்பாடு புதிதாகச் சிலருக்குப் பயன்படும்.
பரிதி, ஞாயிறு (சூரியன்), ஞாலம், உலகம் (லோகம்),
கருவூலம் (பொக்கிஷம்), கருவறை - (கர்ப்பக்கிருகம்), இழப்பு (நஷ்டம்), ஆக்கம் (இலாபம்), ஊதியம் - (சம்பளம்),
ஆகூழ் - (அதிர்ஷ்டம்), போகூழ் - (துரதிர்ஷ்டம்)
இவற்றுள் இலாபத்தை ஆக்கம் என்றது எவ்வாறெனில்
"ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்'
என்னும் திருக்குறளின் துணை கொண்டேயாம்.
"இலாபத்தைக் கருதி போட்ட முதலை இழந்துவிடும் செயலை அறிவுடையார் ஊக்கப்படுத்தமாட்டார்' என்பது இதன் பொருள்.
ஆகூழ், போகூழ் என்பனவும் திருக்குறளில் இருந்து எடுத்தவையே.
"ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி'
தமிழ்ச் சொல்லாகவே நாம் வழங்கும் சில சொற்கள் சரியாக அமையாது இருக்கின்றன. "உடம்பு இப்ப எப்படியிருக்கு?' (நலமா?)
இதற்கு, "தேவலாம்' என்று பதில் சொல்லுகிறோம்.
தாழ்வில்லை அல்லது தாழ்விலை என்று பதில் சொன்னால் பொருள் பொருந்துகிறது. தாழ்விலை என்றால் குறைந்த விலை என்றும் பொருள் கொள்ள இடமுண்டு. அதனால் "தாழ்வில்லை' என்றே சொல்வோமே.
"பரவாயில்லை' என்பது மற்றொரு சொல். (இதை ஒரு பாடகர் பருவாயில்லை என்று பாடினார்) இதன் பொருள் என்ன? "படம் எப்படி இருக்கிறது? என்றால், "பரவாயில்லை' என்று பதில் வருகிறது. இச்சொல்லுக்கு, ஏற்கலாம் என்றோ, தாழ்வில்லை என்றோ சொல்லலாமே!
நிச்சயம் என்பதை உறுதியாக என்றுரைக்கலாம். மருந்து காலாவதியாகிவிட்டது என்பதைக் காலம் முடிந்துவிட்டது என்று கூறலாமே? "எக்ஸ்பியரி' என்பதைக் காலமுடிவு எனலாம்.

 

காலாவதியாகிவிட்டது என்பதைக் காலம் முடிந்துவிட்டது என்று கூறலாமே?

 

யாப்பு இலக்கணக் குறிப்புகளும் ஒன்றிரண்டு அவ்வப்போது எழுதி வருகிறோம். முழுமையாக எழுத வேண்டும் என அன்பர் சிலர் வேண்டுகோள் விடுக்கின்றார்கள். அப்படி விளக்கமாக எழுதினால் இத்தொடர், இலக்கண வகுப்பாக மாறிவிடும். ஆனாலும் சில செய்திகளைச் சொல்லாமல் விட இயலவில்லை.

 

வெண்பா எழுதுவது மிகவும் கடினம். அப்பழுக்கில்லாத இலக்கணம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஒரு சிற்றிதழில் சிறந்த வெண்பா எனத் தேர்வு பெற்ற ஒன்றில்,

 

சமையத்திற் கேற்பச் சமைத்தே - நமது

 

இமயத்தைச் சாய்த்தார்....

 

என்பதைக் கண்ணுற்றோம். இதில் நமது எனும் தனிச் சொல்லில் "து' வருவதைப் பொருள் விளங்க நமது இமயத்தை எனப் பிரித்துள்ளார். நம+து (த் + உ) இமயத்தை (த்+இ=தி) நமதிமயத்தை (உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்).

 

"நம' என்ற தனிச்சொல் ஓரசையாகும் (நிரை). ஓரசை, வெண்பாவின் இறுதியில் வரலாம் (அசைச்சீர்) இங்கே தனிச்சொல் ஓரசையாக நின்று யாப்பு சிதைவுற்றது. தளை தட்டிவிட்டது. இவ்வெண்பா பிழையான வெண்பாவாம். "நமதாம்' என்று தனிச் சொல்லை மாற்றிவிட்டால் யாப்பு சரியாகும்.

 

தமிழில் பிறமொழியை அளவின்றிக் கலந்து பேசுவதும் எழுதுவதும் பிழையன்றோ? அதனால்தான் நாம் பல இடங்களில் கலப்படக் கொடுமைகளைச் சாடி வருகிறோம்.

 

ஒரு தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் முக்கியப்புள்ளி ஒருவர் சொன்னார்: ""நான் சமீபத்துல பாத்துண்டு வந்ததுல ஒன் எய்ட்டியைவிட ஒரு ரிச்சான மூவி இல்லை'' எப்படி இருக்கிறது தமிழ்? நூற்றெண்பது (180) என்னும் தமிழ்ப்பட பெயரைக் கூட ஒன் எய்ட்டி ஆக்கிவிட்டார். இப்படித்தான் இன்று பலர் பேசுகிறார்கள். ஐம்பது, நூறு ஆண்டுகளில் பின் தமிழ் எப்படியிருக்குமோ? (இழுக்குமோ?)

 

முதலில் நம் வீட்டுக் குழந்தைகள் தமிழில் பேசுகிறார்களா? எப்படிப் பேசுகிறார்கள்? நாம் கவனிக்க வேண்டாமா? இவர்கள்தாமே நாளைய குடிமக்கள் - தமிழர்கள்.

 

நம் அருமை வாய்ந்த தமிழ்ப் பெயர்களையே குழந்தைகள் மறந்துவிட்டார்களே. வாழைப்பழம் - தெரியாது; பனானா - தெரியும். மாம்பழம் தெரியாது; மேங்கோ தெரியும். வேப்பிலை தெரியாது, நீம் தெரியும். சந்தனம் தெரியாது, சாண்டல் தெரியும். ஞாயிற்றுக்கிழமை தெரியாது; சண்டே தெரியும். மாலை ஐந்து மணி தெரியாது - ஈவினிங் ஃபைவ் ஓ கிளாக் தெரியும். இவ்வளவு ஏன்? நம் வீட்டுச் சோற்றையும் ரைஸ் ஆக்கிப் பழக்கிவிட்டோமே!

 

தயிர்ச்சோறு - கர்டு ரைசாம்; இன்னும் லைம் ரைஸ், ஒயிட் ரைஸ் என்றுதானே பழக்கப்படுத்தியுள்ளோம். உணவு விடுதியில் பரிமாறுபவர் கூட அப்படித்தானே சொல்லுகிறார். இந்த நிலை மாறுமா? ஏக்கப் பெருமூச்சுதான் விடையா?

 

தூய தமிழ்ச் சொற்கள்:

 

நம் மக்களின் பேச்சு வழக்கில் பயன்பட்டு வரும் தூய தமிழ்ச் சொற்களை நினைவு கூர்வோம். இவற்றின் பயன்பாடு புதிதாகச் சிலருக்குப் பயன்படும்.

 

பரிதி, ஞாயிறு (சூரியன்), ஞாலம், உலகம் (லோகம்),

 

கருவூலம் (பொக்கிஷம்), கருவறை - (கர்ப்பக்கிருகம்), இழப்பு (நஷ்டம்), ஆக்கம் (இலாபம்), ஊதியம் - (சம்பளம்),

 

ஆகூழ் - (அதிர்ஷ்டம்), போகூழ் - (துரதிர்ஷ்டம்)

 

இவற்றுள் இலாபத்தை ஆக்கம் என்றது எவ்வாறெனில்

 

"ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

 

ஊக்கார் அறிவுடை யார்'

 

என்னும் திருக்குறளின் துணை கொண்டேயாம்.

 

"இலாபத்தைக் கருதி போட்ட முதலை இழந்துவிடும் செயலை அறிவுடையார் ஊக்கப்படுத்தமாட்டார்' என்பது இதன் பொருள்.

 

ஆகூழ், போகூழ் என்பனவும் திருக்குறளில் இருந்து எடுத்தவையே.

 

"ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

 

போகூழால் தோன்றும் மடி'

 

தமிழ்ச் சொல்லாகவே நாம் வழங்கும் சில சொற்கள் சரியாக அமையாது இருக்கின்றன. "உடம்பு இப்ப எப்படியிருக்கு?' (நலமா?)

 

இதற்கு, "தேவலாம்' என்று பதில் சொல்லுகிறோம்.

 

தாழ்வில்லை அல்லது தாழ்விலை என்று பதில் சொன்னால் பொருள் பொருந்துகிறது. தாழ்விலை என்றால் குறைந்த விலை என்றும் பொருள் கொள்ள இடமுண்டு. அதனால் "தாழ்வில்லை' என்றே சொல்வோமே.

 

"பரவாயில்லை' என்பது மற்றொரு சொல். (இதை ஒரு பாடகர் பருவாயில்லை என்று பாடினார்) இதன் பொருள் என்ன? "படம் எப்படி இருக்கிறது? என்றால், "பரவாயில்லை' என்று பதில் வருகிறது. இச்சொல்லுக்கு, ஏற்கலாம் என்றோ, தாழ்வில்லை என்றோ சொல்லலாமே!

 

நிச்சயம் என்பதை உறுதியாக என்றுரைக்கலாம். மருந்து காலாவதியாகிவிட்டது என்பதைக் காலம் முடிந்துவிட்டது என்று கூறலாமே? "எக்ஸ்பியரி' என்பதைக் காலமுடிவு எனலாம்.

 

by Swathi   on 09 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.