LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்புவோம் - கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி

 

இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புகள் உள்ளது என்றும், அதனைத் தான் எதிர்நோக்குவதாகவும் கனடாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்க உள்ள மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இதன்மூலம், இந்தியா - கனடா உறவுகளில் தூதரக ரீதியில் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் புதிய தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமராக வரவிருப்பவருமான மார்க் கார்னி, இந்தியா உடனான கனடாவின் வர்த்தக உறவைப் பன்முகப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். கனடாவின் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தலைமையின் கீழ் இந்தியா - கனடா இருதரப்பு உறவு மோசமடைந்த நிலையில், அதனை மீண்டும் கட்டியெழுப்ப விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.


59 வயதாகும் மார்க் கார்னி, கனடா நாட்டின் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், அந்நாட்டின் 24-ஆவது பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கனடா வங்கியின் முன்னாள் தலைவரான அவர் பிரதமராவது அந்நாட்டின் தற்போதைய நிதி சவால் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மார்க் கார்னி கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-ஆவது ஆளுநராகப் பணியாற்றியுள்ளார். மேலும், 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராக இருந்துள்ளார்.


அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து கனடா பொருளாதார ரீதியாகப் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. பரஸ்பர வரி விதிப்பை ஏப்ரல் 2 வரை மட்டும் ட்ரம்ப் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார். அதனால் கனடாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரி விதிப்பை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், புதிய பிரதமராகத் தேர்வாகியுள்ளார் மார்க் கார்னி. அவருக்கான சவால்கள் ஏராளமான சாவல்கள் காத்திருப்பதாக அந்நாட்டு அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.


தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற ஊடக உரையாடல் ஒன்றில், "கனடா மீதான அமெரிக்க வரிகள் பிரச்சினையைச் சமாளிக்க, ஒருமித்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் நமது வர்த்தக உறவுகள் பன்முகப்படுத்தப்படும். மேலும், இந்தியாவுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புகள் உள்ளன. வணிக உறவைச் சுற்றி பரஸ்பர மரியாதை உணர்வு இருக்க வேண்டும். நான் பிரதமரானால், அதைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை எதிர்பார்ப்பேன்" என்று மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.


தேர்தலுக்குப் பிறகான தனது வெற்றி உரையில், “டொனால்டு ட்ரம்ப் வர்த்தகப் போரைத் தொடரும் வரை அமெரிக்கப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை கனடா கைவிடாது. கனடா அரசு சரியான பாதையிலேயே செல்கிறது. நமக்கு அமெரிக்கா உரிய மரியாதை கொடுத்து நம்பகத்தன்மை வாய்ந்த, நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்யும் வரை நாம் விதித்த வரி அமலில்தான் இருக்கும்.” என்றார்.


அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வரி அச்சுறுத்தல்கள் இரு நாடுகளையும் பாதிக்கும் நிலையில், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் கனடாவின் எந்தவொரு முயற்சியையும் இந்தியா வரவேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்த இந்தியர்களுக்கு கனடா முக்கிய இடங்களில் ஒன்றாக இருப்பதால், கனடாவின் புதிய பிரதமருடன் குடியேற்றம் மற்றும் விசா விதிமுறைகள் தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும்.


கனடா பிரதமர் ட்ரூடோ, காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் கொலையில் இந்தியர்கள் ஈடுபட்டதாக 2023, ஜூன் 18 அன்று குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவு, முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பாதிக்கப்பட்டது. கனடாவின் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என இந்தியா தொடர்ந்து கூறி வந்தது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் பரஸ்பரம் தூதர்களை வெளியேற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

 

by hemavathi   on 10 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் காலதாமதம் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் காலதாமதம்
நாசாவில் பணியாற்றிய 23 பேர் பணி நீக்கம் நாசாவில் பணியாற்றிய 23 பேர் பணி நீக்கம்
சுனிதா வில்லியம்ஸ், வில்மோர்   மார்ச் 19  அல்லது  20 -ல்  பூமிக்குத் திரும்புகிறார்கள்  - நாசா அறிவிப்பு சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மார்ச் 19 அல்லது 20 -ல் பூமிக்குத் திரும்புகிறார்கள் - நாசா அறிவிப்பு
பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான  தங்கப் படிமம் பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கப் படிமம்
பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான  தங்கப் படிமம் பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கப் படிமம்
இந்தியா மீதான கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் - டொனால்ட் ட்ரம்ப் இந்தியா மீதான கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் - டொனால்ட் ட்ரம்ப்
கனடா மெக்சிகோ மீதான 25% இறக்குமதி வரி அமலுக்கு வந்தது- பதிலடி தருவோம் என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை! கனடா மெக்சிகோ மீதான 25% இறக்குமதி வரி அமலுக்கு வந்தது- பதிலடி தருவோம் என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை!
வெளிநாட்டுப் பணக்காரர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க தங்க அட்டை’ திட்டம் அறிமுகம் வெளிநாட்டுப் பணக்காரர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க தங்க அட்டை’ திட்டம் அறிமுகம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.