விமானங்களில் இருப்பது போல முக்கிய பேருந்துகளிலும் கறுப்புப் பெட்டியை பொறுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இது மட்டும் அல்லாமல், வேக கட்டுப்பாட்டு கருவிகளையும், அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் வசதியையும் பொறுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
பேருந்துகளில் கறுப்புப் பெட்டி பொறுத்தப்படுவதன் மூலம் அதில் பதிவாகும் தகவலைக் கொண்டு ஓட்டுனர்களின் செயல்பாடு, நாள் ஒன்றிற்கு எத்தனை மணிநேரம் ஓட்டுனர் பணியாற்றுகிறார் என்பது உள்ளிட்ட தகவல்களை பெற முடியும்.
முதல் கட்டமாக, கர்நாடகா, கேரளா, தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
|