LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

மணிப்பிரவாள நடை

மணிப்பிரவாள நடை என்பது தமிழ் நடையில் வடமொழியைச் சேர்த்து எழுதும் முறையாகும். சுமார் 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய இந்த முறை தமிழறிஞர்களையும் விட்டு வைக்கவில்லை. தூய தமிழில் பேசுவதும் எழுதுவதும் இழிவாக நினைத்த காலம் அது. வடமொழியோடு தமிழை பயன்படுத்தினால்தன் உயர்வும் மதிப்பும் கிடைக்கும் என்று எண்ணிய புலவர்கள் தங்கள் படைப்புகளில் ஏராளமான வடமொழிச்சொற்களை தமிழுக்கு இறக்குமதி செய்தனர்.

ஓய்வு என்பதை தமிழில் சொல்லாமல் 'சிரமப்பரிகாரம்' என்றனர். அன்னதானம் என்பதை 'பந்தி போஜனம்' என்றே முழங்கினர். இப்படியாக திருமண அழைப்பிதழை 'விவாக பத்திரிக்கை' என அச்சடித்தனர். மகாகவி பாரதியாரும் இதற்கு விதிவிலக்கல்ல. வெற்றி முரசு என்று என்று சொல்ல வெட்கப்பட்டு 'ஜய பேரிகை'என்று எழுதினார்.ஆற்றங்கரைக்கு 'தீர்த்தக்கரை' என்றுரைத்தார்.

இந்த நிலை ஏறக்குறைய 1970 ஆம் ஆண்டு வரை நீடித்தது.தமிழக அறிஞர்களின் கடின முயற்சியால் பெரும்பான்மையான வடமொழிச்சொற்கள் தமிழை விட்டு சிறிது சிறிதாக வெளியேறின.ஆனாலும் முற்றாக வடமொழி வெளியேற வில்லை என்பது வருத்தமான‌ உண்மை.

மலாய் மொழி மற்றும் ஆங்கில மொழியிலிருந்து மொழி பெயர்த்த தமிழ் அறிஞர்கள் வடமொழியின் தாக்கம் காரணமாக சில வடமொழி கலந்த தமிழையே நமக்குத் தந்தனர். சான்றாக,
தேசிய மாதிரி தமிழ்ப்பள்ளி என்பதில் தேசிய என்பது வடமொழி. இதை நாட்டுடைத் தமிழ்ப்பள்ளி என்று மொழி பெயர்த்திருக்கலாம்.

வடமொழித்தாக்கம் குறைந்து வரும் வேளையில், ஆங்கில மொழியின் தாக்கம் மிகுந்து காணப்படுகிறது. தமிழ் நாட்டைவிட குறைவாக இருப்பினும் பேச்சு மொழியில் ஆங்கில கலப்பு பெருகி வருகிறது. lunch சாப்பிட்டு விட்டு office க்குப் போனேன். road ட்டை cross பண்ணினதும் bus வந்து விட்டது. என்பன போன்ற தொடர்கள் வலிந்து பேசப்படுகின்றன.

அன்னிய மொழிகள் ஒரு மொழியில் கலப்பதைத் தவிர்க்க முடியாது என்றாலும் அவை ஆளுமை பெறுவதைக் குறைக்க வேண்டும்.

by Swathi   on 15 Sep 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.