LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 35 புதிய விமான நிலையங்கள்!

"கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 35 புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது" என்று பிரதமர்  நரேந்திரமோடி தெரிவித்து உள்ளார்.

சிக்கிம் மாநிலத்தில் 201 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 4500அடி உயரத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பசுமை விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி  திறந்து வைத்த பின், அங்கு நடந்த  கூடடத்தில்  பேசியதாவது:

இந்த விமான நிலையத்தோடு நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து கடந்த 2014 ம் ஆண்டு வரை 65 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் கூடுதலாக 35 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு ஒரு விமான நிலையம் என்ற விகிதம் தற்போது ஆண்டுக்கு சராசரியாக  9 விமான நிலையங்கள் என்ற நிலைக்கு மாறியுள்ளது.

1970ம் ஆண்டுகளில் நாட்டில் 400 விமானங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், கடந்த ஒரு ஆண்டில் பல்வேறு விமான நிறுவனங்களால் 1000 புதிய விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. சாதாரண மனிதரும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும்.

இந்தியா சுதந்திரம்  பெற்ற பிறகு வடகிழக்கில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் இணைப்பதற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

விமான நிலையம் தேவை என்ற சிக்கிமின் கனவு அடிக்கல் நாட்டப்பட்டு 9 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேற்றப்பட்டுள்ளது. பசுமை விமான நிலையம் என்பது பிற பகுதிகளை இணைப்பதற்காக மட்டும் அல்ல, சுற்றுலா மற்றும்  பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியிலான விமான போக்குவரத்து அக்டோபர் 4ம் தேதியில் இருந்து தொடங்கும்.

இவ்வாறு அவர் பேசினார். 

by Mani Bharathi   on 25 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.