மணிமேகலை வெண்பா - பகுதி 2
உதய குமாரன் தேரொலி
ஓரொலி கேளாய் உதைய குமரனவன் தேரொலி போலும்! தெரிவைஎன்-பேரில் விருப்புடையான் என்பர் விளைவறியேன்; நெஞ்சில் நெருப்புடையேன் என்றாள் நிலவு. |
மணிமேகலையே பளிங்கு மாளிகையின் உள்ளே போய்விடு
கேட்பது தேரின்மணி ஓசைதான் கேள்உன்னை மீட்பது தேரின் மணிமேகலையே-வாட்போர் உதையன்பால் தோன்றாதே மாளிகையின் உட்போ இதையன்பால் ஏற்கஎன்றாள். |
145 |
பறந்தோடினாள் பச்சை மயில்
ðறந்திட்டாள் பச்சை மயிலனையாள் ஓடித் திறந்த பளிக்கறை சேர்ந்தாள்-சிறந்த உதையன் மணித்தேரும் உற்றது பாங்கி அதையும்கண் டாள்உரைப்பாள் அங்கு. |
150 |
அவன் மட்டச்சரக்கை என்னிடம் விற்கட்டும்
பளிக்கறையில் சென்றாயா? தாழிடுவாய்! பச்சைக் கிளிக்கறைவ தைப்போல் கிளத்தேன்-வெளிப்புறத்தில் ஐந்துவிற்க டைத்தொலைவில் நானிற்பேன் ஆள்என்பால் வந்துவிற்க மட்டச் சரக்கு. |
155 |
உதயகுமரன் வந்து, 'நோய்க்கு மருந்து வாங்கிவா' என்கின்றான்
நிறுத்தைய என்னத், தேரோட்டி நிறுத்தச் சிறுத்தை குதித்துச் செவியை-உறுத்தவே பாங்கிõ£ மேகலையுன் பாங்குள்ளாள் என்நோய்க்கு வாங்கிவா என்றாù¢ மருந்து. |
160 |
உனக்கு அறிவுறுத்த என்னால் முடியுமா?
நரைமுடித்து நல்லிளமை நாணி நடுவின் உரைமுடித்தோற் குற்ற மருக!-விரைவில் அரசுக் கியலும் அறிவும் தரப்பெண் ºரசுக் கியலுமா முன்? |
காமம் ஒரு தீ !
ஆயினும் ஒன்றுகேள் ஆடவர்க் குக்காம நோயினும் மாப்பெருநோய் இல்லை-தீயினும் தீயது தீண்டாத போதினும் தீய்த்தலால்! நீயது நன்று நினை |
165 |
பெண்ணழகு நிலையற்றது
தோலழ கெù¢ப திளமை தொலையி இல்லை மேலழ காடை அணியாலாம்-ஞாலத் திதுகொண்டு மேலோர் இடர்கொள்ளார் என்றால் எதுகொண்டிங் கெய்தினை நீ |
170 |
உள்ளே உலவும் மணிமேகலையை உதயன் கண்டு விட்டான்
என்றிளங் கோவுக்கு மங்கைஇது சொல்லுகையில் நின்றிளங் கால்நோவு நீளாமல்-பின்துறையை நீங்கு பவளப் பளிக்கறைக்குள் நின்றாள்ஓர் பாங்கு பவளக் கொடி |
175 |
உள்ளே புக வாயில் தெரியவில்லை
வெளிக்கறி விக்கும் அகத்தையெலாம் அந்தப் பளிக்கறைò¤ற் பாவையைப் பார்த்தான்-கிளிக்கறையா? தூயில் தனைஅடைவாய் தூயோயென் றோடினான் வாயில் தனையறியான் மற்று. |
180 |
மணிமேகலையா? ஓவியமா?
நற்பளிங்கின் உள்ளேநான் நண்ணல் அரிதேயோ! நிற்பளிங்கு மாரிழையோ! ஓவியமோ-பொற்கொடியே எத்திறத்தள் மேகலைதான் என்றான் சுதமதியாள் அத்திறத்தைக் கூறுவாள் ஆங்கு. |
மணிமேகலை மனத்தை மாற்ற நீ யார்?
நோற்றல் உடையா÷¢; நுவல்காமம் நண்ணாத ஆற்றல் உடையஆள்; அவளுள்ளம்-மாற்றவே நீயார்என் றாள்பாங்கி; நின்ற உதையனும் நீயார்என் றான்கொதித்து நின்று. |
185 |
சுதமதி வரலாறு
மாருத வேகன் மடக்கி எனைமணந்தான் தேருதல் செய்யவே என்தந்தை-ஊரெலாம் தேடினான் காவிரி தென்கடல் சேரிடத்து நாடினான் நான்கண்டேன் அங்கு. |
190 |
மேலும் கூறுதல்
சங்க தருமனால் புத்தன் சமயத்துச் சங்கம் அடைந்தேன்! தருமங்கள்-தங்குமொரு நாவே, பிறிது நவிலலும் இல்லைஇளங் கோவேவாழ் கென்றாள் பூங்கொம்பு. |
195 |
மணிமேகலையை நான் அடைவது சின்னது
இன்னது கேட்ட உதையன் எனக்கிது சின்னது! சென்றுசித்தி ராபதியால்-பொன்னதுவே மின்னதுவே என்னுமணி மேகலையை நானடைவேன் என்னதுவே இன்பமென் றான். |
200 |
என் மனம் அவன்மேற் சென்றது பிழை
வாடி உதையன் மறைந்தபின் மற்றந்த ஆடி அறைதிறந்து பாங்கியை-நாடி இழந்தையோ நின்றேன் எதிரிபால் நெஞ்சைè¢ குழந்தையோ அன்னதென்றாள் கொம்பு. |
என்மனம் அவன்மேற் சென்றது மீண்டது
மின்றிறந்து மூடினாற் போலுமிம் மெல்லியுள்ளம் சென்றது மீண்ட தெனினுமந்-நன்றிலன்மேல் போமம் மனந்தான்என் கற்பைப் புரைசெய்தால் காமம் வலிதோ கழறு |
205 |
காமம் ஒருபுறம் உணர்வு ஒருபுறம்
புணர்வு நிலைதேடிப் போனது சாமா றுணர்வு நிலைபெறுதல் உண்டோ?-கிணறு பலிகேட்கும் ஓர்பால் பழிதீர் நிலைகூம் ஒலிகேட்கும் ஓர்பால் செவி, |
210 |
மற்றொரு மணிமேகலை நற்றவ முதியோன்
மணிமே கலைஎன்ற ஓர்முதியோள் வையம் மணிமே கலைஎன்ற மாப்பேர்-அணியும் பெரும்புகழும் ஆன தவப்பயனும் பெற்றோள் கரும்புகளின் கண்ணேர்வந் தாள். |
215 |
முதியோளைப் பணிந்தாள் மணிமேகலை
அன்னை அடிபணிந்தார் ஆன அருளேஎம் மின்னை அடைந்தோம்என் றார்இருவர்-பின்னையே என்ன துயர்என்றாள் எல்லாம் துறந்தாளும் அன்னதுயர் பாங்கிசொன்னாள் அங்கு. |
220 |
சுதமதி சொன்னாள்
பாவெடுக்கப் பாவலரும் பார்க்குமணி மேகலைதான் பூவெடுக்க வந்திட்ட போதமுதை-நாவெடுக்கக் காலெடுத்தான்: வாயிற் கதவறியான்; தேரேறிக் கோலெடுத்தான் அவ்விளங்கோ. |
சுதமதி தொடர்ந்து சொல்கின்றாள்
காண்பேன் அவள்திறத்தைக் கண்டமட்டும் எனதிறந்தான் வீண்போதல் இல்லை விளம்புங்கால்-ஆண்சிங்கம் என்றுந்தித் தேர்ஏறி ஏகும் உதையன் என்றுந் திருந்தான்என்றாள். |
225 |
உதயகுமரனிடம் அகப்படாமல் சக்கரவாளக் கோட்டம் போய்விடு
பின்னும் அற்றே பின்னு மற்றே பித்தனுளம்! காமந்தான் இன்னுமற்றே போகவில்லை என்செய்வாய்?-நன்னுதல் அக்கர வாளன் அகப்படுத்தல் இல்லாமல் சக்கரவா ளக்கோட்டñ£ சார். |
230 |
சக்கரவாளக் கோட்டமா?
என்று முதியோள் இயம்பச் சுதமதி ஒன்றுக்கு வேறொருபேர் ஒன்றுமா?-தொன்றுபிணக் கோட்டமா சக்கரவா ளக்கோட்டமா இதுவே நாட்டமா னாள்பாங்கி நன்று. |
235 |
சக்கரவாளக் கோட்டத்தின் கதை
சுடுகாட்டுக் கோட்டத்தை வேறு பெயரி னொடுகாட்டல் ஏனோ உரைத்து-விடுகென்று பாங்கி பகர முதியோள் நெடிதுரைக்க வாங்கி மகிழ்வாள் மணி. |
240 |
கதை நடுவில் தூக்கம்
காவிரிப்பூம் பட்டினமும் காடும் பிறவுமவள் நாவிரிப்பப் பாங்கி நடுச்செவியேற்-றியாவரிதை வாங்கிக் கிடப்பார்கள் என்பாள்போல் மண்ணிலுற்றத் தூங்கிக் கிடந்தாள்மெய் சோர்ந்து |
உதையன் தொல்லை ஒழிந்தது
துணிபல்ல வம்மான் துயர்எய்தல் என்றே மணிபல்ல வம்சேர்த்தாள்! வாட்டம்-தணித்தாள். தணிமே கலைதான்! மணிமே கலையைப் பிணியானப் பித்தன் இனி. |
245 |
நடுத்திட்டில் விட்டு எடுத்தாள் ஓட்டம் முதியோள்
பன்னாள் நடத்தும் படுகடலை நன்னாவாய் தன்னால் தவிரத்துமணி மேகலையைத்-தென்பால் கடனடுவில் சோர்வுற்ற கண்ணாளை விட்டே உடனகன்றாள் ஓதுமுதி யோள். |
250 |
சுதமதியிடம் முதியோள்
எங்குற்றாள் மேகலைதான் என்றிருந்தாள் பாங்கிதான் அங்குற்றாள் மாமுதியோள் அன்புடையாய்-மங்காப் பழமை மணிபல்லவம் சேர்த்தேன் பார்ஓர் கிழமையினில் மீள்வாள் கிளி. |
சுதமதிக்கு முதியோள்
மன்னன் மகனுக்கும் வாய்மை பலகூறி அன்னம் தனையணுகல் ஆகாதென்-றின்னம் பலவும் பகர்ந்தேன்நற் பாங்கி உனக்குச் சிலவும் தெரிவிப்பேன் கேள் |
260 |
அம்மாவிடம் இதை அறிவி
ஊறு தவிர்ந்துமணி மேகலைஇவ் வூர்வருங்கால் வேறு வடிவமே மேற்கொளினும்-கூறின் உனக்°ñ¢ ஒளியாள்; இதனை அவள்தாய் தனக்கும் ஒளியாமற் சாற்று |
என்பேர்தான் மணிமேகலை
மாதவி பெற்ற மகளுக்கென் பேரையே கோதவி கோவலன் வைத்திட்டாù¢-ஈதுரைப்பாய் மாதவிக்கு நாளும் மணிமே கலைமனத்தின் தீதவிப்பாள் என்றதையும் செப்பு. |
265 |
சுதமதி மாதவிக்கு!
என்று மொழிந்தவள்தான் ஏகச் சுதமதியும் சென்று தெரிவித்தாள் தேன்மொழிக்கே-கன்றைப் பிரிந்தா வருந்தாதா? பெண்ணைப் பிரிந்தால் வருத்தாதா பெற்ற மனம்? |
270 |
மணிபல்லவத்தில்
மணிபல் லவத்தில் மணலில் துயின்ற மணிமே கலைகண் மலர்ந்தாள்-துணிவிழந்தாள் பண்டறி யாதனவே பார்த்தாள் உறவாரைக் கண்டறி யாதகற் பண்டு. |
275 |
முதியோள் விட்டுப்போனது அறமா?
ஆங்கிருந்தேன் என்னை அழைத்திங்கு வந்திடுமுன் தூங்கி¢னேù¢! அந்நேரம் தூரத்தே-ஏங்கவிட்டுச் செல்லல் அறமா? செயத்தக்க இன்னவெனச் சொல்லல் அறமா தொடர்ந்து |
280 |
கண் காணத இடத்தில் கலங்குகின்றேன்
தேரு மிலாது தெருவு மிலாதுழையார் யாரு மிலாதிருக்கும் இவ்விடத்தில்-சோருகின்ற கண்ணீரும் நானும் கதறுங்கால் என்உறவீர் கண்ணீரோ சற்றும் எனை? |
அம்மாவும் உதவவில்லை; அப்பாவையும் கண்டதில்லை
பழிகூறிக் கொன்ற ஒரு பாண்டியனை உண்மை வழிகூறி ñ£ளப் புரிந்த-எழிலான அப்பாவை யுங்காணேன் அன்றும்காணேன் இன்று அப்பாவை யுங்காணே னால். |
285 |
மரமா தேறுதல் கூறும்? விலங்கா தேறுதல் கூறும்?
தீமையாய் இங்குத் திரிகின்றேன் தெங்குபலா ஊமையாய் இங்கிருக்கும்; ஒன்றுரையா-ஆமையும் புள்ளிழுத்துக் கொள்ளும் புனற்கரைமா உண்டுதலை உள்ளிழுத்துக் கொள்ளும்எனை ஓர்ந்து. |
290 |
கோலெடுத்துக் கொண்டு குறுக்கில் ஓடுகின்றது குரங்கு
தேனோடும் பூவிற் சிறையோடும்! புல்லுக்கு மானோடும் கொக்கு மடையோடும்!-நானோடி மேலெடுக்கும் வேலை எதென் றேன்குறுக்கே முள்வேலங் கோலெடுக்கும் ஓடும் குரங்கு |
295 |
நண்டும் வண்டும் விளையாடும்! நானுமா விளையாடுவேன்!
நண்டு விளையாடும்; நன்மா நிழற்காரை கண்டு மயிலாடும்; காவித்தேன்-மொண்டு விளையாடும் வண்டு; விளையாட வாநான்! களையா டினஎன்றன் கண். |
300 |
முதியோள் வந்தாள்
திட்டில் அழுவாள் சிரிப்புக் கரைகாண எட்டி முதியோள் எடுத்த¬íத்துè¢-கட்டிக் கரும்பே உதைய னிடமிருந்து காத்தேன் திரும்பநான் சொன்னபடி செய். |
தவð¢பெரியோர் அறம்உரையார் மிகச்சிறியை என்று
புத்தன் புகன்ற திருவறத்தை நீ அடைதல் கத்தன் றென உணர்க கண்மணியே-புத்தம் புதிய இளமேனி காணும் புலவர் முதிய மறைஉறையார் முன். |
305 |
நினைத்த உருவம் கொள்ளும் புனைவினை
நினையும் உருவத்தை நீயடையத் தக்க புனைவினை ஒன்று புகல்வேன்-தினையும் மறந்தார்க்குத் தோதுபடல் இல்லை உனைப்போல் துறந்தார்க்குத் தோது படும். |
310 |
புனைவினை புகன்றாள் முதியோள்
பன்னாட்டார் ஆடவர் பாவையர் பூண்களும் பன்னாளும் மாறிவரும் பாங்குகளும்-பன்மொழியும் மூத்தார் இளையார் நடைப்பாங்கும் முற்றிலும் மூத்தாள் மொழிந்தாள் அவட்கு. |
315 |
உறுப்புக்களை மாற்றும் முறை
நோக்குப் பலவும் நுதல்பலவும் வாய்பலவும் மூக்குப் பலவும் முனைநடுவாம்-நாக்குப் பலவும் பலரின் உருக்காட்டப் பின்னும் பலவும் பகர்ந்தாள் அவட்கு. |
320 |
முதியோள் மறைந்தாள்
பலவாம் புனைவினை பாவைக்குச் சொல்லி நிலவாம் முகத்தாளே நேரிங்-குலவியிரு புத்தபீ டிகையுé¢காண் கோமுகியும் காண்; போய்ஊர் நத்துகஎன் றாள்மறைந்தாள் நன்று. |
தீவதிலகை காணப்பட்டாள்
காலை மணற்குன்றைக் கண்டு நடக்கையிலே தீவ திலகைஎனும் தேமொழியின்-நாவில் அமுதெடுத்தால் அன்ன தமிழெடுத்தாள்! கண்ணின் இமையின் இணைப்பெடுத்தாள் பெண். |
325 |
தீவதிலகைக்கு மணிமேகலை
கப்பல் கவிழ்ந்ததனால் கண்டமணி பல்லவத்தில் தப்பல் நினைத்துத் îù¤த்தடைந்த-தொப்பது நின் தோற்றம் நீ யாரென்னத் தோகை வரலாறு மாற்றம் இலாதுரைத்தாள் மற்று. |
330 |
தீவதிலகை»ñ¢ மணிமேகலையும்
முத்தன்ன வெண்ணகையார் முற்சென்றார் அங்கிருந்த புத்தனார் பீடிகையில் போதுவிழி-வைத்தனர் நாமுகிழ்த்தாள் நன்றதன்சீர் தீவ திலகைதான்! கோமுகியும் காட்டினாள் கொம்பு. |
335 |
கோமுகிப் பொய்கையில் அமுத சுரபி
உண்ணாடிக் கண்டால்தன் உள்ளதுகாட்டும் தென்னீர்க் கண்ணாடிப் பொய்கைக் கரைநோக்க-எண்முப் பதக்கும் பிடிக்கும் பழங்கலம் ஒன்று மிதக்கும் பிடிக்கும் அதை மின். |
340 |
அமுதசுரபியுடன் திரும்புதல்
கமழ்வது தாமரை, காணிற் கலம் அஃது அமுத சுரபிஎன்றாள் அன்னம்-அமைய இருகையில் ஏந்திய மங்கை திரும்பி வருகையில் மற்றுங்கேட் டாள்! |
தீவதிலகை செப்பினாள்
நீபத்து நூறுமுறை நேரிற்கா ணுங்கலத்தை ஆபுத்திரன் இட்டான் அந்நீரில்- நீ போய் அறவணர்பால் கேட்பாய் அதன்வரலா றென்றாள் திறவணத்தாள் தீவதில கை. |
345 |
அந்தக்கலந்தான் இந்தக் கலம்
இட்டுப் புகழ்பெற்ற ஏழைதான் ஏற்றசோ றிட்டுக் கø¤பிசைந் தீந்ததுவும்-இட்டே எடுக்க எடுக் கக்குறையா தென்றதுவும் பொய்கை அடுத்ததுவும் இக்கலமே ஆம்; |
350 |
பசியுள்ள இடத்தில் புசி என்று போ
அறியாமை வேரோ டழியாது? வாழ்வை எறியாமைத் தீப்பசிதான் ஏகா-துறவேகேள் ஓரூரி லாவிடினும் ஓருரில் உண்டுபசி நேர்ந்ததும் அப்பிí¤யை நீக்கு. |
355 |
வையப் புகழ் உனக்கே
இளமையில் எய்துமோர் இன்பம் வெறுத்தாய்! வளமையிற் போதல் மடக்கி-உளம்காத்தாய்! வையப் புகழுனக்கே வாய்திறந்தால் கோடிவரும் வெய்ய பசியை விலக்கு. |
360 |
ஆபுத்திரன் போல் அளி
வயிற்றுப் பê¤நீக்கு வாழ்வறியார் தூக்குக் கயிற்றை விழலாக்கு! கண்ணை-எயிற்றை மகிழ் வேபுகுத்தாய் நீஉன்றன் வாழ்நா ளெலாமந்த ஆபுத் திரன்போலம் மா. |
ஏழைக்è¤டுவதே தவம்
வேலையில்லை தந்தைக்கு! வெள்ளைநூல் அன்னையிடம் பாலில்லை பச்சைக் குழந்தைக்கே-தாலிவிற்றால் வாங்குவா ரில்லை? அங்குவாட்டும் பசிநீக்கித் தாங்குவார் தாம்தவம்செய் வார். |
365 |
அறத்தின் சாறு
சோறில்லை என்பார்க்குச் சோறு தருவதுதான் கூறறங்க ளின்சாற்றுக் கூட்டம்மா-வேறேதான் எங்குண்டம் மாபசிக்கே ஈர்ம்பழஞ்சோ றிட்டுவக்கும் அங்°í¢டம் மாநல் லறம். |
370 |
இன்றியமையா நிலையில் இடும் சோற்றுக்குச் சாவு அல்லது வாழ்வு
கூன்மாடு விற்றுக் குதிரைவாங் கற்கென்றன் கான்மாடு நின்றார்க்குக் காசளிக்க-நான்மாட்டேன் இன்றி யமையா நிலையில் இடும்சோற்றுக் கொன்றுசாக் காடொன்று வாழ்வு. |
375 |
தீவதிலகை சென்றாள்
உயிர்வாழ்வேன் மக்கள் உறுபசி தீர்ப்பேன் செயிர்தீரச் செப்பியது கேட்டேன்-வெயிற்கு நிழல்அவ் வடிகள்பால் செலவேன் நினைவு தொழல்என்றாள் தோகைசென் றாள், |
380 |
மாதவி மகளைக் கண்டால்
மாதவி யாழ் துù¢பச் சுதமதிதம் வாயினின் றேதவியாழ் பெற்ற இடர்என்றே-தீதுறுவார் சோறுபெற்ற தூய்கலத்தா ளைப்பெற்றார் முப்பழத்தின் சாறுபெற்றார் தாவி யணைத்து. |
அறவண அடிகளைப் பணிந்தார்கள்
ஆய அனைத்தையுமே அன்னையிடம் பாங்கியிடம் ஏய உரைத்தாள் இளமங்கை-தூய அறவணைத்தார் பக்கல் அணிகியே தாளில் உறவணைத்தார் உச்சந் தலை. |
385 |
அறவணத்தார் அறிவித்தார்
அடிகள் உரைப்பார்; அப்புத்த நெறியைக் குடிகள் தொடர்தல் குறைய-மிடிகள் மலிய மறவலி ஆர்ந்தது மக்கள் மெல்லியலா னார்அதன் மேல். |
390 |
புத்தநெறி உலகில் பரவவேண்டும்
கொடிதுசேர் கோட்டையில் புத்த நெறிதான் கடிதுசே ராதே எனினும்-நெடிது முயலுவேன் நீயும் முயலுக நன்கு பயிலுக என்றார் பரிந்து. |
395 |
ஆபுத்திரன் பற்றி அறவண அடிகள்
மன்பதைக்கு நேரும் பசிப்பிணி மாற்றுக! பின்பதைக் கண்டு தரும்மீ-தென்பதை நீபெற் றிடலாம்! நிகழ்த்துகின் றேனினி ஆபுத்தி ரன்சீரென் றார். |
400 |
ஆபுத்திரன் புகழ் விண்ணினும் பெரிது
ஒழுக்க மெனுநல் லுறுதுணைக் கேபே ரிழுக்கம் புரிவார்க் கெதிர்ப்பு-முழக்கம் புரிந்திட்ட ஆமகன் பெற்ற புகழ்தான் விரிந்திட்ட விண்ணிற் பெரிது. |
கொலை வேள்வியை எதிர்த்தவன் ஆபுத்திரன்
«õள்வி எனஉரைத்து மாடாடு வெட்டலும் கேள்வியே இன்றிக் கிளத்தலும்-நீள்வியான் ஆமகன் பெற்ற புகழ்தன்னை அந்நாளில் கோமகன் பெற்றானா கூறு. |
5 |
எத்தீமைக்கும் ஆபுத்திரன் இளைத்து விடவில்லை
அறத்தினைச் சார்ந்தே அடைத்த புகழை அறத்தினுக் கேசெல வாக்கும்-திறத்தைக் குறுகிய கொள்கையார் கொல்ல நினைத்தார் இறுகிய நெஞ்சா இறும்? |
10 |
பிற்போக்காளரின் தலைவன் ஆபுத்திரனைக் கெடுக்க நரிவேலை செய்தான்
இருளில் உலகை நடத்துவார்க் கேந்தல் அருளில் நடந்தானை அண்டி-மருளில் நடந்த நரிவேலை செய்ததும் உண்டு கடப்பானா கொண்ட கருத்து. |
15 |
ஆபுத்திரன் வரலாறெல்லாம் சொல்லி முடிக்கப்பட்டது
என்று சிறப்பிடங்கள் சுட்டி அறவணர் நன்று முதலிருந் î¦றுவரை-ஒன்றவே ஆமகனின் அன்பு வரலாறெ லாம்சொல்லிப் போமகளே என்றார்அப் போது. |
20 |
மணிமேகலை பிச்சைக்காரியானாள்
ஏன்று கலம்ஏந்தி மேகலைதான் அன்னவரை மூன்று முறைசுற்றி முன்வணங்கி-மான்போல் மருண்ட வழிநடந்தாள் மற்றவரை விட்டே! தெருண்டு வழிநடக்கும் தேன். |
எல்லோரும் மணிமேகலையைச் சூழ்ந்து கொண்டார்கள்
ஊர்ப்பிச்சைக் காரி உருவடைந்தாள் அவ்வுருவைச் சேர்ப்பித்தாள் நல்ல தெருவழியே-வார்ப்படத்துத் தங்கப் படிவம் தரையில் வரக்கண்டோர் அங்èப் படியேசூழ்ந் தார். |
30 |
எல்லோரும் வரவேற்கிறார்கள்
கண்ணம்மா உன்வரவு! கைநிறைய இட்டிடுவோம் உண்ணம்மா என்றேஓ ராயிரம்பேர்-வண்ணம் இருக்கும் படிவத்தார் சொன்னார்கள் சற்றே இருக்கும் படிசொன்னாள் யாழ். |
35 |
ஆதிரை வீட்டில் மணிமேகலை
கற்புப் புகழ்வாய்ந்தோள் உள்ளாளோ அன்னவளின் இற்புக்கு முன்இடக்கேட் பாய்என்ற-சொற்பெருக்கிக் காயசண்டி கைஎன்பாள் ஆதிரைஇல் காட்டினாள் போயறங்கேட் டாள்சுடர்ப் பொன். |
40 |
ஆதிரை வரவேற்பு
கையிற் கலத்தோடும் கண்ணில் அருளோடும் பொய்யில் துறவென்னும் பூட்கையொடும்-துய்யமணி மேகலையை ஆதிரை கண்டாள் மிகமகிழ்ந்தாள் ஆகஅம் மாஎன்றாள் ஆய்ந்து. |
ஆதிரை கறியோடு சோறிட்டாள்
தேவர் உலகம் சிறப்பென்னும் ஆரியர்சொல் ஈவார் உலகம் இழிவாக்கப்-பாவை கலமே நிறையக் கறியொடு சோறிட்டாள் இலமே இலம்என்னு மாறு. |
45 |
ஆதிரை வாழ்த்து
அழகும் இளமையும் எண்ணாய் துறவே பழகும் இளையாய் பசுநெய்-ஒழுகக் கலத்திலிட் டேவிரு கையாலும் சோறு நிலத்து நிலைக்கநின் சீர். |
50 |
ஆதிரை இட்ட அமிழ்து
கண்டனர் ஊரார் கடிதுகேட் டார்பாரோர் மண்டினோர் எல்லாரும் வாழ்த்தினார்-அண்டுமுயிர் ஏதிரை என்னாமைக் கிங்கு முதன்மையாம் ஆதிரை இட்ட அமிழ்து. |
55 |
மணிமேகலை எல்லார்க்கும் இட்டாள்
இலம்நிறைந்தார்க்கல்லாம் மனம்நிறைந்த தென்னக் கலம்நிறைந்து போனது கண்டு-நலம்நிறைத்தாள் வாரீர்உண் பீர்என்பாள் வந்துண்பார், பின்னும்இலார் வாரீர்என் பாள்உண்பார் வந்து. |
60 |
காயசண்டிகை சொன்னாள்
காயசண்டி கைஎன்பாள் மாதõ¤யின் கண்ணாள்முன் நீயறத்தின் செல்வியென்று நேர்வந்து-தாயேநான் யானைத்தீ என்னும் பசியுடையேன் வற்றாஉன் தேனத்தீ னேன்என்றாள் தேர்ந்து. |
யானைî¢ தீ என்பதென்ன?
வயிறுநிறைந் தாலும் மனநிறையார்க் குள்ள இயல்பின்பேர் யானைத்தீ என்பர்-துயரறுக சாப்பிடுநீ சாப்பிடு நீ சாப்பிட்டு நன்னிலையைக் கூப்பிடுநீ என்ன குறை? |
65 |
சொல்லால் பாதி தொல்லை போயிற்று
என்றுரைத்தாள் மேகலைதான் ஈபவளே சொன்னதனால் நின்றபிணி யிற்பாதி நீங்கிற்றாம்-நன்றுண்டாள் மேலுண்டாள் மற்றுண்டாள் மேன்மேலுண் டாள்நாட்கள் நாலுண்டாள் நன்னிலையுண் டாள். |
70 |
காயசண்டிகை நோயகன்றது
ஆறென்றால் ஆறாத யானைத்தீ ஆறியது! சோறென்றால் முப்போதே துய்க்கின்றேன்-கூறென்றால் பட்ட தொல்லை பஞ்சு படாதம்மா! பெற்று விட்டேன் விட்டதொல்லை யாலே மிடல். |
75 |
v
காயசண்டிகை கணவனை நொந்தாள்
என்னை உடையான் எனக்குநோய் என்றவுடன் தன்னை உடையானைத் தான்பிரிந்தான்-பின்னுமவன் காவிரிப்பூம் பட்டினத்தில் காத்திருந்தால் சான்றோர்கள் நாவிரிப்பார் நன்றாம்என் றான். |
80 |
என் கணவர் ஒரு மரம்
சிற்றுளியும் ïù¢மை சிதைந்தால் சிதைவகற்றிப் பொற்றுளிபோல் போற்றத் தவறிடார்-நற்றொழிலோர்! தீராநோய் எங்கேனும் தீர்த்துவா என்றானை ஆராயின் அன்னோன் மரம். |
அறம் எது!
அறஞ்சென்று கெட்டாரு மில்லை அறத்தின் புறஞ்சென்று வாழ்ந்தாரு மில்லை-பறந்த கிளிவாய்ப் பழம்நழுகிக் கீழ்ப்பசித்தோன் வாயில் துளிவீழல் தூயற மன்று. |
90 |
நல்லறம்
அறிந்து பசித்தோர்க் கருளல் அறமாம் முறிந்த மனத்தாலே மூன்று-முøஞ்சோறு போடல் அறமன்றே என்று புரிந்தாய் வாடல்இங் கேன்என்றாள் மாது. |
95 |
உலக அறவி பற்றிக் காயசண்டிகை
உலக அறவி புகுந்தே உலகின் கலகப் பசிநோய் களைந்து-நிலவுகவே என்றுசெல் லும்காயசண்டிகையை இன்னமுதே நன்றுசெல்க என்றாள் நகை. |
100 |
மணிமேகலை உலக அறவி அடைந்தாள்
ஈந்து மகிழ்வாள் எழிற்றா மரைமுகத்தேன் ஏந்துவாள் போற்கலத்தை இன்னமுதோ-டேந்திய வண்ணம் உலக அறவி மருளினாள் தண்ணம் தமிழ்க்குயில் தான் |
உலக அறவி புக்காள் மணிமேகலை
ஒளிந்து நடந்த ஒருமயிலை ஊரார் தௌ¤ந்து செறிந்து வரவும்-குளிர்ந்தநிலா இன்னம் உணவுண்ண வாரீரோ என்றபடி தன்னந் தனிநுழைந்தாள் உள். |
105 |
மறைமலை அடிகளின் சொற்பெருக்கா?
அறவி அகத்தும் புறத்தும் இளைய துறவி முகம்பார்த்துச் சூழ்ந்தார்-நிறைகலி ஆர்கலியோ அண்ணல் மறைமலைசொல் கேட்டாரால் நேர்கலியோ என்னும் நிலம். |
110 |
சித்திராபதி வீட்டில்
பேர்த்தி துறவும் பெருநிலையம் சென்றதுவும் நேர்த்தி எனவிரல் நேர்உதட்டில்-சேர்த்தியே மாதென்ன மாதோ வழிதப்பக் கேட்டஎன் காதென்ன காதோஎன் றாள், |
115 |
உதயகுமரனிடம் ஓடினாள் சித்தராபதி
எனச்சித்தி ராபதிதான் ஏதேதோ கூறி மனச்சிற்றில் வேக மடிகண்-சினத்தால் எரிய இளவரசன் எங்கென்று கூந்தல் சரியச்சென் றாள்வீட்டை விட்டு. |
120 |
ஆள் போய் உதயனிடம் சொன்னான்
இல்லில்லை என்று பளிக்கறையில் ஓர்ஆள்போய்ப் பல்லில்லை என்று படுகிழவி-பொல்லா உதட்டால் உமைப்பார்க்க வேண்டுமென் கின்றாள் அதட்டவா என்றான் அவன் |
சித்திராபதியைக் கூட்டிவா என்றான் உதயன்
கண்டசித்தி ராபதியைக் கையோடு நீகூட்டிக் கொண்டுவா என்றுதையன் கூறவே-பண்டைக் கிழமே! கிளிக்காட்டில் கெட்ட சுளைமாம் பழமேபோ பார் என்றான் ஆள். |
125 |
சித்திராபதியைக் கூட்டிவா என்றான் உதயன்
கண்டசித்தி ராபதியைக் கையோடு நீகூட்டிக் கொண்டுவா என்றுதையன் கூறவே-பண்டைக் கிழமே! கிளிக்காட்டில் கெட்ட சுளைமாம் பழமேபோ பார் என்றான் ஆள். |
125 |
மந்தியுடன் மன்னன் மகன்
குந்தி யிருந்த குமரனெதிர்க் கூன்முதுகு மத்தி இருந்துதன் வாய்திறந்தாள்-சிந்தும் கொழகொழத்த ஓசையெல்லாம் கொண்டுபொருள் கொள்வான் இழவேஎன் றேஇளங் கோ. |
130 |
என் மகள் பகை ஐயா
கோவலன் செத்ததனைத் கொண்டுமகள் மாதவிநான் நோவத் தவத்துறையை நோக்கினாள்-யாவர் நகையாரை யா? நங்கை யல்லா லெனக்குப் பகையாரை யாநூற் படி. |
135 |
பொது மகளிர் வழக்கம்
முற்புணர்ந்தான் செத்தால்பெண் முற்றும் துறப்பதெனும் கø¢புணர்ந்தால் கைச்செலவு கட்டுமா?-இற்புகுந்து தொட்டாலே பொன்கேட்போம் தொட்டிருந்தால் சொத்தடைவோம் விட்டாலோ வேறாள்என் போம் |
140 |
யாழ் பொது
பாணன் இறந்துவிட்டால் யாழோ பலர்க்காகும்! காணுமலர் உண்ணும் கருவண்டு-நாணமேன்? பொன்றருமாண் பாலோர் புணரத் தகுந்தவரே இன்ù¢øக்கா யாமிப் படி |
இன்பத்திற்கு வாழ்வா? துன்பத்துக்கா?
வளவரை சேர்மந்தி பலாவை விடாநாட் டிளவரசே! என்றன் இளையாள்-உளவரைக்கும் இன்ப முழுவதுவும் எய்தலாம்; எய்தாமல் ¶ன்பமுழு தும்தோய் வதோ? |
145 |
மணிமேகலையைக் கொள்ளாமல் வி´தல் இழிவு
என்னழகை என்றன் மகளழகை மற்றழகைத் îன்னழகாக் கொண்ட தனியரசைப்-பின்னரசே கொள்ளல் புகழைக் கொடுக்கும்; புனிதத்தைத் தள்ளல் இகழைத் தரும். |
150 |
மணிமேகலையைக் கொள்வது பண்பாடு
முகத்தை நிலவால் முடித்து விரலின் நகத்தைக் கிளிமூக்கால் நாட்டி-முடித்த அழகு முடிப்பை எடுத்து முடித்தல் பழகுமுடி வேந்தர்பண் பாடு. |
155 |
அவள் மெய்இù¢ப ஊற்று
மைவேண்டாம்; கண்ணல்ல நெய்தல் மலர்கள் நெய்ஏன்; குழலன்று நீளருவி-பொய்யன்று பூண்வேண்டாம்; மேனியன்று; பொன்னின் ஒளிப்பிழம்பே ஊண்ஏன்? மெய் அன்றின்ப ஊற்று. |
160 |
தாமரைப் பொய்கை
ð ணிமே வரசுக்குப் பட்டத்தரசி மணிமே கலையல்லால் மற்றார்-தணியாத ஆசை அனலுக்குத் தாமரைப் பொய்கை அன்றோ மீசையுளார் சொல்க விரைந்து. |
மேகலை கிடைத்தால் எல்லாம் கிடைக்கும்
பல்லெல்லாம் வெண்முத்துப் பந்தர்! கிளிநாணும் சொல்லெல்லாம் முத்தமிழ்ச் சோலையே-வெல்லரிய தென்றுவரின் கொத்துச் சிரிக்குமிதழ் மேகலைதான் ஒன்றுவரின் எல்லாம் உனக்கு. |
165 |
என் விண்ணப்பம் காண்!
கட்டழகா காண்பாய்என் விண்ணப்பம்! உன்னடியில் இட்டழவே இங்குற்றேன் என்னெனில்-ஒட்டாரக் காரிதனைக் கைக்கௌ¢க காற்றாய் பறக்குமுன் தேரிதனைச் செய்க விரைந்து. |
170 |
அவள் உலக அறவியில் உள்ளாள்
உலக அறவியினில் உள்ளாள்என் மூச்சு விலக அறவிடேல் என்னை-இலகணையின் மென்பஞ் சுமக்கமையும் வேளைஇது! மற்றிதுவே இன்பம் சுமக்கும் இனிது. |
175 |
உதயன் தேரேறி வ¤ரைவாய்ச் சென்றான்
ஏற்பாரை நோக்கிக் கிழவி இடலானாள் மேற்பாரை நீங்கமலை விட்டெழுந்தீப்-போற்பாரோர் தங்கோமான் பிள்ளைபோய்த் தட்டிய தேர்ப்பரிகள் தங்கோமான் என்பன; தாம். |
180 |
மணிமேகலையை உதயன் மறித்தான்
உலக அறவி உலவு நிலவை விலக விடாது மறித்து-நிலமீது செப்புக் குடம்படல் தெண்ணீர்க்கும் ஆம்காம வெப்புக் குடம்படல் வேண்டு. |
இன்பம் துறப்பது கட்டாயமா?
ஏனித் துறவு மணிமே கலைஎன்தீர் மானித்துறவு மறந்தாய்-நான்நீ இறப்பதுகட் டாயம் இடைநடுவில் இன்பம் துறப்பது கட்டாயமா சொல்? |
185 |
மணிமேகலை கூறுவாள்
என்றுதையன் சொல்ல எதிர் வணங்கி ஐயாவே ஒன்றுதையல் சொல்வேன் உளங்கொள்க-என்றும் இடும்பை மலையென எள்ளென நேரும் இடும்பைஇவ் யாக்கை அன்றோ? |
190 |
மும்மைத் தமிழ் காண்க
பொன்னெனப் பூவெனப் போரென நேரென என்னென சொல்லினும் இன்னலின்-முன்வலைஎன் றான்றோர் அணுகார் அவற்றால் துயரெய்தார் சான்றோர்க; மும்மைத் தமிழ். |
195 |
வள்ளுவன் சொல் ஓர்க
'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்'என்றே-ஓதினார் வள்ளுவர்; அன்னாரின் வாய்மை யதனையோ எள்ளுவர் எய்தார் நலம். |
200 |
மணிமேகலை உருமாறினாள்
ஈதுபுகன்ற மணிமே கலைஇனியும் தீது செயக்கூடும் என்றுட்போய்-மாதான காயசண்டி கைபோலக் காணுருமாற் றித்தெருவிற் போயகன்றாள் கைக்கலமும் பூண்டு. |
உதயன் ஏமாற்றம்
இன்னுமவள் உள்ளே இருக்கின்றாள் என்றிருந்தான் பின்னும் அவளைப் பெறாதகலேன்-என்றங்கே நின்றிருந்தான் நெஞ்சை நிலைகேட்டான் வீடுபோய் நன்றிருந்தான் நாட்டான் மகன். |
205 |
மணிமேகலை தொண்டு
நிலையத்தில் நல்லுணவு வந்து நீட்ட மலையத் தனையளவு மண்ட-அலைபோல் வறியார்கள் வந்து வயிறார்ந்திட் டார்தேக் கெறிவார்கள் எண்ணற் றவர் |
210 |
அவள் பறித்த அறம்
இடுகை மகிழ்ந்திடுவாள் ஏழைகள் தன்பால் கடுகையில் தன்கை கடுக-மடமடென அள்ளி இடுவாள்நல் லின்பம் அதிற்பறிப்பாள் கள்ளி மணிமே கலை |
215 |
என் மாற்றுருவம் பயன்பட்டது என்றாள¢
தான்கொண்ட காய சண்டிகையின் நல்லுருவம் தான்கொண் டிருப்பதே நன்றென்பாள்-ஏன்றவர்கள் தேன்கண்டு நெய்பால் தயிர்கொண்டு வந்தாலும் தான்கண்டு வாங்குவாள் தாழ்ந்து. |
220 |
ஏந்துகை காணாத நேரம் கண் துயிலும்நேரம்
ஈந்தன எல்லாம் இனப்படுத்திச் சோறுகழி வாய்ந்தன ஆக்கி வறியோரின்-ஏந்துகை காணாத நேரமதன் கண்துயிலும் நேரமென்றாள் வாணாள்வா ணாளாக்குகின்ற மான். |
v
ஊருக்குத் தாய்
தெருவில் கடையில் சிறுமுடக்கில் வீட்டின் அருகில் முதியோர் அழிந்தார்-திரியுறுப்பர் வாயூட்டி நெஞ்சம் மகிழ்வாள் தமையீன்ற தாயூட்டி னாற்போலும் சார்ந்து. |
225 |
சிறைப்பட்டோரும் திருத்தப்பட்டார்
வேந்து சிறைக்கூடம் மேகலைதான் சென்றங்கே ஈந்த முதலீகைக் கெட்டாநாள்-தேர்ந்த கொலை கண்டார் தாமும் குறைகண் டுணர்ந்த நிலைகண்டாள் நெஞ்சுவந்தாள். |
230 |
எல்லோரும் திருந்தினார்கள்
சோறும் மிகக்கொடுத்துச் சொற்பொழிவும் தானடத்தி ஊறு பிறர்க்கொருவர் உன்னாத-வாறு முறைகண்டாள் மூன்று தமிழ்கண்டாள், நாட்டில் சிறைகண்டார் தீங்குகண்டார் யார்? |
235 |
நாட்டு நிலையறிதல்
நாட்டு நிலையறிந்து தொண்டு நலமறிந்து காட்டுக் குயிலைக் கடிதழைத்துச்-சூட்டும் முடியரசும் ஆட்சி முறைஎவ்வா றென்றான் குடியரசும் சொன்னாள் குறை. |
240 |
அரசன் மேகலை நேர்பாடு
முறையிருக்கும் போது சிறைஎதற்கு வேந்தே? குறையிருக்க ஆட்சிசெயல் குற்றம்-இறைகேட்க; மாணவரின் வாய்க்குத் தமிழும், மனத்துக்கச் சாணி அறிவும் உயிர். |
கட்டாயக்கல்வி தேவை
கல்லார் கடைப்பட்டார் ஆதலினால் கல்விதான் எல்லார்க்கும் கட்டாயம் வேண்டுமால்-இல்லார்க்கோ ஊணுடை நல்ல உறையுள் படிப்பளித்தல் மாணுடை மன்னர் கடன். |
245 |
தமிழின் இன்றியமையாமை
ஆசைக் களவில்லை ஆதலினால் மாந்தர்கன் காசைப் பெருக்கக் கருதுவர்-ஆசைதான் உந்தா தடக்குதற்கும் உள்ளுணர்வு சேர்வதற்கும் செந்தமிழைச் சேர்க்க இறை. |
250 |
வேந்தன் வேலை தொடங்கினான்
மேகலை இவ்வாறு விளம்பச் சிறையினை மாகலைக் கூடமா மாற்றுதற்குப்-போக என நல்லமைச்சர்க் காணை நவின்றான் நவின்றஅச் சொல்லமைச்சுத் தொட்டார் வினை. |
255 |
மணிமேகலை போக விடை பெற்றாள்
எல்லார்க்கும் கல்விதான் கட்டாயம் என்றபடி இல்லார்க்குக் கல்வியும் ஏற்றவை-எல்லாமும் ஆம்படி ஆக்குவேன் என்றான் விடைகேட்டாள் போம்படி சொன்னார்¢ புகழ்ந்து. |
260 |
உதய குமாரன் மனக் கண்முன்
தார்வேந்தன் மைந்தன் தனியிருந்து மேகலைதன் நேர்வாய்ந்தாற் போலும் நினைவாக-வார்வாய்ந்த கொங்கையார் கோமாட்டி கொள்கலத்தோ டங்ககன்ற மங்கையார் என்றான் மதித்து. |
வானிலவு எங்கே?
உலக அறவியின் உட்சென்றாய்! ஓர்பெண் விலகி வெளியில் நடந்தாள்-நிலையத்துள் மீனெலாம் கண்டேன் மிகுநேரம் என்னருமை வானிலா எங்கே வழுத்து. |
265 |
நான் புகார் நாடன்
யானைத்தீ நோயாளி போல எழில்மாற்றிப் பானைத்தேன் நீவெளியிற் பாய்ந்தாயே-மானுக்கு வேடனா உள்ளத்து மன்னியோய் வேண்டுபுகார் நாடனான் நன்கு மதி. |
270 |
சித்திராபதி வரக்கண்டான்
பெண்நேரில் உள்ளாள்போற் பேசும் உதையனின் கண்நேரில் கூனிவரக் கண்டுவிட்டான்-புண்நடுவில் வேலொன்று பெற்றதுபோல் வெட்கினால் வந்தகிழத் தோலொன்று சொல்லலா னாள். |
275 |
வேங்கை வெள்ளாட்டுக்குத் தள்ளாடுமா?
வெள்ளாடு கண்ட ஒருவேங்கை இரைதவறித் தள்ளாடும் இஃது தனிவியப்பே-எள்ளாடும் செக்கும் எருதிழுக்கும் தேன்சுட்டும் நின்வலைக்குச் சிக்கும்என் றாள்உடைந்த சீப்பு. |
280 |
களிறு கன்னல் ஒடிப்பதும் அரிதா?
நாளைக்கே ஏதிலான் நாடு பிடித்தாளும் காளைக்கே வஞ்சியின் காம்பான-தோளைப் பிடித்தல் அரிதா பெருங்களிறு கன்னல் ஒடித்தல் அரிதா உரை. |
சித்திராபதி எண்ணம் என்ன?
என்று முடுக்கினாள் அன்னாள் இளவரசை ஒன்று கொடுத்தொன்றை வாங்கியே-தின்று கொழுக்கலாம் என்னுமொரு கொள்கையால் கூனி முழுக்கலாம் மூட்டினாள் ஆங்கு. |
285 |
மணிமேகலையிடம் ஓடினான் உதயன்
மாலையுற்றான் மாலையிற்றான் மேகலைமேல் மாலை வைத்தே ஆலையுற்றான் அக்கரும்பின் சாறுபற்றல்-ஏலுமென்றே காயசண்டி கையுருவின் கண்ணகியின் பெண்ணையுற்றுத் தீயசண்டை கைவிடென்றான் சேய். |
290 |
என்னை அல்லால் உனக்கு யார்?
மைகாரி சண்டிகையாய் மாறி உலவுகின்ற கைகாரி மேல்நடக்கும் காரியம்என்-மொய்காரின் கூந்தலாய் வாஎன்று கூறினோன் யார்இந்த ஏந்தலை அல்லால் இனிது, |
295 |
தன் தகுதியை மேலும் கூறுகிறான் உதயன்
என்னிலும் மேலோன் இருக்கின்றான் போலும்நான் உன்னிலும் மேலாம் ஒருத்தியையும்-உன்னுகிலேன் அன்றில் உனையழைத்த அன்றில்யான்! யாவர்சொல் மன்றில் உனையழைத்தார் மற்று. |
300 |
இளமை நிலையாமையை எடுத்துக் காட்டினாள் மணிமேகலை
அங்கு விழுந்தெழுந் தாடிநிற்கும் ஓர்கிழத்தைத் திங்கள் எழுந்த திருமுகத்தாள்-இங்கேகாண் எங்கே அழகிளமை? எத்தனைநாள் முத்துப்பல் தொங்கும் துரிஞ்சில் முலை. |
காப்பது தவமே
பற்றினோர் துன்பமே பற்றினோர்! நற்றுறவு பற்றினோர் துன்பமே பற்றாதார்-எற்றுக்கோ காமம் எதற்குமனக் கோட்டம் இவ்வுலகில் ஏமம் எவர்க்கும் தவம். |
305 |
காஞ்சனன் ஐயப்பாடு
வாஞ்சநன் மாற்றமெலாம் மங்கைசொலும் போதங்குக் காஞ்சனன் வந்துகண்டான் கண்ணேரில்-தீஞ்சொல்லாள் காயசண்டி கைதான் கசந்தாளோ என்னைஎன்றான் ஆயஅண்டி னான் அவளை அங்கு. |
310 |
என் காயசண்டிகையே
என்காய சண்டிகையே இன்னல்சேர் உன்நோயும் நன்காய தோஎன்றான்! நங்கைதான்-வன்காயை மெல்ல நினையாள்போல் வேந்தன் மகனிடத்தே சொல்ல நினைத்தாள் தொடர்ந்து. |
315 |
மனத்தூய்மையே தவம்
மனந்தன் நிலையினில் மன்னல் பொருளாம் மனம்பெண்பொன்மண்மேற் செலுமேல்-துனியாம் உவந்தலை யாதுமனம்பயில் விப்பவர் தவந்தலைப் பட்டவர் தாம். |
320 |
தவம் துயர் மாற்றும் மருந்து
தனக்கென வாழாமை தான்பிறர்க் காதல் சினம்பகை என்றும்எண் ணாமை-அனைத்தும் வருந்துயர் நீக்கிடும் ஆயின்நற்ற வந்தான் இருந்துயர் எற்றும் மருந்து. |
அருளின் தழைவே தவம்
தவமோ அருளின் தழைவாம்; அருளோ எவர்மாட்டும் ஏதில் இரக்கம்-உவப்பப் பிறர்க்குழைத் தின்புற் றிருப்பதும் நன்றே இறப்பதும் இவ்விரண்டும் வீடு. |
325 |
காஞ்சனன் ஐயப்பாடு
இதுகண்ட காஞ்சனன் என்சொல் விரும்பாள்; எதுகண் டவன்பால் இருந்தாள்?-அதுகாண்பேன் என்றே ஒளிந்திருந்தான் இன்னல் மனத்துடன் ஒன்றி அநிவியி னுள், |
330 |
உதயகுமரனின் ஐயப்பாடு
தன்மனத்துள் மன்னன் மகனுமே சாற்றுவான் என்மனத்தை வேறொன்றில் ஏகவைத்தாள்-அன்னவன்பால் அன்புடையாள் போலும்! அறிவேன் எனச்சொல்லி வன்புடையான் சென்றான் மறைந்து |
335 |
உதயன் பன்னே காஞ்சனன் சென்றான்
உலக அறவியில் உள்ள அறையில் உலவி யிருந்த ஒருத்தி-நிலையினை உற்றறிய வந்த உதையனனைக் காஞ்சனன் முற்றறியச் சென்றான் முனைந்து. |
340 |
உதயனைக் காஞ்சனன் வெட்டி வீழ்த்தினான்
எட்டியடி உள்ளறையில் இட்ட இளங்கோவை வெட்டியடி வீழ்த்தினான் காஞ்சனன்-கட்டிக் கரும்பே எனநெருங்கக் கண்ட இளமான் விரும்பேல் விளம்புதல் கேள். |
காயசண்டிகை அல்லள்; இவள் மணிமேகலை
மணிமே கலையேநான் மாற்றுருவம் பூண்டேன் அணிமேவு காயசண்டி கைபோல்!-துணிய எனைப்பார் எனத்தன் இயல்உருவம் காட்டி அனுப்பினாள் காஞ்சனனை அங்கு. |
345 |
இறந்த உதயனுக்கு அழுதாள் மணிமேகலை
தன்னுடைபூண் டாள்காய சண்டிகைத்தோற் றம்தணந்தாள் பொன்னுடை வேந்தன் புதல்வனைப்போய்-என் அசையா நெஞ்சம் அசைத்தென் நினைவாற்செத் தாய்என்று கொஞ்சி அழுதாள் குயில். |
350 |
அறம் பயிலும் நான் இறந்தானுக்கு அழுவதா?
அறந்தான் தவம்பயில் பள்ளிஅஃ தல்லால் இறந்தானை எண்ணுதல் என்னாம்¢?-மறந்தும் அழுந்தேன் துயரினில் என்றாளுக் காம்என் றெழுந்தான் கிழக்கினில் என்று. |
355 |
அமுதசுரபியைக் கண்டு பிச்சையிட்டவர்கள் பின¢பு அஃது இருக்கும் இடம்வந்து பிச்சையிடலானார்கள்
அமுத சுரபி அடையாளம் கண்டே அமுதளித் தோர்பின் அதுதான்-அமைவிடம் சென்றீய லாயினார் சென்றீயல் தம்கடன் என்றீய லாயினார் பின். |
360 |
ஈதல் என்றால் அமுதசுரபிக்கு ஈதல்தான்
ஈதல் அமுத சுரபிக்கே ஈதல்என் றோதலும் ஆனார் உலகத்தார்-ஈதல் அமுத சுரபியே ஆகி ஈவானும் அமுத சுரபிஆ னான் |
ஐயம் ஏற்கும் மணிமேகலை அறமே செய்கின்றாள்
ஓம்புகார் என்னப் பசித்தோர்க் குதவுமோர் பூம்புகார்க் கேறற் புகழெல்லாம்-ஆம்படி செய்யு மணிமே கலையின் செயலெல்லாம் ஐய மெனினும் அறம். |
365 |
அறவி முனிவர் அறிந்தார்கள்
அறமா மணிபால் உதையன் அடைவும் மறமேவு காசனன் வாளால்-எறிந்ததுவும் ஓர்ந்தார் உலக அறவி முனிவரெலாம் போந்தார் புரைதீர்ந்தாள் முன். |
370 |
நடந்தது கேட்ட முனிவர்கள் தம் வருகையை அரசனுக்குச் சொல்லி அனுப்பினார்கள்
அறைந்திருக்க உற்றவற்றை அன்னவர்பால் மங்கை! மறைந்திருக்க! மாய்ந்தோன் உடலும்.....மறைத்து வைக்க? என்றார் முனிவரெலாம் ஏந்தலைக் காணுதற்குச் சென்றார் வரவுரைத்தார் தேர்ந்து. |
375 |
v
வாயில் காப்போன் முனிவர் வரவை மன்னனுக்கு உரைத்தான்
அன்னது கேட்டநல் வாயிலோன் அங்கோடி அன்னது செய்தியாம் என்னலும்-முன்னர் வரவிடு கென்றுமா வண்கிள்ளி சொன்னான் விரவினர் வேந்தன்முற் சென்று. |
380 |
முனிவர் முடிந்தது கூறினார்கள்
வாழ்கமா வண்கிள்ளி நாளுமே செங்கோல்தான் சூழ்கமா வண்புகழ்! தூயோய்நின்-வாழ்வில் இதுவரை எய்தாத இன்னல்எய் திற்றால் அதுவரை அன்று; பெரிது! |
காமத்தால் செத்தவர்களின் கதைகள் பல
ககந்தன் மகன்தான் மருதிஎனும் கன்னல் உகந்தன்னான் தந்தையால் ஊறுற்-றிகழ்வுற்றான் முந்தை விசாகையினை மூத்தசேய் முன்னியதால் தந்தையால் தானிறந் தான் |
385 |
அன்று பல நடந்தன என்ற முனிவரை இன்றும் உளதோ என்றான் மன்னன்
காமக்கள் உண்டவர் கற்பழித்துச் செத்ததனை யாமிதற்கு முன்னுங்கேட் டோமன்றோ-கோமானே என்று முனிவர் இயம்ப அரசனவன் இன்று முளதோஎன் றான். |
390 |
மாதவி துறந்தாள் மகளும் துறந்தாள்
கோவலனார் குற்றமிலார்; ஆயினும் கோள்கேட்ட காவலனார் கொல்லென்று காய்ந்தார்என்-றோவத்து மாதவியும் நற்றவத்தில் மன்னினாள்; பெண்மணியும் மாதவியே ஆனாள் மனம். |
395 |
மணிமேகலையிடம் உதயகுமரன் தன் கையிருப்பைக் காட்டினான்
காயசண்டி கைஎன்று கண்டார் நினைக்கஅவள் ஆயஉரு மாற்றி அம்பலத்தில்-தூயளாய் ஏற்றலும் ஈதலும் செய்திருந்தாள் மன்னன்மகன் ஆற்றலும் காட்டினான் ஆங்கு. |
400 |
காஞ்சனன் உதயனைக் கொன்றான்
நள்ளிரவிற் நங்கையினை நண்ணும் இளங்கோவை எள்ளியே காயசண்டி கைகணவன்-துள்ளியே வாளாள் எறிந்தான் வழுவின்றி அங்குளோம் ஆளால் அறிந்தோம்என் றார். |
மாண்டானா மைந்தன்!
மாண்டானா மைந்தவனவன் மற்றென்பின் மாநிலத்தை ஆண்டனா அஃதும் இலையேஎன்-றீண்டிய கண்ணீர் உகுத்துக் கதறினான் ஆங்கும்ஓர் எண்ணத்துள் ஆழ்ந்தான் இறை. |
காஞ்சனன் தூயவன்
இப்படியோர் போற்றும் அறத்தின் இளையாளை அப்படியா செய்திறந்தான் அன்புமகன்-எப்படிநாம் கண்டாலும் காஞ்சனன் நெஞ்சாலும் கைவாளின் தொண்டாலும் தூயனே ஆம்! |
5 |
உரிய தண்டனையை உதயன் பெற்றான்
வழிவந்த கன்றைத்தேர் வாட்டியதால் மன்னன் வழிவந்த சேயை மடித்தான்-வழிவந்த யான்பெற்ற மைந்தனவன் காமத்தால் காஞ்சனனால் தான்பெற்ற தண்டம் தகும். |
10 |
மணிமேகலையைச் சிறையில் இடுக மகனுடலுக்கு இறுதிக் கடன் நடக்க
துறவோர் அருளிய தொல்லறநூற் சீர்த்தி இறவாது காத்தல் எனது-மறவாக் கடன்! மேகலைசிறை காண்கவே மைந்தன் உடன்மேவ உற்ற கடன். |
15 |
அம்மா உன்னையும் சிறையிட வந்தோம்
மன்னனை வாழ்த்தியே மாமுனிவர் சென்றனர் அன்னம் நிகர்த்தானை அங்கிருந்தோர்-தன்னம் தனிக்கண்டு சாற்றுவார், அன்னாய் சிறைக்கே உனைக்கொண்டு போவதும் உண்டு. |
20 |
சிறையில் உனக்கென்ன குறைச்சல்?
இறையும் உனக்கீந்த இன்னல் மிகுந்த சிறையும் திருக்கோயி லாகும்-நிறையும் படியாரை அச்சிறையில் பார்ப்பின்எம் அம்மைக் கடியார் அலால்மற்றி யார்? |
ஊண் இட்ட உண்மை மறப்பாரோ?
மாணிட்ட மாதர்க் கரசேஇவ் வையத்தார்க் கூணிட்ட உன்னை மறந்தவர்கள்-காணின் இறந்தவர்கள் என்க அருள்சேர்ந்த நின்தாள் பிறந்தார் பெறத்தக்க பேறு. |
25 |
அரசுக்கு எதிர்ப்பு
என்றார் மணிமே கலையைச் சிறைக்கழைத்துச் சென்றார் இதையறிந்தோர் சீறியே-ஒன்றாய் விடிவீரெம் தாயையே காவலரே நின்றால் படுவீரென் றார்கள் பரிந்து. |
30 |
மணிமேகலை மக்களுக்கு அறங் கூறினாள்
ஏவலரென் றெண்ணீரோ என்னைச் சிறைப்படுத்தல் காவலரின் கண்ணளையாம் காணீரோ-தீவழியே நண்ணலும் ஏற்குமோ மக்காள் நலிவுசெய எண்ணமும் ஏற்காதென் றாள். |
35 |
மணிமேகலை சிறையில் சேர்க்கப்பட்டாள்
ஊர்ச்சா வடியைச் சிறையாக்கி ஒன்றவே நீர்ச்சாலும் கூழ்க்கலமும் நேர்வைத்துக்-கூர்ச்சுடர் வேல் வைத்தாரை வைத்துமணி மேகலையை உள்ளடைத்து வைத்தார்கை யோடுகொண்டு வந்து. |
40 |
சிறையிலும் மக்கள் சீற்றம்
காவிரிப்பூம் பட்டினத்துக் கண்ணகியின் பெண்ணாளை நீவிரித்துன் பப்படுத்தல் நேர்த்திஎன்று-தாவிச் சிறைகாப்போர் வேலும் சிதைத்தும்மை வைத்து முறைகாப்போர் எங்கென்றார் மொய்த்து. |
கூறினோருக்கு மணிமேகலையின் ஆறுதல
வம்பிட்ட மக்களின் முன்வந்து மாதரசி கும்பிட்டுக் குற்றம் இதுவென்றாள்-வெம்புற்றே அம்மாநின் றாவதென்ன அம்மன்னன் தீயனென்றே சும்மாநின் றார்மெய் துடித்து. |
45 |
மணிமேகலைக்குச் சாப்பாடு வந்தது
நின்றிருந்தார் மக்கள் நினைவு பலிக்கவில்லை என்றிருந்தார் மாதின் எதிர்வணங்கிச்-சென்றிருந்தார் ஈப்பாடு தாரோனின் ஏற்பாட்டாற் சிற்சிலர் சாப்பாடுதாம் கொணர்ந்தார் தாய்க்கு. |
50 |
சிறைப் பணியாளர் கூற்று
கேழ்வரகின் கூழ்கொடுக்கச் சொன்னார்; கெடுவார்கள்! வாழ்வரசுக் கீய மனம்வருமா-தாழ்விலராய் வாழையிலும் யாம்உனக்கு முப்பழம் பாற்சோறும் வாழையிலை போட்டிட்டோம் வந்து. |
55 |
இனி வேண்டாம் கூழே போதும்
என்று சிறைப்பணி யாளர் இயம்பினார் ஒன்று மணிமே கலையுரைப்பாள்-இன்று கொடுத்தீர்! இனிஎனக்குக் கூழ்போதும் என்றாள் வடுத்தீர்ந்த மங்கைநல் லாள். |
60 |
தெருவார் தருவார்
பாலடிசில் நெய்யடிசில் பத்துக் கறியோடும் காலையிலும் மாலையிலும் கன்னிக்கே-சாலத் தெருவார் தருவார் சிறையாளர் கொண்டு தருவார் திருவார் தமிழ்க்கு. |
சிறை பணியாளரைச் சீர்த்தி கேட்டாள்
இறைவிநற் சீர்த்திதான் ஏவலரைக் கூவிச் சிறையினில் மேகலையின் செய்தி-அறைகென்னக் கேழ்வரகை ஒன்றிரண் டாக்கிக் கிளரிய கூழ்தருவோம் கொள்வாள்என் றார். |
65 |
சிறையில் மணிமேகலையைப் பார்த்தாள் சீர்த்தி
ஒருநாள் சிறைகாணல் உற்றனள் சீர்த்தி திருநாள் திருக்கச்சிக் கோயில்-இருநாளும் உண்டாலும் தீரா உளுத்தவடை உண்டாள்கற் கண்டு மணிமே கலை. |
70 |
சீர்த்தி மன்னனிடம் ஓடினாள்
நிறைந்திருந்த நெஞ்சின் மணிமே கலையை மறைந்திருந்து கண்டஅம் மன்னி-பறந்தோடி மங்கட்டும் என்னேல் மணாளா அவள்என்பால் தங்கட்டும் என்றாள் தனித்து. |
75 |
உன்சார்பில் மணிமேகலை இருக்கட்டும்
சிக்கிச் சிறைவலையில் தீங்குபடும் அப்பசுங்கி ளிக்கிச் சிறைநீக்கம் தக்கதே-புக்கில் இருந்தால் இருக்கட்டும் என்றான்¢தன் காதல் மருந்தால் பிழைக்கின்ற மன். |
80 |
கொடியவளுக்குக் கூழும் கொடாதீர்
அரண்மனையில் ஓர்பால் அடைத்தாள்¢ சிறையில் திலண்முகில் கூந்தல் திருவைப்-புரண்டழவே கூழும் கொட தீர் கொடியவட்கென் றாள்தன்கீழ் வாழும் பலர்க்கரசி மற்று. |
ஒன்றும் மணிமேகலைக்குக் கொடோம் என்றவர்கள் எல்லாம் கொடுத்து வந்தார்கள்
ஒன்றும் கொடோமென் றொரு தட்டில் பண்ணியங்கள் அன்றும் கொடுத்தார் அதன்பின்னும்-என்றும் குளநீரும் சோறும் குறையாது தந்தார் இளநீரும் வேளைக் கிரண்டு. |
85 |
'மணிமேகலை செத்து விட்டாளா?' என்று சீர்ச்சி கேட்டாள்!
இட்டினியும் காக்க இருப்பாரை மன்னிதான் பட்டினியாற் செத்தாளா பாவை? என்று-கிட்டி வினாவினாள் உள்ளாள்என் றோதலும் சிங்கக் கனாவினாள் உள்அஞ்சி னாள். |
90 |
பணிப்பெண்களின் மேல் ஐயப்பட்ட சீர்த்தி தன்மனமொத்த பாங்கிமாரிடம் சொன்னாள்
மனமொத்த தன்பாங்கி மாரை அவள்சாவை இனமொத்துக் காப்பீர்கள் என்றாள் புனலற்ற நாவுக்குத் தேன்வார்க்கும் நல்லமணி மேகலையின் சாவுக்குத் தாளா துலகு. |
95 |
பாங்கிமார் மடியில் கட்டிவந்து கொடுப்பார்கள்
நொடியும் மறவாமல் நூறு கறிகள் மடியும் தெரியாமல் மாதர்-அடிசிலொடு கொல்லையால் வந்து கொடுப்பார் அரசியிடம் இல்லையே என்பார் இனிது. |
100 |
சாவாள் என்று எண்ணினேன்! அவள் மணலிற் பிடுங்கிய வள்ளிக் கிழங்கு
உணற்கிழந்து சாவாள்என் றெண்ணினேன் ஓங¢கும் மணற்கிழங்கு போலும்அவள் வாழ்ந்தாள்-தணற்பிழம்பில் பொற்பைக்காண் பேன்எனில் வையம் பெறாதிவள் கற்பைக்காண் பேன்என்றாள் காய்ந்து. |
பூக்காரி மகனை அழைத்து மணிமேகலையின் கற்பைக் கெடுத்துவிடு என்றாள் சீர்த்தி! அவன் பட்டாடை கேட்டான்
பூக்காரி பெற்றஒரு பொன்னனைக் கற்பழிக்கும் தீக்காரி யத்தில்நீ செல்லென்றாள்-நாக்குநீர்ச் சொட்டோடு தூயசீர் மன்னியே வேண்டுமே பட்டாடை என்றான் பணிந்து. |
105 |
கடுக்கன் வேண்டும் என்றாள்
காதுக்கும் கல்லிழைத்த நல்ல கடுக்கன்இப் போதுக்குத் தந்திட்டாற் போதும் என்றான்-மாது மணிமே கலையின் மனம்பறிக்கச் சீர்த்தி அணிஎன் றளி¢தாள் அவை. |
110 |
பொன்னன் உடுத்துக் கொண்டு எழுந்தான்; விழுந்தான்
காலுக்குத் தோற்செருப்புக் கையில் விரித்தகுடை மேலுக்குக் காண விளக்கொருகை-ஏல எழுந்தான் இரவிலே வேட்டி தடுக்க விழுந்தான் விலைபோகா மாடு. |
115 |
மணிமேகலை இல்லை, பிச்சைக்காரனைப் பார்த்தான் பொன்னன்
ஆசைவைத்தேன் உன்மேலென் றேநுழைந்த அப்பொன்னன் மீசைவைத்த ஓராளை உட்கண்டான்-ஓசையின்றிச் சீர்த்தியிடம் ஓடிவந்தான் செய்தி தெரிவித்தான் பார்த்ததுபொய்; பார்போய்என் றாள். |
120 |
ஆண் பிள்ளை தான் என்று பொன்னன் ஓடி வந்தான்
காட்டுக்குப் பாய்கின்ற கால்வாய் நிகர்பொன்னன் வீட்டுக்குள் ஓடி விடலைகண்டே-ஓட்டம் பிடித்தான் பிடித்தால் பிடிகாணாப் பையன்! கடித்தாள் அரசிதன் கை. |
அரசிக்குப் பெண்ணாகப் பொன்னனுக்குப் ஆணாகத் தோற்றமளித்தாள் மணிமேகலை
தான்கண்டாள் தையலையே அவ்வறைக்குள்! பொன்னனவன் தான்கண்டான் ஆடவனைக்! கண்டிருவர்-மேனடந்தார் கண்டுமலைத் தேன் என்றான் காட்டுப்பூக் காரிமகன் கண்டுமலைத் தேன்என்றாள் காம்பு. |
125 |
எனக்கு அமிழ்து மணிமேகலையே!
உண்ணாமல் வாழ்கின்றாள்! உற்றொருவன் கற்பழியப் பண்ணாமல் மாற்றுருவம் பற்றுகின்றாள்-தண்ணார் தமிழன்றோ சாருநெறி தன்னலமே எண்ணாள் அமிழ்தன்றோ அன்னாள் எனக்கு. |
130 |
என் மகனை மணிமேகலை கொல்லவில்லை!
என்மகனைக் கொன்றாள் இவளென்றால் அம்முனிவர் நன்மகளைக் கொண்டாட நாணுவரே-தன்மகனாய்த் தன்மகளாய்த் தந்தையாய் இவ்வுலகைக் காணுகின்ற பொன்மகளே என்றன் புகல். |
135 |
மணிமேகலையைக் கொல்லுவது அறமா?
பண்டு துறந்தோர் குறைபாடு பட்டவரைக் கண்டு நிறைபாடு காண்பார்போல்-தொண்டுதவம் என்பாளை வீழ்த்தல் இளநீர்க்காய் ஈன்தென்னை மென்பாளை வீழ்த்தல்என் றாள். |
140 |
சீர்த்தி வாய்மை கண்டாள்!
அறமா மணிமே கலையை அழித்தல் அறமா அதுமா நிலமாள்-திறமா எனஅறி வைந்திலும் எய்தினாள் ஆறாம் மனஅறிவில் வாய்மை கண்டாள். |
பூவை விலக்கி மணிமேகலையின் பொன்னடியைப் பூணேனா?
சாவை விலக்கித் தமிழ்த்தொண்டு செய்யேனா பூவை விலக்கியவன் பொன்னடியைத்-தேவைஎனப் பூணேனா என்தலையில் பூவாய் பொழியும் அறம் காணேனா பற்றுக் கடந்து. |
145 |
மணிமேகலை எதிரில் சீர்த்தி
கலையுணர்ந்த மேலோரும் காணற் கரிய நிலையுணர்ந்த சீர்த்தி நிறைபால்-முலையாவின் கன்றேபோல் சென்று மணிமே கலையின்முன் நின்றே அழுதாள் நெடிது. |
150 |
சீர்த்தியின் விண்ணப்பம்
ஒறுத்தோம் சிறையினில் உய்த்தோம் இடவும் மறுத்தோம் இடரெலாம் வைத்தோம்-பொறுத்தருள்க தீயைச் சிறுவீடு சேரினும் தீவைத்த சேயைத் தழுவும்தாய் கை. |
155 |
நான்தான் தவறு செய்தேன் என்றாள் மேகலை
முந்தா தடங்கி மொழிந்திட்ட சீர்த்திக்குச் செந்தா மரைவாய் திறந்தாள்முன்-வந்தது நான்செய் தவறு பொறுத்ததாம் நல்லோய்நீ தான்செய்த தென்ன தவறு. |
160 |
மகன் செத்தது உனக்குத் துன்பம்! என்னைச் சிறையில் வைத்தது எனக்கு மகிழ்ச்சி
உன்னழகைப் பாரில் உரித்துக்கொண் டேபிறந்த பின்னழகும் முன்னழகும் பெற்றமகன்-என்னழகால் செத்தது துன்பம் உனக்குச்! சிறையில்எனை வைத்தது மாமகிழ்ச்சி எற்கு. |
அரசனிடம் அரசி
இலவை இதழ்என்னும் மன்னி மறுவில் நிலவைச் சிறைவைத்தல் நேர்மை-அலவென்று காவலன்பால் சொன்னாள் கடிது கருங்குயிலின் கூவலன்பால் ஒப்பினான் கோன். |
165 |
மணிமேகலையை விடுதலை செய்தார்கள்
அணங்கின் அடிமலர் மன்னவன் மன்னி வணங்கி அரண்மனை வாயில்-பிணங்கி இருந்த தமிழருக் கீந்தார் சிறையில் இருந்த தமிழை எடுத்து. |
170 |
சிறைமீண்ட செல்விக்கு வரவேற்பு
நீர்கும் உணவுக்கும் கையேந்தி நிற்கின்றார் யார்க்கும் தமிழ்வேண்டும் என்றேற்றார்-வேர்க்கே அறவொன்று வேண்டும் அதற்குத் தமிழின் நெறிஒன்று வேண்டுமென் றார். |
175 |
தமிழில்லார் அறிவில்லார்!
அத்தமிழ் இல்லார் அறிவில்லார் அன்னவர்க்குத் குந்தக் குடிசை குடிக்கக்கூழ்-கந்தை அடையவிடாரே அறிவின் இடையார் அடைவிப்பார் முற்றுணர்ந் தார். |
180 |
தமிழிலக்கியம் கண்டவர்க்கே உணர்வு வரும்
கடையர் அறிவிலார் இடையர் சிறிதே உடையர்; தலையார் உணர்ந்தார்-தடையின்றி வெள்ளத் தமிழின் இலக்கியம் வேண்டினோர்க் குள்ளத் துணர்வு வரும் |
இல்லாரை எள்ளுவர் இன்னிசை வெண்பா
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தகவென்ற நேயத்து வள்ளுவர் வாய்மையை உள்ளுக உள்ளாரை எள்ளுவர் இல்லாதார் என்று. |
185 |
மணிமேகலை உலக அறவிக்குச் சென்றிருந்தாள்
என்று கலத்தோடும் ஏற்ற உணவோடும் நன்று மணிமே கலைநடந்து-சென்றிருந்தாள் தாம்புகார் ஆயின் தழைவிலைஎன் றன்றோர்வாழ் பூம்புகார் மன்றம் புனைந்து. |
190 |
மேகலை காஞ்சி சென்றாள்
அறவணரும் அன்னம் சுதமதியும் காஞ்சி உறஇருக்கும் செய்தி உணர்ந்த-அறமா மணிமே கலைதான் மணிக்கல மென்னும் அணிமேவச் சென்றிட்டாள் அங்கு, |
195 |
மன்னனின் விண்ணப்பம்
அரசனும் மற்றும் அலுவலர் தாமும் வரிசையின் வந்து வணங்கித்-திருவார் அறவணரே அம்மையே காஞ்சியின் அல்லல் அறவருள வேண்டுமென்றார் ஆங்கு. |
200 |
மற்றும் வேண்டுகோள்
மழையில்லை கஞ்சி வளமில்லை எம்மேற் பிழையில்லை எங்கும் பெரிதும்-தழைந்துள்ள பஞ்சம் அகற்ற அருட்பஞ்சமா என்றுரைத்தான் நெஞ்சு துடித்தரசன் நின்று. |
அறவணர் ஆறுதல்
மன்னர் நிறைகொற்றம் வாழ்கவே காஞ்சிதான் நன்னர் நலமடைதல் திண்ணமே-என்னும் நிலைக்கும் நினைப்புடையோம் மாது மணிமே கலைக்கும் நினைப்புண்டு காண். |
205 |
மேலும் அறவணர்
சாற்று கவிகை அரசர்மனத்¢ தாழ்வெல்லாம் மற்றும் மணிமே கலைஎன்று-போற்றும் அடிகள் உரைத்தார்! அவளும் உரைத்தாள் மிடிகள் விலகிடும் என்று. |
210 |
மேலும் மணிமேகலை சொன்னாள்
மேலும் விளம்புவாள்; வேந்தேநீ வாழ்கநின் கோலும் கிடப்பக் கொடியோர்க்கு- மேவம் கிடப்ப்க் கிடைநெல் ஒருபால் குவிந்து கிடப்பதேன் என்றாள் கிளி. |
215 |
மற்றும் மணிமேகலை
உள்ளார் இசைவேண்டி இல்லார்க் குதவுவர் உள்ளார் கடனென் றிலார்க்குதவ-உள்ளுக! உள்ளார் உடைமைஎனல் இல்லார் இழந்ததே பள்ளநீர் பாய்ந்தநீ ராம். |
மேலும் மணிமேகலை
இனமென எண்ணி இடுக! இடாரேல் மனமெனும் மங்கை தனது-தனிமை பொறாது மறுபுலம் போதலும் உண்டு உறாதார்க் குதவலும் உண்டு. |
மணிமேகலை காஞ்சியிலே அடிவைத்தால் பஞ்சம் பறந்தது!
கல்லார்க்குக் கலவி அருளும் புலவரைப்போல் இல்லார்க்குச் சோறுகறி இட்டாள்மேல்-செலிவிக்கே ஆரும் புகழ்வைத் தளித்ததே காஞ்சிக்குத் தேரும் திருவிழா வும். |
225 |
காஞ்சிக்குத் தேரும் திருவாழாவும்
கல்லார்க்குக் கல்வி அருளும் புலவரைப்போல் இல்லார்க்குச் சோறுகறி இட்டாள்மேல்-செல்விக்கே ஆரும் புகழ்வைத் தளித்ததே காஞ்சிக்குத் தேரும் திருவிழா வும். |
230 |
மணிமேகலையே சோறுகறியாக்கத் தொடங்கிவிட்டாள்!
ஈயப் பெரும்பானை இட்டுச்சோ றாக்குவோர் ஒயப் பொருள்கள் உதவுவார்-தூயமணி மேகலையும் சோறாக்கி வெஞ்சனம்செய் வாள்பிஞ்சுப் பாகலையும் சென்று பறித்து¢ |
தனக்கு வரும் புகழையும் மற்றவர்க்குப் பயன்படுத்தும் செய்கை அரியது!
உள்ளவர் தத்தமக் குள்ளது போகமற் றுள்ளதை இல்லார்க் குதவுகின்ற-உள்ளம் அரிதன்று; பெற்றபுகழ் மற்றவர்க் காக்கல் அரிதென் றறவணர் சொன் னார். |
மழை பெய்த்து காஞ்சியில்
அழையாது வந்தஎம் அம்மைகால் வைக்கப் பிழையாது யாமும் பிழைத்தோம்-மழையா மழையும் மழைத்தது வாழ்கின்றோம் என்றார் தழையாது காஞ்சியார் தாம். |
240 |
காஞ்சி மன்னன் வணங்கி வழியனுப்பினான்
அறவணர் ஆய்ந்த சுதமதி யோடும் உறவண மேகலை ஓவம்-புறவணம் கால்வைத்தாள் அக்கால் தலைவைத்தான் நன்றி என்றான் கோல்வைத்த காஞ்சியின் கோ |
245 |
மணிமேகலை போகக்கண்ட மங்கைமார் வாழ்த்தினார்கள்
முன்னாலே சோறின்றி முட்டுண்டோம் அம்மையே உன்னாலே உள்ளோம் என்றேவாழ்த்திப்-பொன்னாலே பூணிட்ட செவ்வுலக்கைப் பாட்டுப் புதுக்கினார் நாணிட்டு நங்கையினைக் கண்டு. |
250 |
உழவர் வாழ்த்தினார்கள்
பல்வாளை மேயும் பழனத்தைத் தாண்டியே செல்வாளை எங்கள் சிறுமையினைக்-கொல்வாள் நினையாமை வாழ்வோமா என்றார்கள் நீரார் சினையாமைச் செய்யுழவர் சேர்ந்து. |
255 |
தையலார் சாப்பிட்டுப்போகக் கெஞ்சினார்கள்
மின்னுக்கும் நல்லறத்து வேளுக்கும் முன்நடக்கும் பொன்னுக்குப் பூவெடுத்தார் போலெடுத்த-முன்கைகள் கூப்பிட்டு வாழ்த்திய கோதைமார் கெஞ்சினார் சாப்பிட்டுப் போம்படியோ தாழ்ந்து. |
மற்றும் பலர் வாழ்த்தினார்கள்
கல்லாமை நீக்கிக் கடும்பசிக்கு நீர்ச்சோறும் இல்லாமை நீக்கினீர் என்றுரைத்துப்- பல்லோர்தம் போரடித்த நெல்லைஎலாம் பொன்னாக்கிப் போகவரத் தேரடித்துக் கொண்டிருந்தார் சென்று. |
260 |
மற்றும் மக்கள் வாழ்த்து
கண்பொங்கக் கையெடுத்தால் காலெடுக்கும் செல்வரிடம் வெண்பொங்கல் வாங்கி விலாப்புடைக்க-உண்கென்றாய் உள்ளளவும் ஊருக் குழைத்தவளே வாழ்கென்றார் எள்ளளவும் யாம்மறவோம் என்று. |
265 |
மற்றும் பலர்
என்றும் அறியா எமைஈன்ற தாய்¢போலும் ஒன்றும் எதிர்பாரா தூர்க்.குழைத்தாய்-இன்றே எமைவிட் டகன்றாலும் எம்முள்நீ உள்ள சுமைவிட் டகலாதென் றார். |
270 |
மணிமேகலை வெண்பா முற்றும்.
|