LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

பொதுவுடைமைப் போராளி ம.வெ.சிங்காரவேலர் நினைவு நாள் - 11.2.1946

"பொதுவுடைமைப் போராளி" ம.வெ.சிங்காரவேலர் நினைவு நாள் - 11.2.1946

அந்நிய மொழியில் எங்கள் நாட்டு அரசியலை நடத்த விட மாட்டோம்!

பொதுவுடைமை இயக்க வரலாறு பேசுவோர் சிந்தனைச் சிற்பி சிங்கார வேலரிடமிருந்து தான் வரலாற்றைத் தொடங்க முடியும். ஏனெனில், அவர் தான் இந்தியத் துணைக்கண்டத்தில் முதன்முதலில் 1923ஆம் ஆண்டு மே நாள் கொண்டாடியவர். உருசியாவின் ஒப்புரவு (சோசலிசப்) புரட்சியை முதன் முதலில் வரவேற்றவர். பொதுவுடைமை என்னவென்று தெரியாத காலத்தில் லெனினைப் போல், ஏங்கெல்சைப் போல் இயல்பாகப் பொதுவுடைமை உணர்வுடன் சிந்தித்தவரும் அவரே. 1920ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே நிலவுடைமை, சாதியம், வகுப்புவாதம், வல்லாதிக்கம், முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடும் வீரராகவும் திகழ்ந்தவர் சிங்கார வேலரயாகும்.



எளிய மீனவக் குடும்பத்தில் பிறந்த இவர் தம்சாதி மக்கள் வாழும் கடலோரப்பகுதியில் போட்டியிடாமல் யானை கவுனிப் பகுதி நகராண்மைக் கழக உறுப்பினராக வெற்றி பெற்றார். அப்போது, "மனச்சான்றின் படி பொறுப்பேற்கிறேன்" என்று தமிழில் உறுதி மொழியெடுத்தார். பதவியேற்புக்குப் பின்னரும் தமிழிலேயே உரையாற்றினார். அன்றைக்கு ஆங்கிலத்தில் மட்டுமே நகராண்மைக் கழக உறுப்பினர்கள் உரையாற்றி வந்தனர். இவருக்குப் பின்னர் தான் தாய்மொழியில் பேசும் பழக்கம் நகராண்மைக் கழகத்தில் ஏற்பட்டது. அனைத்து துறைகளிலும் தமிழ்மொழியைப் பயன்படுத்தும்படி பேசியும் எழுதியும் வந்த சிங்கார வேலர் தமிழர்களுக்கு அறிவியல் மனப்பான்மை உருவாக வேண்டும் எனும் நோக்கில் தமிழில் அறிவியல் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்தார்.

லாப்லசின் வானியலைப் பற்றி வெண் மேக சித்தாந்தம், ஈன்ஸ்டனின் கால இடத் தத்துவம், மார்க்சின் மூலதனம், டார்வினின் உயிர்களின் தோற்றம் ஆகியவற்றை தமிழில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார். சிங்கார வேலர் தாய்மொழிக் கொள்கையை எங்கும் எப்போதும் வலியுறுத்தியவர். அதற்குத் தடையாக ஆங்கிலமோ, இந்தியோ வரக்கூடாது என்பார்.

1938ஆம் ஆண்டு பள்ளிகளில் இந்தி கட்டாயத் திணிப்பு செய்யப்பட்ட போது குடியரசு ஏட்டில் (சூன் 1938) எழுதியது வருமாறு: "இந்தி கற்பிக்கும் முயற்சி தற்போது எதற்கு? நம் சிறுவர்களை வீண் பாடுபடுத்துவது ஏன்? இம்முயற்சி வீண்முயற்சியே அல்லாமல் புத்திசாலித்தனமாகாது. பூரண சுயராஜ்யம் நமது நாடு முழுமையும் அடையும் வரையில், இந்தி பாஷை மூலமாக மக்கள் ஜீவனத்திற்கு ஒன்றும் கற்கப் போவதில்லை. எவ்வித உதவியுமில்லாத இந்தி பாஷையை நம் சிறுவர்களுக்கு கற்பிப்பதால் யாது பிரயோசனம்?"

தமிழ்மொழியின் தொன்மை குறித்தும் அனைத்து கலைகள், அரசு நிர்வாகம் ஆகியவை தமிழில் வேண்டுமென்றும் அதே குடியரசு ஏட்டில் மேலும் விளக்கிச் சொல்கிறார்: "தமிழ்நாட்டில் வழங்கிவரும் மொழிகளில் தமிழ் மொழி ஒரு புராதன மொழியாகும். தமிழ்நாட்டில் வாழும் மக்களில் பெரும்பான்மையோர் தமிழ் மொழியில் பிறந்து வளர்ந்து பேசிப் படித்து அநாதி காலமாக வாழ்ந்து வருகின்றனர். தமிழ்மொழியைப் பேசிவரும் மக்கள் சில கோடிக்கணக்காக இருக்கின்றனர். இந்தத் தமிழ் மொழியை பேசிவரும் மக்களின் கல்வியும் நாகரிகரிமும் புராதனமானவை. 

"தமிழ்நாட்டுச் சமதர்மவாதிகளாகிய நாங்கள் எங்கள் தமிழ் நாட்டில் தமிழ் பாஷையிலன்றி மற்ற எந்த அந்நிய மொழிகளிலும் எங்கள் நாட்டு அரசியலை நடத்த விட மாட்டோம்."

சகலவித விவகாரங்களுக்கும் சட்டம், நீதி, நிர்வாகம், விஞ்ஞானம், பொருளாதாரம், தொழிற்சங்கம் முதலிய பல்லாயிர ஸ்தாபனங்களும், இலாக்காகளும் தமிழ் மொழி மூலமாக நடத்தப்பட வேண்டும்."

இந்தியத் துணைக்கண்டம் பிரித்தானியாரிடமிருந்து விடுதலைப் பெற்று 68 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் வேண்டும் எனும் சிங்கார வேலரின் கனவு பொய்த்துப் போய் விட்டன. இந்திமொழி தில்லி அரசாலும், ஆங்கிலமொழி தமிழக அரசாலும் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டு தமிழ்மொழி அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. இது குறித்து கிஞ்சிற்றும் கவலை கொள்ளாது அவரின் வழித் தோன்றல்களான இந்தியப் பொதுவுடைக் கட்சி, மார்க்சிய பொதுவுடைமைக் கட்சி இவ்விரண்டும் அந்நிய மொழியில் நாட்டை நடத்த முற்படும் திராவிடக் கட்சிகளிடம் இரண்டு சீட்டுகளுக்காக மண்டியிட்டு கிடப்பது பேரவலமாகும்.

சிங்காரவேலர் கூட்டத்தில் பேசும் போது யாராவது கை தட்டினாலோ, மாலை அணிவித்தாலோ அதனை "பூர்ஷ்வா குணம்" என்பார். அவர் உயிரோடு இருந்திருந்தால் இரண்டு சீட்டுக்காக மண்டியிடுவதையும் பூர்ஷ்வா குணத்தின் பட்டியலில் சேர்த்திருப்பார்! 

நன்றி - கதிர் நிலவன்

by Swathi   on 11 Feb 2014  0 Comments
Tags: ம.வெ.சிங்காரவேலர்   ம.வெ.சிங்காரவேலர் நினைவு நாள்   சிந்தனைச் சிற்பி   Ma Po Singaravelar   11.2.1946        
 தொடர்புடையவை-Related Articles
பொதுவுடைமைப் போராளி ம.வெ.சிங்காரவேலர் நினைவு நாள் - 11.2.1946 பொதுவுடைமைப் போராளி ம.வெ.சிங்காரவேலர் நினைவு நாள் - 11.2.1946
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.