இன்றைய சூழ்நிலையில், நாம் ரேடியோ அலைகளை பயன்படுத்திதான்(WI-FI) இணையதளத்தை இயக்கி வருகிறோம். இந்த முறையில் ஒரு புதிய புதுமையை புகுத்திய சீன விஞ்ஞானிகள், ரேடியோ அலைகளுக்குப் பதிலாக, விளக்கொளி மூலம், இணையதளத்தை இயக்கி சாதனை புரிந்துள்ளனர்.
இந்த புதிய தொழிட்நுட்பம் குறித்து சீனாவின், ஷாங்காய் நகரத்தில் உள்ள, புடான் பல்கலைக் கழகத்தின், தகவல் தொழில்நுட்ப பேராசிரியரும், ஆய்வுக் குழுவின் தலைவருமான ஷீனான் கூறியதாவது, ரேடியோ அலைவரிசைக்குப் பதிலாக, எல்.இ.டி., பல்பை எரிய விடுவதன் மூலம், நான்கு கம்ப்யூட்டர்களில் இணையதளத்தை இயங்கச் செய்யலாம். மைக்ரோ சிப்பை விட, வினாடிக்கு 150 மெகா - பிட்ஸ் என்னும் வேகத்தில், பிராட்பேண்ட் வேகத்தில், இணையதளம் செயல்படும்.விளக்கை பயன்படுத்தி, இணையதளத்தை இயக்கச் செய்வதால், இதற்கு, லை-பை என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறிய அவர். லை-பையின், 10 மாதிரிகள் ஷாங்காய் நகரில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள, சீன சர்வதேச தொழில் கண்காட்சியில் இடம் பெரும் என அவர் தெரிவித்தார்.
|