புதிதாக பத்திரிகையாளர்களாக வர விரும்புவோருக்கு, பொது நுழைவுத் தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர், மணீஷ் திவாரி கூறினார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, மருத்துவ துறை, பொரியியல் துறை போன்றவற்றிற்கு பொது நுழைவு தேர்வு நடத்துவது போல, பத்திரிகை துறையிலும் பொது நுழைவுத் தேர்வு நடத்தி, அதில் தேர்வு பெறுவோருக்கு, பத்திரிகையாளர் ஆவதற்கான உரிமம் கொடுக்க வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு தரத்தை நிர்ணயிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். சில பத்திரிகை நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் கொடுக்கின்றன. சில நிறுவனங்கள் இதுபோன்ற பயிற்சிகளை அளிப்பதே இல்லை. எனவே, இதற்கென பொது நுழைவுத் தேர்வை நடத்தினால், பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் பத்திரிகை துறைக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
|