|
|||||
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 35 புதிய விமான நிலையங்கள்! |
|||||
"கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 35 புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது" என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்து உள்ளார். சிக்கிம் மாநிலத்தில் 201 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 4500அடி உயரத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பசுமை விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த பின், அங்கு நடந்த கூடடத்தில் பேசியதாவது: இந்த விமான நிலையத்தோடு நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து கடந்த 2014 ம் ஆண்டு வரை 65 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் கூடுதலாக 35 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ஒரு விமான நிலையம் என்ற விகிதம் தற்போது ஆண்டுக்கு சராசரியாக 9 விமான நிலையங்கள் என்ற நிலைக்கு மாறியுள்ளது. 1970ம் ஆண்டுகளில் நாட்டில் 400 விமானங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், கடந்த ஒரு ஆண்டில் பல்வேறு விமான நிறுவனங்களால் 1000 புதிய விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. சாதாரண மனிதரும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு வடகிழக்கில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் இணைப்பதற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விமான நிலையம் தேவை என்ற சிக்கிமின் கனவு அடிக்கல் நாட்டப்பட்டு 9 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேற்றப்பட்டுள்ளது. பசுமை விமான நிலையம் என்பது பிற பகுதிகளை இணைப்பதற்காக மட்டும் அல்ல, சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியிலான விமான போக்குவரத்து அக்டோபர் 4ம் தேதியில் இருந்து தொடங்கும். |
|||||
by Mani Bharathi on 25 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|