LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

மலேசியா மணல் இறக்குமதி: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மலேசிய மணலுக்கான தொகையை செலுத்தாததால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 55 ஆயிரம் டன் மணலை லாரிகளில் எடுத்துச் சென்று தமிழகம் முழுவதும் விற்க அனுமதி வழங்கக்கோரி புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில்  நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட வேண்டும். புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது, 

ஜல்லியை தவிர்த்து கிரானைட் குவாரிகளையும் மூட வேண்டும்’ என தனி நீதிபதி வழங்கிய உத்தரவையே, பின்னர் உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வும் உறுதிப்படுத்தியது.

இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு, விசாரணைக்கு வந்தது. 

மணல் தொடர்பான நிதியை கொடுக்க தமிழக அரசின் கஜானாவில் போதிய நிதி கிடையாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில்,” மணல் தொகை கொடுக்கும் விவகாரத்தில் கூடுதல் அவகாசம் தமிழக அரசுக்கு கொடுக்க முடியாது. இருப்பினும் அடுத்த ஒரு வாரத்தில் கண்டிப்பாக ராமையா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய மொத்த மணல் தொகையையும் தமிழக அரசு நீதிமன்றத்தில் செலுத்தியே ஆக வேண்டும் என  உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி மதன் பி லோகூர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதத்தில்,
”ராமையா நிறுவனத்திடம் வாங்கிய மணலை தற்போது தான் விற்பனை செய்து வருறோம். அதனால் தொகையை செலுத்த மேலும் 3 நாட்கள் கூடுதல் அவகாசம் வேண்டும்” என தெரிவித்தார். இதற்கு ராமையா நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

 இதையடுத்து நீதிபதி உத்தரவில்,” மலேசியா மணல் விவகாரத்தில் தொகையை நீதிமன்றத்தில் செலுத்த தமிழக அரசுக்கு 2 வாரம் கால அவகாசம் கொடுத்தும் அதனை செலுத்தாமல் காலதாமதம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 நீதிமன்றம் குறிப்பிட்டு தெரிவித்த தேதியில் ஏன் தொகையை செலுத்தவில்லை என்பது மட்டுமே எங்களது கேள்வியாக உள்ளது. இந்த விவகாரத்தில் வரும் அக்டோபர் 1ம் தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்  நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

by Mani Bharathi   on 30 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம் ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம்
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல். உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்.
அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை. அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை.
முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை. முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை.
வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம். வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம்.
இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா? இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?
இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம். இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல். மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.