|
|||||
தமிழகம் முழுவதும் கோர்ட்டுகளில் வழக்கு விவரங்கள் அறிய எல்இடி டிவிகள்: அதிகாரிகள் தகவல்! |
|||||
தமிழகம் முழுவதும் கோர்ட்டுகளில் வழக்கு விவரங்களை அறிய எல்இடி டிவி கள் வைக்கப்பட்டு உள்ளன. இவை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கோர்ட்டுகளில் தங்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் நாளில் சம்பந்தப்பட்டவர்கள் மணிக்கணக்கில் கோர்ட்டு வளாகத்தில் காத்திருக்க வேண்டும். இது ஒருபுறம் என்றால் கோர்ட்டில் இருந்து விசாரணைக்கு அழைக்கும்போது, வளாகத்தில் இருந்தும் அழைக்கப்பட்டது தெரியாமல் வழக்கில் ஆஜராகாமல் வழக்கு தொடர்புடையவர்கள் சென்று விடுவதும் உண்டு. இதனால் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அன்றைய தினம் வரவில்லை என்று நினைத்து, அடுத்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள கோர்ட்டு்களில் அன்றைய தினம் எத்தனை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. விசாரணை நடந்து வரும் வழக்கின் விவரம் உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள ஒவ்வொரு வளாகத்திற்கு வெளியே சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பல லட்சம் செலவில் எல்இடி டிவிக்கள் வைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் கோர்ட்டிற்கு உள்ளேயும், வழக்கறிஞர்கள், நீதித்துறையை சேர்ந்தவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் எல்இடி டிவிக்கள் வைக்கப்பட்டு உள்ளன. இப்பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் அனைத்து கோர்ட்டுகளிலும் எல்இடி டிவிக்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். |
|||||
by Mani Bharathi on 29 Nov 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|