LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறுவர் விளையாட்டு - kids Game Print Friendly and PDF

மஞ்சள் நீர் தெளித்தல்

தோற்றம் மற்றும் வளர்ச்சி :

பண்டைய காலம் தொட்டே நீர் விளையாட்டுகள் இருந்ததற்கான சான்றுகள் தமிழ் இலக்கிய வாயிலாக கிடைகிறது. பெண்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற வண்ணங்கள் கலந்த நீரை ஆண்கள் மீது இடைவிடாமல் தெளித்து விளையாட்டியதாகத் தெரிகிறது. இதற்கு பரிபாடல் வரிகள் சான்றாக அமைகிறது.

“தன்புனல் ஆடும் தகைமிகு போர்க்கண்  

நொய்மான் சிவிறியர் நீர்மணக்கோடினர்

வெண்கிடை மிதவையர் நான்கிடைத் தேரீனர்”

என்ற வரிகளிலிருந்து

“நேய்ந்தோர் நிறவரக்கின் நீரெக்கி யாவையும்

முத்துநீர்த் சாந்தடைந்த மூஉய்த் தத்தி”

என்ற வரிகளின் வாயிலாகவும் அறியலாம்.

இவ்வகையான விளையாட்டுக்கள் பெரும்பாலும் விழாகாலங்களிலும் நிகழ்த்தப்படுகின்றன. இவ்விளையாட்டு தமிழகத்தில் இன்னும் சில கிராமங்களில் விளையாடப்பட்டு வருகிறது. மஞ்சள் நீரை பெண்கள் அனைத்து ஆண்கள் மீதும் தெளிப்பதல்ல, தான் திருமணம் செய்யும் முறை அல்லது விரும்பி மணமுடிக்கப்போகும் ஆணின் மீது தான் தெளித்து மகிழ்வர்.

பெயர்க்காரணம் :

மஞ்சள் நீர் தெளிப்பதால் இந்த விளையாட்டிற்கு மஞ்சள் நீர் தெளித்தல் என்ற பெயர் வந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

விதிமுறைகள் :

இந்த விளையாட்டிற்கு விதிமுறைகள் எதுவும் கிடையாது. ஆனால் தான் விரும்பும் ஆண்கள் மீது மட்டுமே மஞ்சள் நீர் தெளிப்பது மிகச்சிறந்த பண்பு. இதையே விதிமுறையாக கூறலாம்.இவ்விளையாட்டு மட்டுமே பெண்களின் புற விளையாட்டாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பயன்கள் :

இவ்விளையாட்டின் வாயிலாக உறவு முறைகள் தெரிய வரும். மஞ்சள் கிருமி நாசினி என்பதால் மருத்துவப் பயனும், மனமகிழ்ச்சியும் இவ்விளையாட்டின் முக்கிய பயன்களாக கருதலாம்.

by Swathi   on 24 Jan 2015  0 Comments
Tags: Manjal Neer   மஞ்சள் நீர் தெளித்தல்   Manjal Neer Vilaiyattu              
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.