|
|||||
மாலாய்-ஆங்கில-சீன-தமிழ் மொழி அகராதிகள் உருவாக்கப்படவேண்டும்: மலேசிய அமைச்சர் கோகிலன் கோரிக்கை! |
|||||
""பிஜி, தென்னாப்பிரிக்கா, பாலி போன்ற பல நாடுகளில் தமிழ்க் கலாச்சாரம் இருக்கிறது. ஆனால் தமிழ் இல்லை. மலேசியாவில் தமிழும் இருக்கிறது. தமிழ்க் கலாச்சாரமும் பேணிப் பாதுகாக்கப்படுகிறது. அதனால்தான் இங்கே உள்ள தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளில் தமிழ்க் கலாச்சாரத்தின் தாக்கம் காணப்படுகிறது.
ஒரு வருத்தம் மலேசியா வாழ் தமிழர்களுக்கு உண்டு. தாயகத் தமிழகத்தின் அங்கீகாரமும் ஆதரவும் தங்களுக்கு இல்லை என்பதுதான் அது. அதைப் போக்குவதற்கு ஒரே வழி, தமிழக முதல்வர் ஜெயலலிதா கோலாலம்பூருக்கு வருகை தர வேண்டும். அடுத்த கரிகாலன் விருது வழங்கும் விழாவில் அவர் கலந்துகொண்டு, சிங்கப்பூர், மலேசிய எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் உங்கள் சார்பில்நான் தமிழக முதல்வருக்கு இந்த வேண்டுகோளை வைக்கிறேன்.
மலாய் - ஆங்கில அகராதி இருக்கிறது. மலாய் - ஆங்கில - சீன மொழி அகராதியும் இருக்கிறது. அதேபோல, மலாய் - ஆங்கிலம் - சீனா - தமிழ் அகராதி தயாரிக்கப்பட வேண்டும். மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்''.
இவ்வாறுமலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும், சிங்கப்பூர் தமிழ் அறக்கட்டளையும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய, சிங்கப்பூர், மலேசியாவைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர்களுக்கான "கரிகாலன் விருது' வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, விருதுகளை வழங்கியும், விருது பெற்ற எழுத்தாளர்களைப் பாராட்டியும், மலேசிய அரசின் வெளிவிவகாரத் துறை துணையமைச்சர் கோகிலன் பேசினார். |
|||||
by MAYIL on 11 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|