LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்குக் காமராஜர் பெயர் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

 

திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்குக் காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகச் சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் க.அன்பழகன், நூலகங்கள் பற்றிப் பேசியதற்கு, பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

"திருச்சியில் ரூ.290 கோடியில் என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட மாபெரும் நூலகத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டிருப்பதாக, பொதுப் பணித்துறை 4 ஆண்டு சாதனைகள் தொடர்பான புத்தகத்தில் நான் பார்த்தேன். கருணாநிதியால், கோட்டூர்புரத்தில் திறந்து வைக்கப்பட்ட நூலகத்துக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று பெயர் சூட்டப்பட்டது.

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, ஒரே ஆண்டில் அதன் கட்டுமான பணிகள் முடிவுற்று, மாபெரும் சாதனை செய்யப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இதுவரை சுமார் 16 லட்சம் பொது மக்களும், மாணவர்களும் இந்த நூலகத்தால் பயனடைந்திருக்கிறார்கள். அண்மையில் கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டபோது, கோவையில் ஒரு மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என அறிவித்தேன். கடந்த நவம்பர் மாதம் அதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், திருச்சியில் அறிவிக்கப்பட்டிருக்கிற நூலகத்துக்குக் கடந்த மாதத்தில் நான் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இந்தப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கோவையில் பெரியார், சென்னையில் அண்ணா, மதுரையில் கலைஞர் ஆகியோரின் பெயர்களைத் தாங்கி நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, திருச்சியில் அமையவிருக்கும் நூலகத்துக்குக் காமராஜர் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன். எனவே, தமிழகத்தில் கிராமங்கள்தோறும் பள்ளிகளைத் தொடங்கி, மதிய உணவு அளித்து, லட்சக்கணக்கான குடும்பங்களின் கல்விக் கண்களைத் திறந்து, தமிழகத்தின் கல்விப் புரட்சிக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திட்ட காமராஜர் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதி, திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்குக் காமராஜர் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

by hemavathi   on 02 Apr 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழகப் பள்ளிகளில் இனி 'ப ' வடிவில் இருக்கை தமிழகப் பள்ளிகளில் இனி 'ப ' வடிவில் இருக்கை
நாமக்கல் நகரில் தமிழகத்தைச் சேர்ந்த புதிய செயலி மூலம் உணவு விநியோகம் நாமக்கல் நகரில் தமிழகத்தைச் சேர்ந்த புதிய செயலி மூலம் உணவு விநியோகம்
காவல்துறை மரியாதையோடு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் நல்லடக்கம் காவல்துறை மரியாதையோடு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் நல்லடக்கம்
கே.எம்​.​காதர் மொய்தீனுக்கு இந்தாண்டுக்கான தகைசால் தமிழர் விருது கே.எம்​.​காதர் மொய்தீனுக்கு இந்தாண்டுக்கான தகைசால் தமிழர் விருது
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் அறிவு வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் அறிவு வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்
கால்நடைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்யச்  சிறப்பு இணையதளம் கால்நடைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்யச் சிறப்பு இணையதளம்
கொடைக்கானலில் காய்த்துக் குலுங்கும் ஆப்பிள் கொடைக்கானலில் காய்த்துக் குலுங்கும் ஆப்பிள்
விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம் விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.