LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    பழங்கள்-தானியங்கள் Print Friendly and PDF

மாம்பழத்தின் ஆயுர்வேத பயன்கள் !

பங்கன பள்ளி, ருமானி போன்ற பல வகை மாம்பழங்கள் இந்தியாவில் கிடைக்கின்றன.மாம்பழத்தில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. காடுகளில் இயற்கையாக வளர்வது, தோட்டங்களிலும் மற்ற இடங்களிலும் நாமே விதை நட்டு வளர்ப்பது என மாமரங்கள் இருவகை. இரண்டாவது பிரிவான நாட்டு ஜாதி மரங்களில் உண்டான கனிகள், புஷ்பங்கள் மேன்மையானவை. அவைகளிலும் பாதிரி, நீலம், ருமாணி, ஒட்டுமா, மல்கோவா என்று பல பிரிவுகளும் இருக்கின்றன.சுவையில் இனிப்பு உள்ள மாம்பழங்கள் விந்துவை அதிகரிப்பது, சுகத்தைக் கொடுப்பது, கப ரக்த நோய்களை கண்டிப்பது, உடலுக்கு புஷ்டியும் நல்ல நிறத்தையும் கொடுப்பது, வாயுவை கண்டிப்பது, குளிர்ச்சி ஆகியவை பொது குணங்கள்.

இனிப்பும் துவர்ப்பும் சேர்ந்துள்ள மாம்பழத்தை உட்கொண்டால் ஜீரண சக்தியும், கபமும் சுக்லமும் அதிகரிக்கும். மாம்பழ ஜூஸ் பலம் அதிகம் கொடுக்கும். வாயுவை கண்டிக்கும் கபத்தை உண்டு பண்ணும். மலத்தை இறுகச் செய்யும். மாம்பழத்தை துண்டுகளாகச் செய்து உட்கொண்டால் ருசியாக இருக்கும். ஆனால் ஜீரணம் ஆவது மிகவும் கடினம். குளிர்ச்சி, பலம், புஷ்டி தரும். வாயுவை கண்டிக்கும்.மாம்பழத்தின் உபயோகத்தால் வெளியிலிருந்து விஷப்பூச்சி அணுக்கள் நம் தரத்தில் கலந்து கெடுதல் செய்யாமலும் தோல் சம்பந்தப்பட்ட சில நோய்கள் வராமலும் தடுக்கப்படுகின்றன.மாம்பழத்தை சாப்பிடும் சமயம் மாம்பழம் காய்ச்சிய பசும்பால் இரண்டைத் தவிர மற்ற எந்த ஆகாரத்தையும் உட்கொள்ளக்கூடாது.

TP நோய் உள்ளவர்கள் வெள்ளாட்டு பாலுடன் சேர்த்து மாம்பழத்தை சாப்பிட வேண்டும். நல்ல பழுத்த மாம்பழத்தைத்தான் சாப்பிட வேண்டும். உயர்நத் ஜாதி மாம்பழங்களாகிய மல்கோவா, கிரேப், பங்கனபள்ளி போன்ற பழங்கள்தான் சாப்பிட வேண்டும். இவைகளையும் மாறி மாறி உட்கொள்ளாமல் ஏதாவது ஒரே ஜாதியின் மாம்பழத்தையே தொடர்ந்து உபயோகித்தால்தான் அவைகளின் நல்ல குணங்களை நாம் அடைய முடியும்.முதலில் காய்ச்சி பசும்பாலை அருந்திவிட்டு, பிறகு மாம்பழத்தின் காம்பை நறுக்கி எடுத்து அவ்விடத்தில் வெளிக்கிளம்பும் பாலுடன் கூடிய ரசத்தை பிழிந்துவிட்டு பிறகு ரசத்தை உறிஞ்சி உட்கொள்ள வேண்டும். எக்காரணத்தை மூன்னிட்டும் மாம்பழம் சாப்பிட்டபிறகு பால் குடிப்பது கூடாது. ஆரோக்யத்துக்கு உகந்தது அல்ல. 1 மாதம் அல்லது 2 மாதம் எவ்வாறு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர ஜீரண சக்தி அதிகரித்தல், மலச்சிக்கல், டி.பி, இளைப்பு, இதய நோய்கள் யாவும் மறைந்து ரத்த விருத்தி, உற்சாகம், புதுத்தெம்பு ஆகியவை உண்டாகும்.

புளிப்பு மாம்பழங்களை அளவில் அதிகமாக முறைத்தவறி உட்கொண்டால் ஜீரண சக்தி குறைவு, மலச்சிக்கல், கண் பார்வை மங்குதல் ஆகியவை ஏற்படக்கூடும்.. மாவடு புளிப்பும் துவர்ப்பும் உள்ளதால் ருசியைக் கொடுக்கும். ஆனால் வாயவையும், பித்தத்தையும் உண்டு பண்ணும்.மாங்காய் சுவையில் புளிப்பு, வறட்சி வாயு பித்தம் கபம் ரத்த தோஷங்களை உண்டு பண்ணும். மாங்காயையே துண்டங்களாக நறுக்கி வெயிலில் காய வைத்து உட்கொண்டால் மலத்தை இளக்கச் செய்து- கபம் வாயுவைக் கண்டிக்கும்.மாங்கொட்டைப் பருப்பு சுவையில் துவர்ப்பு, வாந்தி, பேதி, நெஞ்செரிச்சலைக் கண்டிக்கும். பேதியில் மாம்பருப்பு, கருவேப்பிலை சிறிது மிளகு வகைளை அரைத்து மோரில் கலக்கித் தாளித்து சிறிது உப்பு சேர்த்து சாதத்துடன் கலந்து சாப்பிடுதல் நல்லது.மாம்பு குளிர்ச்சி, வாயுவை உண்டு பண்ணும். பேதி, ருசியின்மை, ரத்த தோஷங்கள், கபம், பித்தம் நீரழிவு இவைகளை கண்டிக்கும். மலத்தைக் கட்டும் குணம் இதற்கு அதிகம் உண்டு.

by Swathi   on 10 Dec 2012  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
100 கிராம் நிலக்கடலையில் இவ்வளவு சத்துக்களா... 100 கிராம் நிலக்கடலையில் இவ்வளவு சத்துக்களா...
சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !! சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !!
நீங்கள் வாங்கும் வாழைப்பழம் உடல்நலத்திற்கு நல்லதா? சிந்தியுங்கள் .. நீங்கள் வாங்கும் வாழைப்பழம் உடல்நலத்திற்கு நல்லதா? சிந்தியுங்கள் ..
மூன்று முக்கிய மூலிகைகளின்(neem, Vilvam, Thulsi) பழங்கள் என்ன? -மருத்துவர் செல்வசண்முகம் மூன்று முக்கிய மூலிகைகளின்(neem, Vilvam, Thulsi) பழங்கள் என்ன? -மருத்துவர் செல்வசண்முகம்
வழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள்  - சாவித்திரிகண்ணன் வழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள் - சாவித்திரிகண்ணன்
ஆரோக்கியம் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள் - சாவித்திரிகண்ணன் ஆரோக்கியம் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள் - சாவித்திரிகண்ணன்
உணவே மருந்து (சிறுதானியங்களும் அதன் சிறப்புகளும்).. உணவே மருந்து (சிறுதானியங்களும் அதன் சிறப்புகளும்)..
பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் அற்புதமான  பயன்களும்!! பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் அற்புதமான பயன்களும்!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.