கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்கா ஆகியோர் நடிப்பில் உருவாக்கி கடந்த மாதம் 12ம் தேதி வெளியான படம் லிங்கா.
இந்த படம் கிட்டதட்ட உலகெங்கும் 3000-க்கும் அதிகமான அரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது. முதல் மூன்று நாட்களில் ரூ 104.6 கோடியைக் குவித்து சாதனையைப் படைத்த லிங்கா, இதுவரை ரூ 180 கோடி வரை வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் லிங்கா படத்தால் நஷ்டம் அடைந்துள்ளதாக ஒரு சில விநியோகிஸ்தர்கள் போர் கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில், இன்று படத்தின் தயாரிப்பாளர்கள் நாளிதழ்களில் ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளனர். அதில் லிங்கா வெளியாகி 30 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்னும் 521 அரங்குகளில் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
படம் நஷ்டம் அடைந்திருப்பதாக சிலர் கூறிவரும் நிலையில் வசூலே வராத ஒரு படத்தை இத்தனை அரங்குகளில் ஓட்ட முடியுமா... என சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
|