LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF

நாடு முழுவதும் பொறியியல் மாணவர்கள் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கலாம்: மத்திய அரசுக்கு பரிந்துரை!

நாடு முழுவதும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் புத்தகத்தை பார்த்து குறிப்பிட்ட தேர்வுகளை எழுத அனுமதிக்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.


அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் சார்பில் கடந்த மாதம் தேர்வுகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. 

இதில் பொறியியல் படிக்கும் மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைப்பது தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை சேர்ந்த வல்லுனர்கள் ஒரு சில குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் புதிய நடைமுறையை அமல்படுத்துவது தொடர்பாக தங்கள் யோசனையை தெரிவித்தனர். 

இது கூட்டத்தில் ஒருமனதாக ஏற்கப்பட்டது. அதேநேரத்தில் இத்திட்டத்தை குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் 3 மற்றும் 4 ம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் அமல்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.


அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இம்முடிவு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், மத்திய அரசின் உயர்கல்வித் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அங்கு இந்த ஆலோசனை ஏற்கப்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 எனவே, இந்த புதிய நடைமுறை அடுத்த 2019-20ம் கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது. இதுதொடர்பாக வேலூர் அரசு பொறியியல் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் கூறுகையில், ‘குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மட்டும் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை அயல்நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

அதே நடைமுறையை நமது சூழலுக்கு ஏற்ப செயல்படுத்த அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்து உள்ளது. இதுவரை அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. அரசாணை பிறப்பிக்கப்பட்டு அடுத்த கல்வி ஆண்டுதான் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படும்’ என்றனர்.

by Mani Bharathi   on 26 Nov 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு
பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி
இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது! இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது!
கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை! கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை!
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு!
கருத்துகள்
25-Dec-2018 09:00:34 கார்த்திக் said : Report Abuse
ஏழை மாணவா்கள் ,புரிவதற்கு மிகவும் எளியது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.