|
|||||
மலேசியா மணல் இறக்குமதி: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு |
|||||
மலேசிய மணலுக்கான தொகையை செலுத்தாததால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 55 ஆயிரம் டன் மணலை லாரிகளில் எடுத்துச் சென்று தமிழகம் முழுவதும் விற்க அனுமதி வழங்கக்கோரி புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட வேண்டும். புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது, ஜல்லியை தவிர்த்து கிரானைட் குவாரிகளையும் மூட வேண்டும்’ என தனி நீதிபதி வழங்கிய உத்தரவையே, பின்னர் உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வும் உறுதிப்படுத்தியது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு, விசாரணைக்கு வந்தது. மணல் தொடர்பான நிதியை கொடுக்க தமிழக அரசின் கஜானாவில் போதிய நிதி கிடையாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில்,” மணல் தொகை கொடுக்கும் விவகாரத்தில் கூடுதல் அவகாசம் தமிழக அரசுக்கு கொடுக்க முடியாது. இருப்பினும் அடுத்த ஒரு வாரத்தில் கண்டிப்பாக ராமையா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய மொத்த மணல் தொகையையும் தமிழக அரசு நீதிமன்றத்தில் செலுத்தியே ஆக வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதத்தில், இதையடுத்து நீதிபதி உத்தரவில்,” மலேசியா மணல் விவகாரத்தில் தொகையை நீதிமன்றத்தில் செலுத்த தமிழக அரசுக்கு 2 வாரம் கால அவகாசம் கொடுத்தும் அதனை செலுத்தாமல் காலதாமதம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றம் குறிப்பிட்டு தெரிவித்த தேதியில் ஏன் தொகையை செலுத்தவில்லை என்பது மட்டுமே எங்களது கேள்வியாக உள்ளது. இந்த விவகாரத்தில் வரும் அக்டோபர் 1ம் தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார். |
|||||
by Mani Bharathi on 30 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|