|
|||||
மஞ்சப்பை கதை என்ன? |
|||||
அறிமுக இயக்குனர் ராகவன் இயக்கத்தில், விமல், லட்சுமிமேனன் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் படம் மஞ்சப்பை. இந்த படத்தில், ராஜ்கிரண் முக்கிய காதப்பாத்திரத்தில் நடிக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். மஞ்சப்பை படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து விட்டது ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், மஞ்சப்பை என்ன கதை என்பதை பற்றி இங்கு காண்போம். நம்முடைய உறவுகளிலேயே உன்னதமானது தாத்தா-பேரன் உறவு. இந்தப்படமும் தாத்தா பேரனுக்கு இடையேயான உறவை தான் சொல்லப்போகிறது. தாத்தாவாக ராஜ்கிரணும், அவரது பேரனாக விமலும் நடித்துள்ளனர். மதுரையை அடுத்துள்ள கொண்டையம்பட்டி எனும் ஊரில் இருந்து, தன் பேரனான விமலை பார்க்க பட்டணம்(சென்னை) வருகிறார் ராஜ்கிரண். அப்படி வரும்போது அவர் சந்திக்கும் அனுபவங்களும், பேரன் உடனான பாசங்களும் தான் கதை. ராஜ்கிரண் தாத்தாவாகவே வாழ்ந்து இருக்கிறார். காமெடி, ஆக்ஷ்ன், சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த ஞனரஞ்சகமான படமாக மஞ்சப்பை இருக்கும். கிராமங்களில் மஞ்சப்பைக்கு இன்னும் மதிப்பு இருக்கிறது. ராஜ்கிரண் கிராமத்தில் இருந்து மஞ்சப்பையை எடுத்துக்கொண்டு சென்னை வருவதாலேயே இப்படத்திற்கு மஞ்சப்பை என்று பெயர் வைத்துவிட்டோம். நிச்சயம் இந்தப்படம் எல்லோரையும் ரசிக்க வைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குனர். |
|||||
by Swathi on 30 May 2014 0 Comments | |||||
Tags: மஞ்சப்பை Manja Pai | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|