புதிய கலைக்கூடத்தில் இசையமைப்புப் பணியைத் தொடங்கினார் இளையராஜா
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் கலைக்கூட வளாகத்தில் கடந்த 45 ஆண்டுகளாக இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை ஒலிப்பதிவுக்கூடம் இருந்து வந்தது. சில கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த ஆண்டு முதல் இளையராஜா அவர்கள் இசையமைக்கும் பணியை அங்கே மேற்கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் இளையராஜா சொந்தமாக கலைக்கூடம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே உள்ள எம்.எம். பிரிவியூ திரையரங்கில் இளையராஜாவின் புதிய கலைக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு முதலில் இசைப்பணிகளை இளையராஜா தொடங்கியுள்ளார். புதிய கலைக்கூடத்தின் கட்டுமானப் பணிகள் முற்றுப்பெற்று வருகின்ற 7ம் அல்லது 8ம் தேதி முறைப்படி திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|