|
|||||
நாடு முழுவதும் பொறியியல் மாணவர்கள் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கலாம்: மத்திய அரசுக்கு பரிந்துரை! |
|||||
நாடு முழுவதும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் புத்தகத்தை பார்த்து குறிப்பிட்ட தேர்வுகளை எழுத அனுமதிக்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
இதில் பொறியியல் படிக்கும் மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைப்பது தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை சேர்ந்த வல்லுனர்கள் ஒரு சில குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் புதிய நடைமுறையை அமல்படுத்துவது தொடர்பாக தங்கள் யோசனையை தெரிவித்தனர். இது கூட்டத்தில் ஒருமனதாக ஏற்கப்பட்டது. அதேநேரத்தில் இத்திட்டத்தை குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் 3 மற்றும் 4 ம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் அமல்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதே நடைமுறையை நமது சூழலுக்கு ஏற்ப செயல்படுத்த அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்து உள்ளது. இதுவரை அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. அரசாணை பிறப்பிக்கப்பட்டு அடுத்த கல்வி ஆண்டுதான் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படும்’ என்றனர். |
|||||
by Mani Bharathi on 26 Nov 2018 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|