LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மா நன்னன் ஐயா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள், தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த செம்மல் (கோவிந்தன்) நினைவேந்தல்..

மா நன்னன் ஐயா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள், தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த செம்மல் (கோவிந்தன்) நினைவேந்தலும் 10. 11. 18 காலை 10 மணிக்கு இராசரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது.

விடுதலை ஆசிரியர் கி வீரமணி அவர்கள், செம்மல் படத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரை ஆற்றினார். தனித்தமிழ் இயக்கத்தில் பாடுபட்டதுடன், நன்னன் அவர்களின் உடனிருந்து பெரியார் வழியைப் பின்பற்றியவர்; செம்மல் தன் உடல் நலம் பாதிக்கப்பட்டு நோயிலிருந்து மீள முடியாது என்கிற நிலையில், தனக்குச் செலவிடும் பெரும் தொகையை ஏழை மக்களுக்குப் பயன்பட மருத்துவ மனைக்குக் கருவிகள் வாங்க வழங்குமாறு கூறிய செம்மல் அவர்களுடைய உள்ளம் பாராட்டுதற்குரியது என்று வீரமணி கூறினார்.

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க தலைவர் கருணாநிதி, வங்கிப் பணியில் செம்மல் கடுமையாக உழைத்ததுடன், எல்லோருக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு மிகுதியாக உதவினார் என்று கூறினார்.

தமிழ் எழுச்சிப் பேரவைச் செயலர் முனைவர் பா இறையரசன் பேசும் போது, பூண்டிக் கல்லூரியில் தானும் செம்மலும் படித்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்; உலகத் தமிழ்க் கழகம் தொடங்கியதையும், பாவாணரை அழைத்து, மாநாடு நடத்தியதையும், மாந்தன் பிறந்த இடம் தமிழகமே எனப் பாவாணர் அறிவித்ததையும் தெரிவித்தார். மேலும் பெருஞ்சித்திரனார், பாவாணர், பேராசிரியர் இளவரசு, வாடாத் தமிழ் மேல் நடந்த வண்ணத்தமிழ்க் குமரன், ம.இலெ. தங்கப்பா ஆகியோருடன் தனித்தமிழ்ப் பணி செய்து வளர்த்ததையும் குறிப்பிட்டார்.

பேராசிரியர் சுப வீரபாண்டியன் பேசுகையில், நன்னன் ஐயா தொலைக் காட்சியில் தமிழ் சொல்லிக் கொடுக்கும் எளிய பாங்கையும் பெரியார் வழியில் உறுதியாக நின்றதையும் பாராட்டினார்.

ஆசிரியர் வீரமணி அவர்களிடம், பெரியார் மைய மருத்துவ மனைக்கு அல்ட்ரா சவுண்டு கருவி வாங்க நன்னன் ஐயாவின் துணைவியார் பார்வதி அம்மையார் அவர்கள், "நன்னன் குடி" சார்பாக நான்கு இலட்சத்து இரண்டாயிரம் உரூபாய்க்குக் காசோலை வழங்கினார்.

ஏராளமான தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் பெரியார் கொள்கைப் பற்றாளர்களும் வங்கி ஊழியர்களும் உற்றார் உறவினரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

அவ்வை தமிழ்ச்செல்வன் தொகுத்துரை வழங்கினார்.
வேண்மாள் செம்மல் நன்றி கூறினார்.

by Swathi   on 12 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.