இறை மழை சாரலில், இல்லதரசியாக மலர்ந்த புதிய மலர்;
வாசல் இல்லா வானத்தில், அன்புகரசியாக வந்த அன்பு மலர்;
காலங்களில் நான்களிலும், தீர்க்கதரிசியாக வந்த வாடா மலர்;
தாயின் மறு உருவத்தில், அன்பின் அரிச்சுவடியை, கொடுத்த தாய் மலர்;
கள்ளமில்லா கடமையை, தந்தையின் மறு உருவத்தில், காட்டிய தந்தை மலர்;
உறவு இல்லா நட்பு, உறவாக வந்தவை, உறவாக வந்து நட்பாக வாழும் நட்பு மலர்;
முக்கடல் கூடும் சங்கமம், தாய், தந்தை, நட்பு இவை முன்றும் பெற்ற சங்கம மலர்;
என் பிள்ளையை ஈன்று, என்னை ஈன்றவறின் தியாகத்தை உணரவைத்த தியாக மலர்;
எங்கள் இல்லத்தின் இருளை போக்கும், ஒளி மலர்;
அன்பின் கரங்களில் இவ்வுலகம், உன் கரங்களில் என்றுமே எங்கள் உலகம்,
நீயே எங்களை காக்கும் தெய்வ மலர்!.
இறைநிலைபித்தன் ௦௮/௦௧/௨௦௧௭ / துபாய்
|