இந்தியா, இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் டிராவாகும் நிலையில் உள்ளது. இங்கிலாந்து வீரர்கள் மிக நிதானமாக விளையாடி வருகின்றனர். இந்தியா , இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் நாக்பூரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டையும் இழந்து 330 ரன் எடுத்தது.இதனை அடுத்து இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது 3ம் நாள் ஆட்டநேர இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 297 ரன் எடுத்தது. நேற்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 326 ரன்களில் டிக்ளேர் செய்தது.இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டநேர இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்தது.கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி மேலும் விக்கெட் ஏதும் இழப்பின்றி மிக பொறுமையாக ஆடிவருகிறது.இதனால் கடைசி டெஸ்ட் டிராவாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
|