கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான லிங்கா திரைப்படம், வெளியான மூன்று நாட்களுக்குள் 100 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சுமார் 720 தியேட்டர்களில் ரிலீசான லிங்கா திரைப்படம் முதல் நாளில் 53 கோடியையும். இரண்டாவது நாள் 27 கோடியையும், மூன்றாவது நாள் 24 கோடியையும் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆக மூன்று நாட்களில் 104 கோடி வசூல் செய்து லிங்கா திரைப்படம் சாதனை புரிந்துள்ளது. இதற்கு முன் 100 கோடியை வசூல் செய்ததாக சொல்லப்பட்ட எந்திரன், கத்தி போன்ற படங்கள் அந்த தொகையை வசூலிக்க பல நாட்கள் ஆனநிலையில், லிங்கா 3 நாட்களில் 100 கோடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் 7 காட்சிகளுக்கு மேல் லிங்கா திரைப்படம் திரையிடப்பட்டதே என தெரிவிக்கப்படுள்ளது.
|