LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள்

மணிமேகலை வெண்பா - பகுதி 2

                    மணிமேகலை வெண்பா - பகுதி 2

 

உதய குமாரன் தேரொலி


ஓரொலி கேளாய் உதைய குமரனவன்
தேரொலி போலும்! தெரிவைஎன்-பேரில்
விருப்புடையான் என்பர் விளைவறியேன்; நெஞ்சில்
நெருப்புடையேன் என்றாள் நிலவு.



மணிமேகலையே பளிங்கு மாளிகையின் உள்ளே போய்விடு


கேட்பது தேரின்மணி ஓசைதான் கேள்உன்னை 
மீட்பது தேரின் மணிமேகலையே-வாட்போர்
உதையன்பால் தோன்றாதே மாளிகையின் உட்போ
இதையன்பால் ஏற்கஎன்றாள்.
145



பறந்தோடினாள் பச்சை மயில்


ðறந்திட்டாள் பச்சை மயிலனையாள் ஓடித்
திறந்த பளிக்கறை சேர்ந்தாள்-சிறந்த 
உதையன் மணித்தேரும் உற்றது பாங்கி
அதையும்கண் டாள்உரைப்பாள் அங்கு.
150



அவன் மட்டச்சரக்கை என்னிடம் விற்கட்டும்


பளிக்கறையில் சென்றாயா? தாழிடுவாய்! பச்சைக்
கிளிக்கறைவ தைப்போல் கிளத்தேன்-வெளிப்புறத்தில்
ஐந்துவிற்க டைத்தொலைவில் நானிற்பேன் ஆள்என்பால் 
வந்துவிற்க மட்டச் சரக்கு.
155



உதயகுமரன் வந்து, 'நோய்க்கு மருந்து
வாங்கிவா' என்கின்றான்


நிறுத்தைய என்னத், தேரோட்டி நிறுத்தச்
சிறுத்தை குதித்துச் செவியை-உறுத்தவே
பாங்கிõ£ மேகலையுன் பாங்குள்ளாள் என்நோய்க்கு
வாங்கிவா என்றாù¢ மருந்து.
160



உனக்கு அறிவுறுத்த என்னால் முடியுமா?


நரைமுடித்து நல்லிளமை நாணி நடுவின்
உரைமுடித்தோற் குற்ற மருக!-விரைவில்
அரசுக் கியலும் அறிவும் தரப்பெண்
ºரசுக் கியலுமா முன்?



காமம் ஒரு தீ !


ஆயினும் ஒன்றுகேள் ஆடவர்க் குக்காம 
நோயினும் மாப்பெருநோய் இல்லை-தீயினும்
தீயது தீண்டாத போதினும் தீய்த்தலால்!
நீயது நன்று நினை
165



பெண்ணழகு நிலையற்றது


தோலழ கெù¢ப திளமை தொலையி இல்லை
மேலழ காடை அணியாலாம்-ஞாலத் 
திதுகொண்டு மேலோர் இடர்கொள்ளார் என்றால்
எதுகொண்டிங் கெய்தினை நீ
170



உள்ளே உலவும் மணிமேகலையை உதயன்
கண்டு விட்டான்


என்றிளங் கோவுக்கு மங்கைஇது சொல்லுகையில்
நின்றிளங் கால்நோவு நீளாமல்-பின்துறையை
நீங்கு பவளப் பளிக்கறைக்குள் நின்றாள்ஓர் 
பாங்கு பவளக் கொடி
175



உள்ளே புக வாயில் தெரியவில்லை


வெளிக்கறி விக்கும் அகத்தையெலாம் அந்தப்
பளிக்கறைò¤ற் பாவையைப் பார்த்தான்-கிளிக்கறையா?
தூயில் தனைஅடைவாய் தூயோயென் றோடினான்
வாயில் தனையறியான் மற்று.
180



மணிமேகலையா? ஓவியமா?


நற்பளிங்கின் உள்ளேநான் நண்ணல் அரிதேயோ!
நிற்பளிங்கு மாரிழையோ! ஓவியமோ-பொற்கொடியே
எத்திறத்தள் மேகலைதான் என்றான் சுதமதியாள்
அத்திறத்தைக் கூறுவாள் ஆங்கு.



மணிமேகலை மனத்தை மாற்ற நீ யார்?


நோற்றல் உடையா÷¢; நுவல்காமம் நண்ணாத 
ஆற்றல் உடையஆள்; அவளுள்ளம்-மாற்றவே
நீயார்என் றாள்பாங்கி; நின்ற உதையனும்
நீயார்என் றான்கொதித்து நின்று.
185



சுதமதி வரலாறு


மாருத வேகன் மடக்கி எனைமணந்தான்
தேருதல் செய்யவே என்தந்தை-ஊரெலாம் 
தேடினான் காவிரி தென்கடல் சேரிடத்து
நாடினான் நான்கண்டேன் அங்கு.
190



மேலும் கூறுதல்


சங்க தருமனால் புத்தன் சமயத்துச்
சங்கம் அடைந்தேன்! தருமங்கள்-தங்குமொரு
நாவே, பிறிது நவிலலும் இல்லைஇளங் 
கோவேவாழ் கென்றாள் பூங்கொம்பு.
195



மணிமேகலையை நான் அடைவது சின்னது


இன்னது கேட்ட உதையன் எனக்கிது 
சின்னது! சென்றுசித்தி ராபதியால்-பொன்னதுவே
மின்னதுவே என்னுமணி மேகலையை நானடைவேன்
என்னதுவே இன்பமென் றான்.
200



என் மனம் அவன்மேற் சென்றது பிழை


வாடி உதையன் மறைந்தபின் மற்றந்த
ஆடி அறைதிறந்து பாங்கியை-நாடி
இழந்தையோ நின்றேன் எதிரிபால் நெஞ்சைè¢
குழந்தையோ அன்னதென்றாள் கொம்பு.



என்மனம் அவன்மேற் சென்றது மீண்டது


மின்றிறந்து மூடினாற் போலுமிம் மெல்லியுள்ளம் 
சென்றது மீண்ட தெனினுமந்-நன்றிலன்மேல்
போமம் மனந்தான்என் கற்பைப் புரைசெய்தால்
காமம் வலிதோ கழறு
205



காமம் ஒருபுறம் உணர்வு ஒருபுறம்


புணர்வு நிலைதேடிப் போனது சாமா
றுணர்வு நிலைபெறுதல் உண்டோ?-கிணறு 
பலிகேட்கும் ஓர்பால் பழிதீர் நிலைகூம்
ஒலிகேட்கும் ஓர்பால் செவி,
210



மற்றொரு மணிமேகலை நற்றவ முதியோன்


மணிமே கலைஎன்ற ஓர்முதியோள் வையம்
மணிமே கலைஎன்ற மாப்பேர்-அணியும்
பெரும்புகழும் ஆன தவப்பயனும் பெற்றோள் 
கரும்புகளின் கண்ணேர்வந் தாள்.
215



முதியோளைப் பணிந்தாள் மணிமேகலை


அன்னை அடிபணிந்தார் ஆன அருளேஎம்
மின்னை அடைந்தோம்என் றார்இருவர்-பின்னையே
என்ன துயர்என்றாள் எல்லாம் துறந்தாளும்
அன்னதுயர் பாங்கிசொன்னாள் அங்கு.
220



சுதமதி சொன்னாள்


பாவெடுக்கப் பாவலரும் பார்க்குமணி மேகலைதான்
பூவெடுக்க வந்திட்ட போதமுதை-நாவெடுக்கக்
காலெடுத்தான்: வாயிற் கதவறியான்; தேரேறிக்
கோலெடுத்தான் அவ்விளங்கோ.



சுதமதி தொடர்ந்து சொல்கின்றாள்


காண்பேன் அவள்திறத்தைக் கண்டமட்டும் எனதிறந்தான் 
வீண்போதல் இல்லை விளம்புங்கால்-ஆண்சிங்கம்
என்றுந்தித் தேர்ஏறி ஏகும் உதையன்
என்றுந் திருந்தான்என்றாள்.
225



உதயகுமரனிடம் அகப்படாமல் சக்கரவாளக்
கோட்டம் போய்விடு


பின்னும் அற்றே பின்னு மற்றே பித்தனுளம்! காமந்தான்
இன்னுமற்றே போகவில்லை என்செய்வாய்?-நன்னுதல் 
அக்கர வாளன் அகப்படுத்தல் இல்லாமல்
சக்கரவா ளக்கோட்டñ£ சார்.
230



சக்கரவாளக் கோட்டமா?


என்று முதியோள் இயம்பச் சுதமதி
ஒன்றுக்கு வேறொருபேர் ஒன்றுமா?-தொன்றுபிணக்
கோட்டமா சக்கரவா ளக்கோட்டமா இதுவே 
நாட்டமா னாள்பாங்கி நன்று.
235



சக்கரவாளக் கோட்டத்தின் கதை


சுடுகாட்டுக் கோட்டத்தை வேறு பெயரி
னொடுகாட்டல் ஏனோ உரைத்து-விடுகென்று
பாங்கி பகர முதியோள் நெடிதுரைக்க
வாங்கி மகிழ்வாள் மணி.
240



கதை நடுவில் தூக்கம்


காவிரிப்பூம் பட்டினமும் காடும் பிறவுமவள்
நாவிரிப்பப் பாங்கி நடுச்செவியேற்-றியாவரிதை
வாங்கிக் கிடப்பார்கள் என்பாள்போல் மண்ணிலுற்றத்
தூங்கிக் கிடந்தாள்மெய் சோர்ந்து



உதையன் தொல்லை ஒழிந்தது


துணிபல்ல வம்மான் துயர்எய்தல் என்றே 
மணிபல்ல வம்சேர்த்தாள்! வாட்டம்-தணித்தாள்.
தணிமே கலைதான்! மணிமே கலையைப்
பிணியானப் பித்தன் இனி.
245



நடுத்திட்டில் விட்டு எடுத்தாள் ஓட்டம் முதியோள்


பன்னாள் நடத்தும் படுகடலை நன்னாவாய்
தன்னால் தவிரத்துமணி மேகலையைத்-தென்பால் 
கடனடுவில் சோர்வுற்ற கண்ணாளை விட்டே
உடனகன்றாள் ஓதுமுதி யோள்.
250



சுதமதியிடம் முதியோள்


எங்குற்றாள் மேகலைதான் என்றிருந்தாள் பாங்கிதான்
அங்குற்றாள் மாமுதியோள் அன்புடையாய்-மங்காப்
பழமை மணிபல்லவம் சேர்த்தேன் பார்ஓர் 
கிழமையினில் மீள்வாள் கிளி.



சுதமதிக்கு முதியோள்


மன்னன் மகனுக்கும் வாய்மை பலகூறி
அன்னம் தனையணுகல் ஆகாதென்-றின்னம்
பலவும் பகர்ந்தேன்நற் பாங்கி உனக்குச்
சிலவும் தெரிவிப்பேன் கேள்
260



அம்மாவிடம் இதை அறிவி


ஊறு தவிர்ந்துமணி மேகலைஇவ் வூர்வருங்கால்
வேறு வடிவமே மேற்கொளினும்-கூறின்
உனக்°ñ¢ ஒளியாள்; இதனை அவள்தாய்
தனக்கும் ஒளியாமற் சாற்று



என்பேர்தான் மணிமேகலை


மாதவி பெற்ற மகளுக்கென் பேரையே 
கோதவி கோவலன் வைத்திட்டாù¢-ஈதுரைப்பாய்
மாதவிக்கு நாளும் மணிமே கலைமனத்தின்
தீதவிப்பாள் என்றதையும் செப்பு.
265



சுதமதி மாதவிக்கு!


என்று மொழிந்தவள்தான் ஏகச் சுதமதியும்
சென்று தெரிவித்தாள் தேன்மொழிக்கே-கன்றைப் 
பிரிந்தா வருந்தாதா? பெண்ணைப் பிரிந்தால்
வருத்தாதா பெற்ற மனம்?
270



மணிபல்லவத்தில்


மணிபல் லவத்தில் மணலில் துயின்ற
மணிமே கலைகண் மலர்ந்தாள்-துணிவிழந்தாள்
பண்டறி யாதனவே பார்த்தாள் உறவாரைக் 
கண்டறி யாதகற் பண்டு.
275



முதியோள் விட்டுப்போனது அறமா?


ஆங்கிருந்தேன் என்னை அழைத்திங்கு வந்திடுமுன்
தூங்கி¢னேù¢! அந்நேரம் தூரத்தே-ஏங்கவிட்டுச்
செல்லல் அறமா? செயத்தக்க இன்னவெனச்
சொல்லல் அறமா தொடர்ந்து
280



கண் காணத இடத்தில் கலங்குகின்றேன்


தேரு மிலாது தெருவு மிலாதுழையார்
யாரு மிலாதிருக்கும் இவ்விடத்தில்-சோருகின்ற
கண்ணீரும் நானும் கதறுங்கால் என்உறவீர்
கண்ணீரோ சற்றும் எனை?



அம்மாவும் உதவவில்லை; அப்பாவையும்
கண்டதில்லை


பழிகூறிக் கொன்ற ஒரு பாண்டியனை உண்மை 
வழிகூறி ñ£ளப் புரிந்த-எழிலான
அப்பாவை யுங்காணேன் அன்றும்காணேன் இன்று
அப்பாவை யுங்காணே னால்.
285



மரமா தேறுதல் கூறும்? விலங்கா தேறுதல் கூறும்?


தீமையாய் இங்குத் திரிகின்றேன் தெங்குபலா
ஊமையாய் இங்கிருக்கும்; ஒன்றுரையா-ஆமையும் 
புள்ளிழுத்துக் கொள்ளும் புனற்கரைமா உண்டுதலை
உள்ளிழுத்துக் கொள்ளும்எனை ஓர்ந்து.
290



கோலெடுத்துக் கொண்டு குறுக்கில் ஓடுகின்றது குரங்கு


தேனோடும் பூவிற் சிறையோடும்! புல்லுக்கு
மானோடும் கொக்கு மடையோடும்!-நானோடி
மேலெடுக்கும் வேலை எதென் றேன்குறுக்கே முள்வேலங் 
கோலெடுக்கும் ஓடும் குரங்கு
295



நண்டும் வண்டும் விளையாடும்! நானுமா
விளையாடுவேன்!


நண்டு விளையாடும்; நன்மா நிழற்காரை
கண்டு மயிலாடும்; காவித்தேன்-மொண்டு
விளையாடும் வண்டு; விளையாட வாநான்!
களையா டினஎன்றன் கண்.
300



முதியோள் வந்தாள்


திட்டில் அழுவாள் சிரிப்புக் கரைகாண
எட்டி முதியோள் எடுத்த¬íத்துè¢-கட்டிக்
கரும்பே உதைய னிடமிருந்து காத்தேன்
திரும்பநான் சொன்னபடி செய்.



தவð¢பெரியோர் அறம்உரையார் மிகச்சிறியை என்று


புத்தன் புகன்ற திருவறத்தை நீ அடைதல் 
கத்தன் றென உணர்க கண்மணியே-புத்தம்
புதிய இளமேனி காணும் புலவர்
முதிய மறைஉறையார் முன்.
305



நினைத்த உருவம் கொள்ளும் புனைவினை


நினையும் உருவத்தை நீயடையத் தக்க
புனைவினை ஒன்று புகல்வேன்-தினையும் 
மறந்தார்க்குத் தோதுபடல் இல்லை உனைப்போல்
துறந்தார்க்குத் தோது படும்.
310



புனைவினை புகன்றாள் முதியோள்


பன்னாட்டார் ஆடவர் பாவையர் பூண்களும்
பன்னாளும் மாறிவரும் பாங்குகளும்-பன்மொழியும்
மூத்தார் இளையார் நடைப்பாங்கும் முற்றிலும் 
மூத்தாள் மொழிந்தாள் அவட்கு.
315



உறுப்புக்களை மாற்றும் முறை


நோக்குப் பலவும் நுதல்பலவும் வாய்பலவும்
மூக்குப் பலவும் முனைநடுவாம்-நாக்குப்
பலவும் பலரின் உருக்காட்டப் பின்னும்
பலவும் பகர்ந்தாள் அவட்கு.
320



முதியோள் மறைந்தாள்


பலவாம் புனைவினை பாவைக்குச் சொல்லி
நிலவாம் முகத்தாளே நேரிங்-குலவியிரு
புத்தபீ டிகையுé¢காண் கோமுகியும் காண்; போய்ஊர்
நத்துகஎன் றாள்மறைந்தாள் நன்று.



தீவதிலகை காணப்பட்டாள்


காலை மணற்குன்றைக் கண்டு நடக்கையிலே 
தீவ திலகைஎனும் தேமொழியின்-நாவில்
அமுதெடுத்தால் அன்ன தமிழெடுத்தாள்! கண்ணின்
இமையின் இணைப்பெடுத்தாள் பெண்.
325



தீவதிலகைக்கு மணிமேகலை


கப்பல் கவிழ்ந்ததனால் கண்டமணி பல்லவத்தில்
தப்பல் நினைத்துத் îù¤த்தடைந்த-தொப்பது நின் 
தோற்றம் நீ யாரென்னத் தோகை வரலாறு
மாற்றம் இலாதுரைத்தாள் மற்று.
330



தீவதிலகை»ñ¢ மணிமேகலையும்


முத்தன்ன வெண்ணகையார் முற்சென்றார் அங்கிருந்த
புத்தனார் பீடிகையில் போதுவிழி-வைத்தனர் 
நாமுகிழ்த்தாள் நன்றதன்சீர் தீவ திலகைதான்! 
கோமுகியும் காட்டினாள் கொம்பு.
335



கோமுகிப் பொய்கையில் அமுத சுரபி


உண்ணாடிக் கண்டால்தன் உள்ளதுகாட்டும் தென்னீர்க்
கண்ணாடிப் பொய்கைக் கரைநோக்க-எண்முப்
பதக்கும் பிடிக்கும் பழங்கலம் ஒன்று
மிதக்கும் பிடிக்கும் அதை மின்.
340



அமுதசுரபியுடன் திரும்புதல்


கமழ்வது தாமரை, காணிற் கலம் அஃது
அமுத சுரபிஎன்றாள் அன்னம்-அமைய
இருகையில் ஏந்திய மங்கை திரும்பி
வருகையில் மற்றுங்கேட் டாள்!



தீவதிலகை செப்பினாள்


நீபத்து நூறுமுறை நேரிற்கா ணுங்கலத்தை 
ஆபுத்திரன் இட்டான் அந்நீரில்- நீ போய்
அறவணர்பால் கேட்பாய் அதன்வரலா றென்றாள்
திறவணத்தாள் தீவதில கை.
345



அந்தக்கலந்தான் இந்தக் கலம்


இட்டுப் புகழ்பெற்ற ஏழைதான் ஏற்றசோ
றிட்டுக் கø¤பிசைந் தீந்ததுவும்-இட்டே 
எடுக்க எடுக் கக்குறையா தென்றதுவும் பொய்கை
அடுத்ததுவும் இக்கலமே ஆம்;
350



பசியுள்ள இடத்தில் புசி என்று போ


அறியாமை வேரோ டழியாது? வாழ்வை
எறியாமைத் தீப்பசிதான் ஏகா-துறவேகேள்
ஓரூரி லாவிடினும் ஓருரில் உண்டுபசி 
நேர்ந்ததும் அப்பிí¤யை நீக்கு.
355



வையப் புகழ் உனக்கே


இளமையில் எய்துமோர் இன்பம் வெறுத்தாய்!
வளமையிற் போதல் மடக்கி-உளம்காத்தாய்!
வையப் புகழுனக்கே வாய்திறந்தால் கோடிவரும்
வெய்ய பசியை விலக்கு.
360



ஆபுத்திரன் போல் அளி


வயிற்றுப் பê¤நீக்கு வாழ்வறியார் தூக்குக்
கயிற்றை விழலாக்கு! கண்ணை-எயிற்றை மகிழ்
வேபுகுத்தாய் நீஉன்றன் வாழ்நா ளெலாமந்த
ஆபுத் திரன்போலம் மா.



ஏழைக்è¤டுவதே தவம்


வேலையில்லை தந்தைக்கு! வெள்ளைநூல் அன்னையிடம் 
பாலில்லை பச்சைக் குழந்தைக்கே-தாலிவிற்றால்
வாங்குவா ரில்லை? அங்குவாட்டும் பசிநீக்கித்
தாங்குவார் தாம்தவம்செய் வார்.
365



அறத்தின் சாறு


சோறில்லை என்பார்க்குச் சோறு தருவதுதான்
கூறறங்க ளின்சாற்றுக் கூட்டம்மா-வேறேதான் 
எங்குண்டம் மாபசிக்கே ஈர்ம்பழஞ்சோ றிட்டுவக்கும்
அங்°í¢டம் மாநல் லறம்.
370



இன்றியமையா நிலையில் இடும் சோற்றுக்குச்
சாவு அல்லது வாழ்வு


கூன்மாடு விற்றுக் குதிரைவாங் கற்கென்றன்
கான்மாடு நின்றார்க்குக் காசளிக்க-நான்மாட்டேன்
இன்றி யமையா நிலையில் இடும்சோற்றுக் 
கொன்றுசாக் காடொன்று வாழ்வு.
375



தீவதிலகை சென்றாள்


உயிர்வாழ்வேன் மக்கள் உறுபசி தீர்ப்பேன்
செயிர்தீரச் செப்பியது கேட்டேன்-வெயிற்கு
நிழல்அவ் வடிகள்பால் செலவேன் நினைவு
தொழல்என்றாள் தோகைசென் றாள்,
380



மாதவி மகளைக் கண்டால்


மாதவி யாழ் துù¢பச் சுதமதிதம் வாயினின்
றேதவியாழ் பெற்ற இடர்என்றே-தீதுறுவார்
சோறுபெற்ற தூய்கலத்தா ளைப்பெற்றார் முப்பழத்தின்
சாறுபெற்றார் தாவி யணைத்து.



அறவண அடிகளைப் பணிந்தார்கள்


ஆய அனைத்தையுமே அன்னையிடம் பாங்கியிடம் 
ஏய உரைத்தாள் இளமங்கை-தூய
அறவணைத்தார் பக்கல் அணிகியே தாளில்
உறவணைத்தார் உச்சந் தலை.
385



அறவணத்தார் அறிவித்தார்


அடிகள் உரைப்பார்; அப்புத்த நெறியைக்
குடிகள் தொடர்தல் குறைய-மிடிகள் 
மலிய மறவலி ஆர்ந்தது மக்கள்
மெல்லியலா னார்அதன் மேல்.
390



புத்தநெறி உலகில் பரவவேண்டும்


கொடிதுசேர் கோட்டையில் புத்த நெறிதான்
கடிதுசே ராதே எனினும்-நெடிது
முயலுவேன் நீயும் முயலுக நன்கு 
பயிலுக என்றார் பரிந்து.
395



ஆபுத்திரன் பற்றி அறவண அடிகள்


மன்பதைக்கு நேரும் பசிப்பிணி மாற்றுக!
பின்பதைக் கண்டு தரும்மீ-தென்பதை
நீபெற் றிடலாம்! நிகழ்த்துகின் றேனினி
ஆபுத்தி ரன்சீரென் றார்.
400



ஆபுத்திரன் புகழ் விண்ணினும் பெரிது


ஒழுக்க மெனுநல் லுறுதுணைக் கேபே
ரிழுக்கம் புரிவார்க் கெதிர்ப்பு-முழக்கம்
புரிந்திட்ட ஆமகன் பெற்ற புகழ்தான்
விரிந்திட்ட விண்ணிற் பெரிது.



கொலை வேள்வியை எதிர்த்தவன் ஆபுத்திரன்


«õள்வி எனஉரைத்து மாடாடு வெட்டலும் 
கேள்வியே இன்றிக் கிளத்தலும்-நீள்வியான்
ஆமகன் பெற்ற புகழ்தன்னை அந்நாளில்
கோமகன் பெற்றானா கூறு.
5



எத்தீமைக்கும் ஆபுத்திரன் இளைத்து விடவில்லை


அறத்தினைச் சார்ந்தே அடைத்த புகழை
அறத்தினுக் கேசெல வாக்கும்-திறத்தைக்
குறுகிய கொள்கையார் கொல்ல நினைத்தார்
இறுகிய நெஞ்சா இறும்?
10



பிற்போக்காளரின் தலைவன் ஆபுத்திரனைக் கெடுக்க
நரிவேலை செய்தான்


இருளில் உலகை நடத்துவார்க் கேந்தல்
அருளில் நடந்தானை அண்டி-மருளில்
நடந்த நரிவேலை செய்ததும் உண்டு 
கடப்பானா கொண்ட கருத்து.
15



ஆபுத்திரன் வரலாறெல்லாம் சொல்லி முடிக்கப்பட்டது


என்று சிறப்பிடங்கள் சுட்டி அறவணர்
நன்று முதலிருந் î¦றுவரை-ஒன்றவே
ஆமகனின் அன்பு வரலாறெ லாம்சொல்லிப்
போமகளே என்றார்அப் போது.
20



மணிமேகலை பிச்சைக்காரியானாள்


ஏன்று கலம்ஏந்தி மேகலைதான் அன்னவரை
மூன்று முறைசுற்றி முன்வணங்கி-மான்போல்
மருண்ட வழிநடந்தாள் மற்றவரை விட்டே!
தெருண்டு வழிநடக்கும் தேன்.



எல்லோரும் மணிமேகலையைச் சூழ்ந்து கொண்டார்கள்


ஊர்ப்பிச்சைக் காரி உருவடைந்தாள் அவ்வுருவைச்
சேர்ப்பித்தாள் நல்ல தெருவழியே-வார்ப்படத்துத் 
தங்கப் படிவம் தரையில் வரக்கண்டோர்
அங்èப் படியேசூழ்ந் தார்.
30



எல்லோரும் வரவேற்கிறார்கள்


கண்ணம்மா உன்வரவு! கைநிறைய இட்டிடுவோம்
உண்ணம்மா என்றேஓ ராயிரம்பேர்-வண்ணம்
இருக்கும் படிவத்தார் சொன்னார்கள் சற்றே 
இருக்கும் படிசொன்னாள் யாழ்.
35



ஆதிரை வீட்டில் மணிமேகலை


கற்புப் புகழ்வாய்ந்தோள் உள்ளாளோ அன்னவளின்
இற்புக்கு முன்இடக்கேட் பாய்என்ற-சொற்பெருக்கிக்
காயசண்டி கைஎன்பாள் ஆதிரைஇல் காட்டினாள்
போயறங்கேட் டாள்சுடர்ப் பொன்.
40



ஆதிரை வரவேற்பு


கையிற் கலத்தோடும் கண்ணில் அருளோடும்
பொய்யில் துறவென்னும் பூட்கையொடும்-துய்யமணி
மேகலையை ஆதிரை கண்டாள் மிகமகிழ்ந்தாள்
ஆகஅம் மாஎன்றாள் ஆய்ந்து.



ஆதிரை கறியோடு சோறிட்டாள்


தேவர் உலகம் சிறப்பென்னும் ஆரியர்சொல் 
ஈவார் உலகம் இழிவாக்கப்-பாவை
கலமே நிறையக் கறியொடு சோறிட்டாள்
இலமே இலம்என்னு மாறு.
45



ஆதிரை வாழ்த்து


அழகும் இளமையும் எண்ணாய் துறவே
பழகும் இளையாய் பசுநெய்-ஒழுகக் 
கலத்திலிட் டேவிரு கையாலும் சோறு
நிலத்து நிலைக்கநின் சீர்.
50



ஆதிரை இட்ட அமிழ்து


கண்டனர் ஊரார் கடிதுகேட் டார்பாரோர்
மண்டினோர் எல்லாரும் வாழ்த்தினார்-அண்டுமுயிர்
ஏதிரை என்னாமைக் கிங்கு முதன்மையாம் 
ஆதிரை இட்ட அமிழ்து.
55



மணிமேகலை எல்லார்க்கும் இட்டாள்


இலம்நிறைந்தார்க்கல்லாம் மனம்நிறைந்த தென்னக்
கலம்நிறைந்து போனது கண்டு-நலம்நிறைத்தாள்
வாரீர்உண் பீர்என்பாள் வந்துண்பார், பின்னும்இலார்
வாரீர்என் பாள்உண்பார் வந்து.
60



காயசண்டிகை சொன்னாள்


காயசண்டி கைஎன்பாள் மாதõ¤யின் கண்ணாள்முன்
நீயறத்தின் செல்வியென்று நேர்வந்து-தாயேநான்
யானைத்தீ என்னும் பசியுடையேன் வற்றாஉன்
தேனத்தீ னேன்என்றாள் தேர்ந்து.



யானைî¢ தீ என்பதென்ன?


வயிறுநிறைந் தாலும் மனநிறையார்க் குள்ள 
இயல்பின்பேர் யானைத்தீ என்பர்-துயரறுக
சாப்பிடுநீ சாப்பிடு நீ சாப்பிட்டு நன்னிலையைக்
கூப்பிடுநீ என்ன குறை?
65



சொல்லால் பாதி தொல்லை போயிற்று


என்றுரைத்தாள் மேகலைதான் ஈபவளே சொன்னதனால்
நின்றபிணி யிற்பாதி நீங்கிற்றாம்-நன்றுண்டாள் 
மேலுண்டாள் மற்றுண்டாள் மேன்மேலுண் டாள்நாட்கள்
நாலுண்டாள் நன்னிலையுண் டாள்.
70



காயசண்டிகை நோயகன்றது


ஆறென்றால் ஆறாத யானைத்தீ ஆறியது!
சோறென்றால் முப்போதே துய்க்கின்றேன்-கூறென்றால்
பட்ட தொல்லை பஞ்சு படாதம்மா! பெற்று விட்டேன் 
விட்டதொல்லை யாலே மிடல்.
75



காயசண்டிகை கணவனை நொந்தாள்


என்னை உடையான் எனக்குநோய் என்றவுடன்
தன்னை உடையானைத் தான்பிரிந்தான்-பின்னுமவன்
காவிரிப்பூம் பட்டினத்தில் காத்திருந்தால் சான்றோர்கள்
நாவிரிப்பார் நன்றாம்என் றான்.
80



என் கணவர் ஒரு மரம்


சிற்றுளியும் ïù¢மை சிதைந்தால் சிதைவகற்றிப்
பொற்றுளிபோல் போற்றத் தவறிடார்-நற்றொழிலோர்!
தீராநோய் எங்கேனும் தீர்த்துவா என்றானை
ஆராயின் அன்னோன் மரம்.



அறம் எது!


அறஞ்சென்று கெட்டாரு மில்லை அறத்தின் 
புறஞ்சென்று வாழ்ந்தாரு மில்லை-பறந்த 
கிளிவாய்ப் பழம்நழுகிக் கீழ்ப்பசித்தோன் வாயில்
துளிவீழல் தூயற மன்று.
90



நல்லறம்


அறிந்து பசித்தோர்க் கருளல் அறமாம்
முறிந்த மனத்தாலே மூன்று-முøஞ்சோறு 
போடல் அறமன்றே என்று புரிந்தாய் 
வாடல்இங் கேன்என்றாள் மாது.
95



உலக அறவி பற்றிக் காயசண்டிகை


உலக அறவி புகுந்தே உலகின்
கலகப் பசிநோய் களைந்து-நிலவுகவே
என்றுசெல் லும்காயசண்டிகையை இன்னமுதே 
நன்றுசெல்க என்றாள் நகை.
100



மணிமேகலை உலக அறவி அடைந்தாள்


ஈந்து மகிழ்வாள் எழிற்றா மரைமுகத்தேன்
ஏந்துவாள் போற்கலத்தை இன்னமுதோ-டேந்திய
வண்ணம் உலக அறவி மருளினாள்
தண்ணம் தமிழ்க்குயில் தான்



உலக அறவி புக்காள் மணிமேகலை


ஒளிந்து நடந்த ஒருமயிலை ஊரார் 
தௌ¤ந்து செறிந்து வரவும்-குளிர்ந்தநிலா
இன்னம் உணவுண்ண வாரீரோ என்றபடி
தன்னந் தனிநுழைந்தாள் உள்.
105



மறைமலை அடிகளின் சொற்பெருக்கா?


அறவி அகத்தும் புறத்தும் இளைய 
துறவி முகம்பார்த்துச் சூழ்ந்தார்-நிறைகலி 
ஆர்கலியோ அண்ணல் மறைமலைசொல் கேட்டாரால்
நேர்கலியோ என்னும் நிலம்.
110



சித்திராபதி வீட்டில்


பேர்த்தி துறவும் பெருநிலையம் சென்றதுவும்
நேர்த்தி எனவிரல் நேர்உதட்டில்-சேர்த்தியே 
மாதென்ன மாதோ வழிதப்பக் கேட்டஎன் 
காதென்ன காதோஎன் றாள்,
115



உதயகுமரனிடம் ஓடினாள் சித்தராபதி


எனச்சித்தி ராபதிதான் ஏதேதோ கூறி
மனச்சிற்றில் வேக மடிகண்-சினத்தால்
எரிய இளவரசன் எங்கென்று கூந்தல் 
சரியச்சென் றாள்வீட்டை விட்டு.
120



ஆள் போய் உதயனிடம் சொன்னான்


இல்லில்லை என்று பளிக்கறையில் ஓர்ஆள்போய்ப்
பல்லில்லை என்று படுகிழவி-பொல்லா
உதட்டால் உமைப்பார்க்க வேண்டுமென் கின்றாள்
அதட்டவா என்றான் அவன்



சித்திராபதியைக் கூட்டிவா என்றான் உதயன்


கண்டசித்தி ராபதியைக் கையோடு நீகூட்டிக் 
கொண்டுவா என்றுதையன் கூறவே-பண்டைக்
கிழமே! கிளிக்காட்டில் கெட்ட சுளைமாம்
பழமேபோ பார் என்றான் ஆள்.
125



சித்திராபதியைக் கூட்டிவா என்றான் உதயன்


கண்டசித்தி ராபதியைக் கையோடு நீகூட்டிக் 
கொண்டுவா என்றுதையன் கூறவே-பண்டைக்
கிழமே! கிளிக்காட்டில் கெட்ட சுளைமாம்
பழமேபோ பார் என்றான் ஆள்.
125



மந்தியுடன் மன்னன் மகன்


குந்தி யிருந்த குமரனெதிர்க் கூன்முதுகு 
மத்தி இருந்துதன் வாய்திறந்தாள்-சிந்தும் 
கொழகொழத்த ஓசையெல்லாம் கொண்டுபொருள் கொள்வான்
இழவேஎன் றேஇளங் கோ.
130



என் மகள் பகை ஐயா


கோவலன் செத்ததனைத் கொண்டுமகள் மாதவிநான்
நோவத் தவத்துறையை நோக்கினாள்-யாவர் 
நகையாரை யா? நங்கை யல்லா லெனக்குப் 
பகையாரை யாநூற் படி.
135



பொது மகளிர் வழக்கம்


முற்புணர்ந்தான் செத்தால்பெண் முற்றும் துறப்பதெனும்
கø¢புணர்ந்தால் கைச்செலவு கட்டுமா?-இற்புகுந்து
தொட்டாலே பொன்கேட்போம் தொட்டிருந்தால் சொத்தடைவோம்
விட்டாலோ வேறாள்என் போம்
140



யாழ் பொது


பாணன் இறந்துவிட்டால் யாழோ பலர்க்காகும்!
காணுமலர் உண்ணும் கருவண்டு-நாணமேன்?
பொன்றருமாண் பாலோர் புணரத் தகுந்தவரே
இன்ù¢øக்கா யாமிப் படி



இன்பத்திற்கு வாழ்வா? துன்பத்துக்கா?


வளவரை சேர்மந்தி பலாவை விடாநாட் 
டிளவரசே! என்றன் இளையாள்-உளவரைக்கும்
இன்ப முழுவதுவும் எய்தலாம்; எய்தாமல்
¶ன்பமுழு தும்தோய் வதோ?
145



மணிமேகலையைக் கொள்ளாமல் வி´தல் இழிவு


என்னழகை என்றன் மகளழகை மற்றழகைத் 
îன்னழகாக் கொண்ட தனியரசைப்-பின்னரசே 
கொள்ளல் புகழைக் கொடுக்கும்; புனிதத்தைத்
தள்ளல் இகழைத் தரும்.
150



மணிமேகலையைக் கொள்வது பண்பாடு


முகத்தை நிலவால் முடித்து விரலின்
நகத்தைக் கிளிமூக்கால் நாட்டி-முடித்த 
அழகு முடிப்பை எடுத்து முடித்தல் 
பழகுமுடி வேந்தர்பண் பாடு.
155



அவள் மெய்இù¢ப ஊற்று


மைவேண்டாம்; கண்ணல்ல நெய்தல் மலர்கள்
நெய்ஏன்; குழலன்று நீளருவி-பொய்யன்று
பூண்வேண்டாம்; மேனியன்று; பொன்னின் ஒளிப்பிழம்பே 
ஊண்ஏன்? மெய் அன்றின்ப ஊற்று.
160



தாமரைப் பொய்கை


ð ணிமே வரசுக்குப் பட்டத்தரசி
மணிமே கலையல்லால் மற்றார்-தணியாத
ஆசை அனலுக்குத் தாமரைப் பொய்கை அன்றோ
மீசையுளார் சொல்க விரைந்து.



மேகலை கிடைத்தால் எல்லாம் கிடைக்கும்


பல்லெல்லாம் வெண்முத்துப் பந்தர்! கிளிநாணும் 
சொல்லெல்லாம் முத்தமிழ்ச் சோலையே-வெல்லரிய
தென்றுவரின் கொத்துச் சிரிக்குமிதழ் மேகலைதான்
ஒன்றுவரின் எல்லாம் உனக்கு.
165



என் விண்ணப்பம் காண்!


கட்டழகா காண்பாய்என் விண்ணப்பம்! உன்னடியில் 
இட்டழவே இங்குற்றேன் என்னெனில்-ஒட்டாரக் 
காரிதனைக் கைக்கௌ¢க காற்றாய் பறக்குமுன்
தேரிதனைச் செய்க விரைந்து.
170



அவள் உலக அறவியில் உள்ளாள்


உலக அறவியினில் உள்ளாள்என் மூச்சு
விலக அறவிடேல் என்னை-இலகணையின் 
மென்பஞ் சுமக்கமையும் வேளைஇது! மற்றிதுவே 
இன்பம் சுமக்கும் இனிது.
175



உதயன் தேரேறி வ¤ரைவாய்ச் சென்றான்


ஏற்பாரை நோக்கிக் கிழவி இடலானாள்
மேற்பாரை நீங்கமலை விட்டெழுந்தீப்-போற்பாரோர்
தங்கோமான் பிள்ளைபோய்த் தட்டிய தேர்ப்பரிகள் 
தங்கோமான் என்பன; தாம்.
180



மணிமேகலையை உதயன் மறித்தான்


உலக அறவி உலவு நிலவை
விலக விடாது மறித்து-நிலமீது
செப்புக் குடம்படல் தெண்ணீர்க்கும் ஆம்காம
வெப்புக் குடம்படல் வேண்டு.



இன்பம் துறப்பது கட்டாயமா?


ஏனித் துறவு மணிமே கலைஎன்தீர் 
மானித்துறவு மறந்தாய்-நான்நீ
இறப்பதுகட் டாயம் இடைநடுவில் இன்பம்
துறப்பது கட்டாயமா சொல்?
185



மணிமேகலை கூறுவாள்


என்றுதையன் சொல்ல எதிர் வணங்கி ஐயாவே 
ஒன்றுதையல் சொல்வேன் உளங்கொள்க-என்றும் 
இடும்பை மலையென எள்ளென நேரும்
இடும்பைஇவ் யாக்கை அன்றோ?
190



மும்மைத் தமிழ் காண்க


பொன்னெனப் பூவெனப் போரென நேரென
என்னென சொல்லினும் இன்னலின்-முன்வலைஎன் 
றான்றோர் அணுகார் அவற்றால் துயரெய்தார் 
சான்றோர்க; மும்மைத் தமிழ்.
195



வள்ளுவன் சொல் ஓர்க


'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்'என்றே-ஓதினார்
வள்ளுவர்; அன்னாரின் வாய்மை யதனையோ 
எள்ளுவர் எய்தார் நலம்.
200



மணிமேகலை உருமாறினாள்


ஈதுபுகன்ற மணிமே கலைஇனியும்
தீது செயக்கூடும் என்றுட்போய்-மாதான
காயசண்டி கைபோலக் காணுருமாற் றித்தெருவிற்
போயகன்றாள் கைக்கலமும் பூண்டு.



உதயன் ஏமாற்றம்


இன்னுமவள் உள்ளே இருக்கின்றாள் என்றிருந்தான் 
பின்னும் அவளைப் பெறாதகலேன்-என்றங்கே
நின்றிருந்தான் நெஞ்சை நிலைகேட்டான் வீடுபோய்
நன்றிருந்தான் நாட்டான் மகன்.
205



மணிமேகலை தொண்டு


நிலையத்தில் நல்லுணவு வந்து நீட்ட 
மலையத் தனையளவு மண்ட-அலைபோல் 
வறியார்கள் வந்து வயிறார்ந்திட் டார்தேக்
கெறிவார்கள் எண்ணற் றவர்
210



அவள் பறித்த அறம்


இடுகை மகிழ்ந்திடுவாள் ஏழைகள் தன்பால்
கடுகையில் தன்கை கடுக-மடமடென
அள்ளி இடுவாள்நல் லின்பம் அதிற்பறிப்பாள் 
கள்ளி மணிமே கலை
215



என் மாற்றுருவம் பயன்பட்டது என்றாள¢ 


தான்கொண்ட காய சண்டிகையின் நல்லுருவம்
தான்கொண் டிருப்பதே நன்றென்பாள்-ஏன்றவர்கள்
தேன்கண்டு நெய்பால் தயிர்கொண்டு வந்தாலும் 
தான்கண்டு வாங்குவாள் தாழ்ந்து.
220



ஏந்துகை காணாத நேரம் கண் துயிலும்நேரம்


ஈந்தன எல்லாம் இனப்படுத்திச் சோறுகழி
வாய்ந்தன ஆக்கி வறியோரின்-ஏந்துகை
காணாத நேரமதன் கண்துயிலும் நேரமென்றாள்
வாணாள்வா ணாளாக்குகின்ற மான்.

v

ஊருக்குத் தாய்


தெருவில் கடையில் சிறுமுடக்கில் வீட்டின் 
அருகில் முதியோர் அழிந்தார்-திரியுறுப்பர்
வாயூட்டி நெஞ்சம் மகிழ்வாள் தமையீன்ற
தாயூட்டி னாற்போலும் சார்ந்து.
225



சிறைப்பட்டோரும் திருத்தப்பட்டார்


வேந்து சிறைக்கூடம் மேகலைதான் சென்றங்கே 
ஈந்த முதலீகைக் கெட்டாநாள்-தேர்ந்த
கொலை கண்டார் தாமும் குறைகண் டுணர்ந்த
நிலைகண்டாள் நெஞ்சுவந்தாள்.
230



எல்லோரும் திருந்தினார்கள்


சோறும் மிகக்கொடுத்துச் சொற்பொழிவும் தானடத்தி
ஊறு பிறர்க்கொருவர் உன்னாத-வாறு 
முறைகண்டாள் மூன்று தமிழ்கண்டாள், நாட்டில் 
சிறைகண்டார் தீங்குகண்டார் யார்?
235



நாட்டு நிலையறிதல்


நாட்டு நிலையறிந்து தொண்டு நலமறிந்து
காட்டுக் குயிலைக் கடிதழைத்துச்-சூட்டும்
முடியரசும் ஆட்சி முறைஎவ்வா றென்றான் 
குடியரசும் சொன்னாள் குறை.
240



அரசன் மேகலை நேர்பாடு


முறையிருக்கும் போது சிறைஎதற்கு வேந்தே? 
குறையிருக்க ஆட்சிசெயல் குற்றம்-இறைகேட்க;
மாணவரின் வாய்க்குத் தமிழும், மனத்துக்கச்
சாணி அறிவும் உயிர்.



கட்டாயக்கல்வி தேவை


கல்லார் கடைப்பட்டார் ஆதலினால் கல்விதான்
எல்லார்க்கும் கட்டாயம் வேண்டுமால்-இல்லார்க்கோ 
ஊணுடை நல்ல உறையுள் படிப்பளித்தல்
மாணுடை மன்னர் கடன்.
245



தமிழின் இன்றியமையாமை


ஆசைக் களவில்லை ஆதலினால் மாந்தர்கன் 
காசைப் பெருக்கக் கருதுவர்-ஆசைதான்
உந்தா தடக்குதற்கும் உள்ளுணர்வு சேர்வதற்கும் 
செந்தமிழைச் சேர்க்க இறை.
250



வேந்தன் வேலை தொடங்கினான்


மேகலை இவ்வாறு விளம்பச் சிறையினை
மாகலைக் கூடமா மாற்றுதற்குப்-போக என
நல்லமைச்சர்க் காணை நவின்றான் நவின்றஅச்
சொல்லமைச்சுத் தொட்டார் வினை.
255



மணிமேகலை போக விடை பெற்றாள்


எல்லார்க்கும் கல்விதான் கட்டாயம் என்றபடி
இல்லார்க்குக் கல்வியும் ஏற்றவை-எல்லாமும்
ஆம்படி ஆக்குவேன் என்றான் விடைகேட்டாள் 
போம்படி சொன்னார்¢ புகழ்ந்து.
260



உதய குமாரன் மனக் கண்முன்


தார்வேந்தன் மைந்தன் தனியிருந்து மேகலைதன் 
நேர்வாய்ந்தாற் போலும் நினைவாக-வார்வாய்ந்த
கொங்கையார் கோமாட்டி கொள்கலத்தோ டங்ககன்ற
மங்கையார் என்றான் மதித்து.



வானிலவு எங்கே?


உலக அறவியின் உட்சென்றாய்! ஓர்பெண்
விலகி வெளியில் நடந்தாள்-நிலையத்துள் 
மீனெலாம் கண்டேன் மிகுநேரம் என்னருமை
வானிலா எங்கே வழுத்து.
265



நான் புகார் நாடன்


யானைத்தீ நோயாளி போல எழில்மாற்றிப் 
பானைத்தேன் நீவெளியிற் பாய்ந்தாயே-மானுக்கு
வேடனா உள்ளத்து மன்னியோய் வேண்டுபுகார் 
நாடனான் நன்கு மதி.
270



சித்திராபதி வரக்கண்டான்


பெண்நேரில் உள்ளாள்போற் பேசும் உதையனின்
கண்நேரில் கூனிவரக் கண்டுவிட்டான்-புண்நடுவில் 
வேலொன்று பெற்றதுபோல் வெட்கினால் வந்தகிழத்
தோலொன்று சொல்லலா னாள்.
275



வேங்கை வெள்ளாட்டுக்குத் தள்ளாடுமா?


வெள்ளாடு கண்ட ஒருவேங்கை இரைதவறித்
தள்ளாடும் இஃது தனிவியப்பே-எள்ளாடும்
செக்கும் எருதிழுக்கும் தேன்சுட்டும் நின்வலைக்குச் 
சிக்கும்என் றாள்உடைந்த சீப்பு.
280



களிறு கன்னல் ஒடிப்பதும் அரிதா?


நாளைக்கே ஏதிலான் நாடு பிடித்தாளும் 
காளைக்கே வஞ்சியின் காம்பான-தோளைப்
பிடித்தல் அரிதா பெருங்களிறு கன்னல்
ஒடித்தல் அரிதா உரை.



சித்திராபதி எண்ணம் என்ன?


என்று முடுக்கினாள் அன்னாள் இளவரசை
ஒன்று கொடுத்தொன்றை வாங்கியே-தின்று 
கொழுக்கலாம் என்னுமொரு கொள்கையால் கூனி
முழுக்கலாம் மூட்டினாள் ஆங்கு.
285



மணிமேகலையிடம் ஓடினான் உதயன்


மாலையுற்றான் மாலையிற்றான் மேகலைமேல் மாலை வைத்தே
ஆலையுற்றான் அக்கரும்பின் சாறுபற்றல்-ஏலுமென்றே
காயசண்டி கையுருவின் கண்ணகியின் பெண்ணையுற்றுத் 
தீயசண்டை கைவிடென்றான் சேய்.
290



என்னை அல்லால் உனக்கு யார்?


மைகாரி சண்டிகையாய் மாறி உலவுகின்ற
கைகாரி மேல்நடக்கும் காரியம்என்-மொய்காரின் 
கூந்தலாய் வாஎன்று கூறினோன் யார்இந்த
ஏந்தலை அல்லால் இனிது,
295



தன் தகுதியை மேலும் கூறுகிறான் உதயன்


என்னிலும் மேலோன் இருக்கின்றான் போலும்நான்
உன்னிலும் மேலாம் ஒருத்தியையும்-உன்னுகிலேன்
அன்றில் உனையழைத்த அன்றில்யான்! யாவர்சொல் 
மன்றில் உனையழைத்தார் மற்று.
300



இளமை நிலையாமையை எடுத்துக் காட்டினாள்
மணிமேகலை


அங்கு விழுந்தெழுந் தாடிநிற்கும் ஓர்கிழத்தைத் 
திங்கள் எழுந்த திருமுகத்தாள்-இங்கேகாண்
எங்கே அழகிளமை? எத்தனைநாள் முத்துப்பல்
தொங்கும் துரிஞ்சில் முலை.



காப்பது தவமே


பற்றினோர் துன்பமே பற்றினோர்! நற்றுறவு
பற்றினோர் துன்பமே பற்றாதார்-எற்றுக்கோ 
காமம் எதற்குமனக் கோட்டம் இவ்வுலகில்
ஏமம் எவர்க்கும் தவம்.
305



காஞ்சனன் ஐயப்பாடு


வாஞ்சநன் மாற்றமெலாம் மங்கைசொலும் போதங்குக் 
காஞ்சனன் வந்துகண்டான் கண்ணேரில்-தீஞ்சொல்லாள்
காயசண்டி கைதான் கசந்தாளோ என்னைஎன்றான் 
ஆயஅண்டி னான் அவளை அங்கு.
310



என் காயசண்டிகையே


என்காய சண்டிகையே இன்னல்சேர் உன்நோயும்
நன்காய தோஎன்றான்! நங்கைதான்-வன்காயை 
மெல்ல நினையாள்போல் வேந்தன் மகனிடத்தே
சொல்ல நினைத்தாள் தொடர்ந்து.
315



மனத்தூய்மையே தவம்


மனந்தன் நிலையினில் மன்னல் பொருளாம்
மனம்பெண்பொன்மண்மேற் செலுமேல்-துனியாம்
உவந்தலை யாதுமனம்பயில் விப்பவர் 
தவந்தலைப் பட்டவர் தாம்.
320



தவம் துயர் மாற்றும் மருந்து


தனக்கென வாழாமை தான்பிறர்க் காதல் 
சினம்பகை என்றும்எண் ணாமை-அனைத்தும்
வருந்துயர் நீக்கிடும் ஆயின்நற்ற வந்தான்
இருந்துயர் எற்றும் மருந்து.



அருளின் தழைவே தவம்


தவமோ அருளின் தழைவாம்; அருளோ
எவர்மாட்டும் ஏதில் இரக்கம்-உவப்பப் 
பிறர்க்குழைத் தின்புற் றிருப்பதும் நன்றே
இறப்பதும் இவ்விரண்டும் வீடு.
325



காஞ்சனன் ஐயப்பாடு


இதுகண்ட காஞ்சனன் என்சொல் விரும்பாள்; 
எதுகண் டவன்பால் இருந்தாள்?-அதுகாண்பேன்
என்றே ஒளிந்திருந்தான் இன்னல் மனத்துடன் 
ஒன்றி அநிவியி னுள்,
330



உதயகுமரனின் ஐயப்பாடு


தன்மனத்துள் மன்னன் மகனுமே சாற்றுவான்
என்மனத்தை வேறொன்றில் ஏகவைத்தாள்-அன்னவன்பால் 
அன்புடையாள் போலும்! அறிவேன் எனச்சொல்லி
வன்புடையான் சென்றான் மறைந்து
335



உதயன் பன்னே காஞ்சனன் சென்றான்


உலக அறவியில் உள்ள அறையில்
உலவி யிருந்த ஒருத்தி-நிலையினை
உற்றறிய வந்த உதையனனைக் காஞ்சனன் 
முற்றறியச் சென்றான் முனைந்து.
340



உதயனைக் காஞ்சனன் வெட்டி வீழ்த்தினான்


எட்டியடி உள்ளறையில் இட்ட இளங்கோவை 
வெட்டியடி வீழ்த்தினான் காஞ்சனன்-கட்டிக்
கரும்பே எனநெருங்கக் கண்ட இளமான்
விரும்பேல் விளம்புதல் கேள்.



காயசண்டிகை அல்லள்; இவள் மணிமேகலை


மணிமே கலையேநான் மாற்றுருவம் பூண்டேன்
அணிமேவு காயசண்டி கைபோல்!-துணிய 
எனைப்பார் எனத்தன் இயல்உருவம் காட்டி
அனுப்பினாள் காஞ்சனனை அங்கு.
345



இறந்த உதயனுக்கு அழுதாள் மணிமேகலை


தன்னுடைபூண் டாள்காய சண்டிகைத்தோற் றம்தணந்தாள் 
பொன்னுடை வேந்தன் புதல்வனைப்போய்-என் அசையா
நெஞ்சம் அசைத்தென் நினைவாற்செத் தாய்என்று 
கொஞ்சி அழுதாள் குயில்.
350



அறம் பயிலும் நான் இறந்தானுக்கு அழுவதா?


அறந்தான் தவம்பயில் பள்ளிஅஃ தல்லால்
இறந்தானை எண்ணுதல் என்னாம்¢?-மறந்தும் 
அழுந்தேன் துயரினில் என்றாளுக் காம்என்
றெழுந்தான் கிழக்கினில் என்று.
355



அமுதசுரபியைக் கண்டு பிச்சையிட்டவர்கள் பின¢பு அஃது
இருக்கும் இடம்வந்து பிச்சையிடலானார்கள்


அமுத சுரபி அடையாளம் கண்டே
அமுதளித் தோர்பின் அதுதான்-அமைவிடம்
சென்றீய லாயினார் சென்றீயல் தம்கடன் 
என்றீய லாயினார் பின்.
360



ஈதல் என்றால் அமுதசுரபிக்கு ஈதல்தான்


ஈதல் அமுத சுரபிக்கே ஈதல்என் 
றோதலும் ஆனார் உலகத்தார்-ஈதல்
அமுத சுரபியே ஆகி ஈவானும்
அமுத சுரபிஆ னான்



ஐயம் ஏற்கும் மணிமேகலை அறமே செய்கின்றாள்


ஓம்புகார் என்னப் பசித்தோர்க் குதவுமோர்
பூம்புகார்க் கேறற் புகழெல்லாம்-ஆம்படி 
செய்யு மணிமே கலையின் செயலெல்லாம்
ஐய மெனினும் அறம்.
365



அறவி முனிவர் அறிந்தார்கள்


அறமா மணிபால் உதையன் அடைவும் 
மறமேவு காசனன் வாளால்-எறிந்ததுவும்
ஓர்ந்தார் உலக அறவி முனிவரெலாம் 
போந்தார் புரைதீர்ந்தாள் முன்.
370



நடந்தது கேட்ட முனிவர்கள் தம் வருகையை
அரசனுக்குச் சொல்லி அனுப்பினார்கள்


அறைந்திருக்க உற்றவற்றை அன்னவர்பால் மங்கை!
மறைந்திருக்க! மாய்ந்தோன் உடலும்.....மறைத்து வைக்க? 
என்றார் முனிவரெலாம் ஏந்தலைக் காணுதற்குச்
சென்றார் வரவுரைத்தார் தேர்ந்து.
375

v

வாயில் காப்போன் முனிவர் வரவை மன்னனுக்கு உரைத்தான்


அன்னது கேட்டநல் வாயிலோன் அங்கோடி
அன்னது செய்தியாம் என்னலும்-முன்னர்
வரவிடு கென்றுமா வண்கிள்ளி சொன்னான் 
விரவினர் வேந்தன்முற் சென்று.
380



முனிவர் முடிந்தது கூறினார்கள்


வாழ்கமா வண்கிள்ளி நாளுமே செங்கோல்தான் 
சூழ்கமா வண்புகழ்! தூயோய்நின்-வாழ்வில்
இதுவரை எய்தாத இன்னல்எய் திற்றால்
அதுவரை அன்று; பெரிது!



காமத்தால் செத்தவர்களின் கதைகள் பல


ககந்தன் மகன்தான் மருதிஎனும் கன்னல்
உகந்தன்னான் தந்தையால் ஊறுற்-றிகழ்வுற்றான் 
முந்தை விசாகையினை மூத்தசேய் முன்னியதால்
தந்தையால் தானிறந் தான்
385



அன்று பல நடந்தன என்ற முனிவரை
இன்றும் உளதோ என்றான் மன்னன்


காமக்கள் உண்டவர் கற்பழித்துச் செத்ததனை 
யாமிதற்கு முன்னுங்கேட் டோமன்றோ-கோமானே
என்று முனிவர் இயம்ப அரசனவன் 
இன்று முளதோஎன் றான்.
390



மாதவி துறந்தாள் மகளும் துறந்தாள்


கோவலனார் குற்றமிலார்; ஆயினும் கோள்கேட்ட
காவலனார் கொல்லென்று காய்ந்தார்என்-றோவத்து 
மாதவியும் நற்றவத்தில் மன்னினாள்; பெண்மணியும்
மாதவியே ஆனாள் மனம்.
395



மணிமேகலையிடம் உதயகுமரன் தன்
கையிருப்பைக் காட்டினான்


காயசண்டி கைஎன்று கண்டார் நினைக்கஅவள்
ஆயஉரு மாற்றி அம்பலத்தில்-தூயளாய்
ஏற்றலும் ஈதலும் செய்திருந்தாள் மன்னன்மகன் 
ஆற்றலும் காட்டினான் ஆங்கு.
400



காஞ்சனன் உதயனைக் கொன்றான்


நள்ளிரவிற் நங்கையினை நண்ணும் இளங்கோவை 
எள்ளியே காயசண்டி கைகணவன்-துள்ளியே
வாளாள் எறிந்தான் வழுவின்றி அங்குளோம்
ஆளால் அறிந்தோம்என் றார்.



மாண்டானா மைந்தன்!


மாண்டானா மைந்தவனவன் மற்றென்பின் மாநிலத்தை
ஆண்டனா அஃதும் இலையேஎன்-றீண்டிய
கண்ணீர் உகுத்துக் கதறினான் ஆங்கும்ஓர்
எண்ணத்துள் ஆழ்ந்தான் இறை.



காஞ்சனன் தூயவன் 


இப்படியோர் போற்றும் அறத்தின் இளையாளை 
அப்படியா செய்திறந்தான் அன்புமகன்-எப்படிநாம்
கண்டாலும் காஞ்சனன் நெஞ்சாலும் கைவாளின்
தொண்டாலும் தூயனே ஆம்!
5



உரிய தண்டனையை உதயன் பெற்றான்


வழிவந்த கன்றைத்தேர் வாட்டியதால் மன்னன்
வழிவந்த சேயை மடித்தான்-வழிவந்த 
யான்பெற்ற மைந்தனவன் காமத்தால் காஞ்சனனால்
தான்பெற்ற தண்டம் தகும்.
10



மணிமேகலையைச் சிறையில் இடுக
மகனுடலுக்கு இறுதிக் கடன் நடக்க 


துறவோர் அருளிய தொல்லறநூற் சீர்த்தி
இறவாது காத்தல் எனது-மறவாக்
கடன்! மேகலைசிறை காண்கவே மைந்தன் 
உடன்மேவ உற்ற கடன்.
15



அம்மா உன்னையும் சிறையிட வந்தோம் 


மன்னனை வாழ்த்தியே மாமுனிவர் சென்றனர்
அன்னம் நிகர்த்தானை அங்கிருந்தோர்-தன்னம்
தனிக்கண்டு சாற்றுவார், அன்னாய் சிறைக்கே
உனைக்கொண்டு போவதும் உண்டு.
20



சிறையில் உனக்கென்ன குறைச்சல்? 


இறையும் உனக்கீந்த இன்னல் மிகுந்த
சிறையும் திருக்கோயி லாகும்-நிறையும்
படியாரை அச்சிறையில் பார்ப்பின்எம் அம்மைக்
கடியார் அலால்மற்றி யார்?



ஊண் இட்ட உண்மை மறப்பாரோ? 


மாணிட்ட மாதர்க் கரசேஇவ் வையத்தார்க் 
கூணிட்ட உன்னை மறந்தவர்கள்-காணின்
இறந்தவர்கள் என்க அருள்சேர்ந்த நின்தாள்
பிறந்தார் பெறத்தக்க பேறு.
25



அரசுக்கு எதிர்ப்பு 


என்றார் மணிமே கலையைச் சிறைக்கழைத்துச்
சென்றார் இதையறிந்தோர் சீறியே-ஒன்றாய் 
விடிவீரெம் தாயையே காவலரே நின்றால்
படுவீரென் றார்கள் பரிந்து.
30



மணிமேகலை மக்களுக்கு அறங் கூறினாள் 


ஏவலரென் றெண்ணீரோ என்னைச் சிறைப்படுத்தல்
காவலரின் கண்ணளையாம் காணீரோ-தீவழியே
நண்ணலும் ஏற்குமோ மக்காள் நலிவுசெய 
எண்ணமும் ஏற்காதென் றாள்.
35



மணிமேகலை சிறையில் சேர்க்கப்பட்டாள் 


ஊர்ச்சா வடியைச் சிறையாக்கி ஒன்றவே
நீர்ச்சாலும் கூழ்க்கலமும் நேர்வைத்துக்-கூர்ச்சுடர் வேல்
வைத்தாரை வைத்துமணி மேகலையை உள்ளடைத்து
வைத்தார்கை யோடுகொண்டு வந்து.
40



சிறையிலும் மக்கள் சீற்றம்


காவிரிப்பூம் பட்டினத்துக் கண்ணகியின் பெண்ணாளை
நீவிரித்துன் பப்படுத்தல் நேர்த்திஎன்று-தாவிச்
சிறைகாப்போர் வேலும் சிதைத்தும்மை வைத்து
முறைகாப்போர் எங்கென்றார் மொய்த்து.



கூறினோருக்கு மணிமேகலையின் ஆறுதல


வம்பிட்ட மக்களின் முன்வந்து மாதரசி 
கும்பிட்டுக் குற்றம் இதுவென்றாள்-வெம்புற்றே
அம்மாநின் றாவதென்ன அம்மன்னன் தீயனென்றே
சும்மாநின் றார்மெய் துடித்து.
45



மணிமேகலைக்குச் சாப்பாடு வந்தது 


நின்றிருந்தார் மக்கள் நினைவு பலிக்கவில்லை
என்றிருந்தார் மாதின் எதிர்வணங்கிச்-சென்றிருந்தார் 
ஈப்பாடு தாரோனின் ஏற்பாட்டாற் சிற்சிலர்
சாப்பாடுதாம் கொணர்ந்தார் தாய்க்கு.
50



சிறைப் பணியாளர் கூற்று


கேழ்வரகின் கூழ்கொடுக்கச் சொன்னார்; கெடுவார்கள்!
வாழ்வரசுக் கீய மனம்வருமா-தாழ்விலராய்
வாழையிலும் யாம்உனக்கு முப்பழம் பாற்சோறும் 
வாழையிலை போட்டிட்டோம் வந்து.
55



இனி வேண்டாம் கூழே போதும் 


என்று சிறைப்பணி யாளர் இயம்பினார்
ஒன்று மணிமே கலையுரைப்பாள்-இன்று
கொடுத்தீர்! இனிஎனக்குக் கூழ்போதும் என்றாள்
வடுத்தீர்ந்த மங்கைநல் லாள்.
60



தெருவார் தருவார் 


பாலடிசில் நெய்யடிசில் பத்துக் கறியோடும்
காலையிலும் மாலையிலும் கன்னிக்கே-சாலத்
தெருவார் தருவார் சிறையாளர் கொண்டு
தருவார் திருவார் தமிழ்க்கு.



சிறை பணியாளரைச் சீர்த்தி கேட்டாள் 


இறைவிநற் சீர்த்திதான் ஏவலரைக் கூவிச் 
சிறையினில் மேகலையின் செய்தி-அறைகென்னக்
கேழ்வரகை ஒன்றிரண் டாக்கிக் கிளரிய
கூழ்தருவோம் கொள்வாள்என் றார்.
65



சிறையில் மணிமேகலையைப் பார்த்தாள் சீர்த்தி 


ஒருநாள் சிறைகாணல் உற்றனள் சீர்த்தி
திருநாள் திருக்கச்சிக் கோயில்-இருநாளும் 
உண்டாலும் தீரா உளுத்தவடை உண்டாள்கற்
கண்டு மணிமே கலை.
70



சீர்த்தி மன்னனிடம் ஓடினாள் 


நிறைந்திருந்த நெஞ்சின் மணிமே கலையை
மறைந்திருந்து கண்டஅம் மன்னி-பறந்தோடி
மங்கட்டும் என்னேல் மணாளா அவள்என்பால் 
தங்கட்டும் என்றாள் தனித்து.
75



உன்சார்பில் மணிமேகலை இருக்கட்டும் 


சிக்கிச் சிறைவலையில் தீங்குபடும் அப்பசுங்கி
ளிக்கிச் சிறைநீக்கம் தக்கதே-புக்கில்
இருந்தால் இருக்கட்டும் என்றான்¢தன் காதல்
மருந்தால் பிழைக்கின்ற மன்.
80



கொடியவளுக்குக் கூழும் கொடாதீர் 


அரண்மனையில் ஓர்பால் அடைத்தாள்¢ சிறையில் 
திலண்முகில் கூந்தல் திருவைப்-புரண்டழவே
கூழும் கொட தீர் கொடியவட்கென் றாள்தன்கீழ்
வாழும் பலர்க்கரசி மற்று.



ஒன்றும் மணிமேகலைக்குக் கொடோம் என்றவர்கள்
எல்லாம் கொடுத்து வந்தார்கள் 


ஒன்றும் கொடோமென் றொரு தட்டில் பண்ணியங்கள் 
அன்றும் கொடுத்தார் அதன்பின்னும்-என்றும்
குளநீரும் சோறும் குறையாது தந்தார்
இளநீரும் வேளைக் கிரண்டு.
85



'மணிமேகலை செத்து விட்டாளா?' என்று சீர்ச்சி
கேட்டாள்!


இட்டினியும் காக்க இருப்பாரை மன்னிதான்
பட்டினியாற் செத்தாளா பாவை? என்று-கிட்டி 
வினாவினாள் உள்ளாள்என் றோதலும் சிங்கக்
கனாவினாள் உள்அஞ்சி னாள்.
90



பணிப்பெண்களின் மேல் ஐயப்பட்ட சீர்த்தி
தன்மனமொத்த பாங்கிமாரிடம் சொன்னாள் 


மனமொத்த தன்பாங்கி மாரை அவள்சாவை
இனமொத்துக் காப்பீர்கள் என்றாள் புனலற்ற
நாவுக்குத் தேன்வார்க்கும் நல்லமணி மேகலையின் 
சாவுக்குத் தாளா துலகு.
95



பாங்கிமார் மடியில் கட்டிவந்து கொடுப்பார்கள் 


நொடியும் மறவாமல் நூறு கறிகள்
மடியும் தெரியாமல் மாதர்-அடிசிலொடு
கொல்லையால் வந்து கொடுப்பார் அரசியிடம்
இல்லையே என்பார் இனிது.
100



சாவாள் என்று எண்ணினேன்!
அவள் மணலிற் பிடுங்கிய வள்ளிக் கிழங்கு 


உணற்கிழந்து சாவாள்என் றெண்ணினேன் ஓங¢கும்
மணற்கிழங்கு போலும்அவள் வாழ்ந்தாள்-தணற்பிழம்பில்
பொற்பைக்காண் பேன்எனில் வையம் பெறாதிவள்
கற்பைக்காண் பேன்என்றாள் காய்ந்து.



பூக்காரி மகனை அழைத்து
மணிமேகலையின் கற்பைக் கெடுத்துவிடு
என்றாள் சீர்த்தி! அவன் பட்டாடை கேட்டான் 


பூக்காரி பெற்றஒரு பொன்னனைக் கற்பழிக்கும் 
தீக்காரி யத்தில்நீ செல்லென்றாள்-நாக்குநீர்ச்
சொட்டோடு தூயசீர் மன்னியே வேண்டுமே
பட்டாடை என்றான் பணிந்து.
105



கடுக்கன் வேண்டும் என்றாள் 


காதுக்கும் கல்லிழைத்த நல்ல கடுக்கன்இப்
போதுக்குத் தந்திட்டாற் போதும் என்றான்-மாது 
மணிமே கலையின் மனம்பறிக்கச் சீர்த்தி
அணிஎன் றளி¢தாள் அவை.
110



பொன்னன் உடுத்துக் கொண்டு எழுந்தான்; விழுந்தான் 


காலுக்குத் தோற்செருப்புக் கையில் விரித்தகுடை
மேலுக்குக் காண விளக்கொருகை-ஏல
எழுந்தான் இரவிலே வேட்டி தடுக்க 
விழுந்தான் விலைபோகா மாடு.
115



மணிமேகலை இல்லை, பிச்சைக்காரனைப் பார்த்தான்
பொன்னன் 


ஆசைவைத்தேன் உன்மேலென் றேநுழைந்த அப்பொன்னன்
மீசைவைத்த ஓராளை உட்கண்டான்-ஓசையின்றிச்
சீர்த்தியிடம் ஓடிவந்தான் செய்தி தெரிவித்தான்
பார்த்ததுபொய்; பார்போய்என் றாள்.
120



ஆண் பிள்ளை தான் என்று பொன்னன் ஓடி வந்தான் 


காட்டுக்குப் பாய்கின்ற கால்வாய் நிகர்பொன்னன்
வீட்டுக்குள் ஓடி விடலைகண்டே-ஓட்டம்
பிடித்தான் பிடித்தால் பிடிகாணாப் பையன்!
கடித்தாள் அரசிதன் கை.



அரசிக்குப் பெண்ணாகப் பொன்னனுக்குப்
ஆணாகத் தோற்றமளித்தாள் மணிமேகலை 


தான்கண்டாள் தையலையே அவ்வறைக்குள்! பொன்னனவன் 
தான்கண்டான் ஆடவனைக்! கண்டிருவர்-மேனடந்தார்
கண்டுமலைத் தேன் என்றான் காட்டுப்பூக் காரிமகன்
கண்டுமலைத் தேன்என்றாள் காம்பு.
125



எனக்கு அமிழ்து மணிமேகலையே! 


உண்ணாமல் வாழ்கின்றாள்! உற்றொருவன் கற்பழியப்
பண்ணாமல் மாற்றுருவம் பற்றுகின்றாள்-தண்ணார் 
தமிழன்றோ சாருநெறி தன்னலமே எண்ணாள்
அமிழ்தன்றோ அன்னாள் எனக்கு.
130



என் மகனை மணிமேகலை கொல்லவில்லை! 


என்மகனைக் கொன்றாள் இவளென்றால் அம்முனிவர்
நன்மகளைக் கொண்டாட நாணுவரே-தன்மகனாய்த்
தன்மகளாய்த் தந்தையாய் இவ்வுலகைக் காணுகின்ற 
பொன்மகளே என்றன் புகல்.
135



மணிமேகலையைக் கொல்லுவது அறமா? 


பண்டு துறந்தோர் குறைபாடு பட்டவரைக்
கண்டு நிறைபாடு காண்பார்போல்-தொண்டுதவம்
என்பாளை வீழ்த்தல் இளநீர்க்காய் ஈன்தென்னை
மென்பாளை வீழ்த்தல்என் றாள்.
140



சீர்த்தி வாய்மை கண்டாள்! 


அறமா மணிமே கலையை அழித்தல்
அறமா அதுமா நிலமாள்-திறமா
எனஅறி வைந்திலும் எய்தினாள் ஆறாம்
மனஅறிவில் வாய்மை கண்டாள்.



பூவை விலக்கி மணிமேகலையின் பொன்னடியைப் பூணேனா? 


சாவை விலக்கித் தமிழ்த்தொண்டு செய்யேனா 
பூவை விலக்கியவன் பொன்னடியைத்-தேவைஎனப்
பூணேனா என்தலையில் பூவாய் பொழியும் அறம்
காணேனா பற்றுக் கடந்து.
145



மணிமேகலை எதிரில் சீர்த்தி 


கலையுணர்ந்த மேலோரும் காணற் கரிய
நிலையுணர்ந்த சீர்த்தி நிறைபால்-முலையாவின் 
கன்றேபோல் சென்று மணிமே கலையின்முன்
நின்றே அழுதாள் நெடிது.
150



சீர்த்தியின் விண்ணப்பம் 


ஒறுத்தோம் சிறையினில் உய்த்தோம் இடவும்
மறுத்தோம் இடரெலாம் வைத்தோம்-பொறுத்தருள்க
தீயைச் சிறுவீடு சேரினும் தீவைத்த 
சேயைத் தழுவும்தாய் கை.
155



நான்தான் தவறு செய்தேன் என்றாள் மேகலை 


முந்தா தடங்கி மொழிந்திட்ட சீர்த்திக்குச்
செந்தா மரைவாய் திறந்தாள்முன்-வந்தது
நான்செய் தவறு பொறுத்ததாம் நல்லோய்நீ
தான்செய்த தென்ன தவறு.
160



மகன் செத்தது உனக்குத் துன்பம்!
என்னைச் சிறையில் வைத்தது எனக்கு மகிழ்ச்சி 


உன்னழகைப் பாரில் உரித்துக்கொண் டேபிறந்த
பின்னழகும் முன்னழகும் பெற்றமகன்-என்னழகால்
செத்தது துன்பம் உனக்குச்! சிறையில்எனை
வைத்தது மாமகிழ்ச்சி எற்கு.



அரசனிடம் அரசி 


இலவை இதழ்என்னும் மன்னி மறுவில் 
நிலவைச் சிறைவைத்தல் நேர்மை-அலவென்று
காவலன்பால் சொன்னாள் கடிது கருங்குயிலின்
கூவலன்பால் ஒப்பினான் கோன்.
165



மணிமேகலையை விடுதலை செய்தார்கள் 


அணங்கின் அடிமலர் மன்னவன் மன்னி
வணங்கி அரண்மனை வாயில்-பிணங்கி 
இருந்த தமிழருக் கீந்தார் சிறையில்
இருந்த தமிழை எடுத்து.
170



சிறைமீண்ட செல்விக்கு வரவேற்பு 


நீர்கும் உணவுக்கும் கையேந்தி நிற்கின்றார்
யார்க்கும் தமிழ்வேண்டும் என்றேற்றார்-வேர்க்கே
அறவொன்று வேண்டும் அதற்குத் தமிழின் 
நெறிஒன்று வேண்டுமென் றார்.
175



தமிழில்லார் அறிவில்லார்! 


அத்தமிழ் இல்லார் அறிவில்லார் அன்னவர்க்குத்
குந்தக் குடிசை குடிக்கக்கூழ்-கந்தை
அடையவிடாரே அறிவின் இடையார்
அடைவிப்பார் முற்றுணர்ந் தார்.
180



தமிழிலக்கியம் கண்டவர்க்கே உணர்வு வரும் 


கடையர் அறிவிலார் இடையர் சிறிதே
உடையர்; தலையார் உணர்ந்தார்-தடையின்றி
வெள்ளத் தமிழின் இலக்கியம் வேண்டினோர்க்
குள்ளத் துணர்வு வரும்



இல்லாரை எள்ளுவர்
இன்னிசை வெண்பா 


கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தகவென்ற நேயத்து
வள்ளுவர் வாய்மையை உள்ளுக உள்ளாரை
எள்ளுவர் இல்லாதார் என்று.
185



மணிமேகலை உலக அறவிக்குச் சென்றிருந்தாள் 


என்று கலத்தோடும் ஏற்ற உணவோடும்
நன்று மணிமே கலைநடந்து-சென்றிருந்தாள் 
தாம்புகார் ஆயின் தழைவிலைஎன் றன்றோர்வாழ்
பூம்புகார் மன்றம் புனைந்து.
190



மேகலை காஞ்சி சென்றாள் 


அறவணரும் அன்னம் சுதமதியும் காஞ்சி
உறஇருக்கும் செய்தி உணர்ந்த-அறமா
மணிமே கலைதான் மணிக்கல மென்னும் 
அணிமேவச் சென்றிட்டாள் அங்கு,
195



மன்னனின் விண்ணப்பம்


அரசனும் மற்றும் அலுவலர் தாமும்
வரிசையின் வந்து வணங்கித்-திருவார்
அறவணரே அம்மையே காஞ்சியின் அல்லல்
அறவருள வேண்டுமென்றார் ஆங்கு.
200



மற்றும் வேண்டுகோள் 


மழையில்லை கஞ்சி வளமில்லை எம்மேற்
பிழையில்லை எங்கும் பெரிதும்-தழைந்துள்ள
பஞ்சம் அகற்ற அருட்பஞ்சமா என்றுரைத்தான்
நெஞ்சு துடித்தரசன் நின்று.



அறவணர் ஆறுதல் 


மன்னர் நிறைகொற்றம் வாழ்கவே காஞ்சிதான் 
நன்னர் நலமடைதல் திண்ணமே-என்னும்
நிலைக்கும் நினைப்புடையோம் மாது மணிமே
கலைக்கும் நினைப்புண்டு காண்.
205



மேலும் அறவணர் 


சாற்று கவிகை அரசர்மனத்¢ தாழ்வெல்லாம்
மற்றும் மணிமே கலைஎன்று-போற்றும் 
அடிகள் உரைத்தார்! அவளும் உரைத்தாள்
மிடிகள் விலகிடும் என்று.
210



மேலும் மணிமேகலை சொன்னாள் 


மேலும் விளம்புவாள்; வேந்தேநீ வாழ்கநின்
கோலும் கிடப்பக் கொடியோர்க்கு- மேவம்
கிடப்ப்க் கிடைநெல் ஒருபால் குவிந்து
கிடப்பதேன் என்றாள் கிளி.
215



மற்றும் மணிமேகலை 


உள்ளார் இசைவேண்டி இல்லார்க் குதவுவர்
உள்ளார் கடனென் றிலார்க்குதவ-உள்ளுக!
உள்ளார் உடைமைஎனல் இல்லார் இழந்ததே
பள்ளநீர் பாய்ந்தநீ ராம்.



மேலும் மணிமேகலை 


இனமென எண்ணி இடுக! இடாரேல் 
மனமெனும் மங்கை தனது-தனிமை
பொறாது மறுபுலம் போதலும் உண்டு
உறாதார்க் குதவலும் உண்டு.



  மணிமேகலை காஞ்சியிலே அடிவைத்தால் பஞ்சம் பறந்தது!    


கல்லார்க்குக் கலவி அருளும் புலவரைப்போல்
இல்லார்க்குச் சோறுகறி இட்டாள்மேல்-செலிவிக்கே
ஆரும் புகழ்வைத் தளித்ததே காஞ்சிக்குத் 
தேரும் திருவிழா வும். 
225



காஞ்சிக்குத் தேரும் திருவாழாவும்


கல்லார்க்குக் கல்வி அருளும் புலவரைப்போல்
இல்லார்க்குச் சோறுகறி இட்டாள்மேல்-செல்விக்கே
ஆரும் புகழ்வைத் தளித்ததே காஞ்சிக்குத் 
தேரும் திருவிழா வும்.
230



மணிமேகலையே சோறுகறியாக்கத் தொடங்கிவிட்டாள்!


ஈயப் பெரும்பானை இட்டுச்சோ றாக்குவோர் 
ஒயப் பொருள்கள் உதவுவார்-தூயமணி
மேகலையும் சோறாக்கி வெஞ்சனம்செய் வாள்பிஞ்சுப் 
பாகலையும் சென்று பறித்து¢



தனக்கு வரும் புகழையும் மற்றவர்க்குப்
பயன்படுத்தும் செய்கை அரியது!


உள்ளவர் தத்தமக் குள்ளது போகமற்
றுள்ளதை இல்லார்க் குதவுகின்ற-உள்ளம்
அரிதன்று; பெற்றபுகழ் மற்றவர்க் காக்கல்
அரிதென் றறவணர் சொன் னார்.



மழை பெய்த்து காஞ்சியில்


அழையாது வந்தஎம் அம்மைகால் வைக்கப் 
பிழையாது யாமும் பிழைத்தோம்-மழையா
மழையும் மழைத்தது வாழ்கின்றோம் என்றார்
தழையாது காஞ்சியார் தாம்.
240



காஞ்சி மன்னன் வணங்கி வழியனுப்பினான்


அறவணர் ஆய்ந்த சுதமதி யோடும்
உறவண மேகலை ஓவம்-புறவணம் 
கால்வைத்தாள் அக்கால் தலைவைத்தான் நன்றி என்றான்
கோல்வைத்த காஞ்சியின் கோ
245



மணிமேகலை போகக்கண்ட மங்கைமார் வாழ்த்தினார்கள்


முன்னாலே சோறின்றி முட்டுண்டோம் அம்மையே
உன்னாலே உள்ளோம் என்றேவாழ்த்திப்-பொன்னாலே
பூணிட்ட செவ்வுலக்கைப் பாட்டுப் புதுக்கினார் 
நாணிட்டு நங்கையினைக் கண்டு.
250



உழவர் வாழ்த்தினார்கள்


பல்வாளை மேயும் பழனத்தைத் தாண்டியே
செல்வாளை எங்கள் சிறுமையினைக்-கொல்வாள்
நினையாமை வாழ்வோமா என்றார்கள் நீரார்
சினையாமைச் செய்யுழவர் சேர்ந்து.
255



தையலார் சாப்பிட்டுப்போகக் கெஞ்சினார்கள்


மின்னுக்கும் நல்லறத்து வேளுக்கும் முன்நடக்கும்
பொன்னுக்குப் பூவெடுத்தார் போலெடுத்த-முன்கைகள்
கூப்பிட்டு வாழ்த்திய கோதைமார் கெஞ்சினார் 
சாப்பிட்டுப் போம்படியோ தாழ்ந்து.



மற்றும் பலர் வாழ்த்தினார்கள்


கல்லாமை நீக்கிக் கடும்பசிக்கு நீர்ச்சோறும் 
இல்லாமை நீக்கினீர் என்றுரைத்துப்- பல்லோர்தம்
போரடித்த நெல்லைஎலாம் பொன்னாக்கிப் போகவரத்
தேரடித்துக் கொண்டிருந்தார் சென்று.
260



மற்றும் மக்கள் வாழ்த்து


கண்பொங்கக் கையெடுத்தால் காலெடுக்கும் செல்வரிடம்
வெண்பொங்கல் வாங்கி விலாப்புடைக்க-உண்கென்றாய் 
உள்ளளவும் ஊருக் குழைத்தவளே வாழ்கென்றார்
எள்ளளவும் யாம்மறவோம் என்று.
265



மற்றும் பலர்


என்றும் அறியா எமைஈன்ற தாய்¢போலும்
ஒன்றும் எதிர்பாரா தூர்க்.குழைத்தாய்-இன்றே
எமைவிட் டகன்றாலும் எம்முள்நீ உள்ள 
சுமைவிட் டகலாதென் றார்.
270




மணிமேகலை வெண்பா முற்றும்.
by Swathi   on 28 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.