LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

மனிதர்களே

மனிதர்களே ...

மனிதர்களே ...


இலக்கணம்

ஏதுமின்றி

இயல்பாய்

கூவித் திரிகிற

குயில்கள் நாங்கள் ...


மனிதர்களே ...

மனிதர்களே ...


தலைக்கணம்

ஏதுமின்றி

மழை வந்தால் மட்டுமே

தோகை விரிக்கிற

மயில்கள் நாங்கள்.....


மனிதர்களே ...

மனிதர்களே ...


கடவுச் சீட்டு

ஏதுமின்றி

தேசம் விட்டு

தேசம் போய்

நட்பு வளர்க்கிற

வேடந்தாங்கல்

பறவைகள் நாங்கள் ...


மனிதர்களே ...

மனிதர்களே ...


இதுவரை

அழகு பற்றி

அலட்டிக்கொள்ளாத

அழகிய

வண்ணத்துப்

பூச்சிகள் நாங்கள் ...


மனிதர்களே ...

மனிதர்களே ...


இன்று வரைக்கும்

எங்கள் நடையழகுக்கு

எந்த போட்டியும்

வைத்துக் கொள்ளாது

காலார நடந்து திரிகிற

வாத்துக் கூட்டங்கள் நாங்கள் ...


மனிதர்களே ...

மனிதர்களே ...


உள்ளொன்று வைத்து

புறமொன்று பேசத்தெரியாது

சொன்னதையே

திரும்பச் சொல்லுகிற

பச்சைக் கிளிகள் நாங்கள் ....


மனிதர்களே ...

மனிதர்களே ...


கூட்டம் கூட்டமாய்

பறந்து பொய்

நீங்கள் அசைக்க மறந்த

சமாதானக் கொடியை

அசைத்து வருகிற

வெனண்கொக்குகள் நாங்கள் ...


மனிதர்களே ...

மனிதர்களே ...


பொறாமைத் தீயின்

வேர் கூட

எங்களை அண்டவிடாது

ஒன்றாய் ஆடிப்பாடுகிற

அண்டங்காக்கைகள் நாங்கள் ....


மனிதர்களே ...

மனிதர்களே ...


சின்னச் சின்ன

கூடுகட்டி

முட்டையிட்டு

சந்தோசமாய்

நாங்கள் மட்டுமே

குடும்பம் நடத்துகிற

சிட்டுக் குருவிகள் நாங்கள் ....


மனிதர்களே ...

மனிதர்களே ...


மனதில் இணைந்த

துணை இறந்தால்

உயரே போய்

உயிர் துறக்கிற

காதல் பறவைகள் நாங்கள் ...


மனிதர்களே ...

மனிதர்களே ...


நாங்கள்

எங்களுக்குள்ளாகவே

சிரித்துக்கொள்வதுண்டு .....


உங்களை நீங்கள்

அழகென்றும்

உயர்வென்றும்

மிகைப்படுத்திக்

கொள்கிற போது ...


-      குகன்

by Guhan   on 06 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.