LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

மனதைக் கடிக்காதீர்கள்

மற்றவர்கள் மனதைக் கடித்துக் குதறி புண்படுத்தி வேடிக்கை பார்ப்பது நம்மில் பலருக்குக் கைவந்த கலை . அது மனைவியாக இருந்தாலும் விட மாட்டார்கள் .

ஒரு காரில் கணவன் , மனைவி இருவரும் பயணம் செய்து கொண்டிருந்தனர் . அப்போது வழியை மறித்தபடி சில கழுதைகள் படுத்துக்கொண்டிருந்தன . உடனே காரை நிறுத்திய கணவன் மனைவியைப் பார்த்து ,

“உன்னோட உறவுக்காரங்க எல்லாரும் படுத்திருக்காங்க பார்”என்றார். உடனே மனைவி “உறவுக்காரங்கதான்; உங்களைக் கல்யாணம் பண்ணின பிறகு வந்த உறவு”என்றார்.

இப்படி ஒருவரை ஒருவர் கடித்துக் கொள்வதால் என்ன பயன் ? தன்னைப் பழித்துப் பேசியவர்களைக் கூட மனம் நோகாமல் தான் நடந்து கொண்டது மட்டுமின்றி மற்றவர்கள் அவ்வாறு நடப்பதையும் தடுப்பவர் பெருந்தலைவர் .

சென்னை நகர சபைக்குத் தேர்தல் நடந்த சமயம் . திருவல்லிக்கேணி பார்த்தசாரதி நாயுடு தெருவில் காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டம் . மேடையில் காமராசர் அமர்ந்திருந்தார் .

“காமராசர் திருமணம் ஆகாதவர். குடும்பம் இல்லை. குடும்பம் இல்லாதவருக்கு கஷ்ட நஷ்டம் எப்படித் தெரியும்? என்ன பொறுப்பு இருக்கும்? பொறுப்பு இல்லாதவருக்கு எப்படி ஆட்சியைச் சரிவர நடத்த முடியும்?”என்று ஒரு தலைவர் குறை கூறியிருந்தார். அதற்குப் பதிலளிப்பதற்காக எழுந்த ஒரு பேச்சாளர் அந்தத் தலைவரை முன்னிலைப்படுத்தி பதில் கூற முயன்றார். பேச்சின் தரம் வசவாக மாறத் தொடங்கியது.

அதுவரை கேட்டுக் கொண்டிருந்த பெருந்தலைவர் தாங்க முடியாமல் கோபத்துடன் எழுந்து “ நீங்கள் அதிகம் பேசி விட்டீர்கள் . போதும் அமருங்கள் அடுத்தவர் பேசட்டும் ” என்று கூறி வரம்பு மீறிப் பேச முயன்றவரைத் தடுத்தார் .

தனக்குத் துன்பம் வரும்படி பேசியவர் கூட மனம் நோகக் கூடாது என்று நினைக்கக் கூடிய உயர்ந்த பண்பினைப்பெற்றவர் பெருந்தலைவர் .

யார் மீதும் புழுதி வாரித் தூற்றாதீர்கள் . ஒரு வேளை குறி தவறலாம் . ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் . உங்கள் கைகள் அழுக்காகி விடும் .

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.