LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

மலை குலைந்தாலும் நிலை குலையாதவர்

தேர்தல் என்றாலே சில தில்லுமுல்லுகள் நடக்கும் என்பார்கள் . ஒரு கட்சிப்பிரமுகரிடம் உங்கள் கட்சி எந்தக் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறது என்று ஒருவர் கேட்டார் . “ அதை இப்போது சொல்ல மாட்டோம் . தேர்தல் முடிந்த பிறகு தான் அறிவிப்போம் ” என்றாராம்அந்தப் பிரமுகர் . எவ்வளவு சாமர்த்தியம் பாருங்கள் , சிலரை பெரும்புள்ளி ஆக்குவதற்கு பலரின் கைகளில் கரும்புள்ளி வைப்பதே தேர்தல் என்றார் ஒருவர் . தேர்தல் நேரத்தில் ஓட்டுப்போட இறந்து போனவர்கள் எல்லாம் எழுந்து வந்துவிடுவார்கள் . ஆம் கள்ள ஓட்டுப்போடும் ஆசாமிகளின் கை வரிசை இது . எப்படியாவது தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்செய்யும் குளறுபடிகள் இவை .

தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் அதை மக்கள் தீர்ப்பாக ஏற்று மகிழ்ச்சி அடையும் மனோபாவம் எல்லோருக்கும் வராது . ஆனால் பெருந்தலைவர் காமராசர் இதற்குச் சிறந்த உதாரணமாகத்திகழ்ந்தார் . 1967 ல் பெருந்தலைவர் தேர்தலில் தோற்றபோது அவரது கதை இத்தோடு முடிந்து விட்டது என்று பலர் நினைத்தார்கள் . ஆனால் அது பொய்த்துவிட்டது . குமரி மாட்டத்தில் தமிழர்களின் தந்தை என்று அனைவராலும் பாராட்டப்பட்ட நேசமணி அவர்கள் காலமானதையொட்டி நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது . பெருந்தலைவர் காமராசர் போட்டியிட்டார் . அகில இந்தியாவின் கவனத்தை ஈர்த்துக்கொண்டது அந்தத் தொகுதி . “ இந்தத் தேர்தலில் யார் ஜெயித்தாலும் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் ஜெயிப்பார்கள் . நிலைமை மதில்மேல் பூனையாக இருக்கிறது என்று பத்திரிகைக்காரர்கள் எழுதினார்கள் . ஆனால் “ அப்பச்சி பாஸ் , அப்பச்சி பாஸ் என்று குமரி மாவட்டத்து மக்கள் குதூகலிக்கத் தொடங்கிவிட்டார்கள் . அவர்கள் எண்ணம் ஈடேறியது . வாக்குகள் முடிந்து ஓட்டு எண்ணப்படும் நாளில் ஆரம்பத்திலிருந்தே பெருந்தலைவர் முன்னிலையில் இருந்தார் . பிற்பகலில் அவரது வெற்றி நிச்சயம் என்று தெரிந்ததும் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர் . தொண்டர்கள் எல்லோருக்கும் இனிப்புகள் வழங்க ஆரம்பித்தார்கள் . வெடிகள் வெடித்தார்கள் . வெற்றி ஆரவாரம் செய்தார்கள் . பெருந்தலைவருக்கு மாலை அணிவிக்க அவரைத் தேடிச்சென்றனர் . ஆனால் பெருந்தலைவர் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தார் . ஐந்து மணிக்குத்தான் எழுந்திருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது . மதிய உணவுக்குப்பின் உறங்குவது அவரது பழக்கம் . ஓட்டு எண்ணப்படும் நாளில் கூட அவர் பதட்டமடையவில்லை . பரபரப்பு அடையவில்லை . கடமையைச்செய்து விட்டேன் . பலனைப் பற்றிக் கவலையில்லை என்று கீதையின் நாயகனாய் அவர் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார் . ஆனால் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோற்றது . ஓட்டு எண்ணப்படும் நாளில் தொடர்ந்து வந்த தோல்விச்செய்தி தொண்டர்களைச் சோர்வடையச் செய்தது . பெருந்தலைவரோ பழைய தேர்தல்களில் நடந்த செய்திகளைத் தொண்டர்களுக்குச் சொல்லிச் சோர்வை அகற்றுகிறார் . தோல்விச் சாயல் கொஞ்சம் கூட முகத்தில் இல்லாமல் எல்லோரையும் உற்சாகப்படுத்துகிறார் . அந்த நேரத்தில் கூட கலகலப்பாகப் பேசி எல்லோருக்கும் தைரியம் சொல்லிக்கொண்டிருக்கும் அவரது ஆற்றலை எண்ணி எல்லோரும் மலைத்து நின்றார்கள் . வெற்றியின் போது கொக்கரிக்காமலும் தோல்வியின்போது துவளாமலும் இருக்கின்ற மனநிலை மகான்களுக்கே வரும் . “ அற்றேமென்று அல்லற்படுபவோ செல்வம் பெற்றேமென்று ஓம்புதல் தேற்றாதவர் ” என்ற வள்ளுவர் வாக்கிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் .

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.