தலிபான்களால் தாக்கப்பட்ட பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். பாகிஸ்தானில் பெண்கள் கல்வி உரிமை குறித்து இணையதளத்தில் கருத்து தெரிவித்தால், கடந்த வருடம் தலிபான்களால் சுடப்பட்ட மலாலா யூசுப், சிகிச்சைக்காக, பிரிட்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து உடல் நலம் தேறிய மலாலா,கடந்த மாதம் மருத்துவமனையில் இருந்து "டிஸ்சார்ஜ்' ஆனாள். தற்போது, பிரிட்டனின், பர்மிங்ஹாம் நகரில் உள்ள "எட்க்பாஸ்டன்' பெண்கள் உயர்நிலைப்பள்ளியில்', சேர்க்கப்பட்டுள்ளாள். மலாலா பள்ளி செல்வதை அறிந்த பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
|