பிரதமர் மன்மோகன் சிங்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் வரும் 29-ம் தேதி ஒரே மேடையி்ல் சந்திக்க உள்ளனர்.
சுதந்திரம் பெற்ற இந்தியாவின், முதல் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர், சர்தார் வல்லபாய்பட்டேல். அவரை நினைவு கூறும் விதமாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தி்ல் சர்தார் வல்லபாய்படேலின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழா வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அருங்காட்சியகத்தின் விழா குழு தலைவரான மத்திய அமைச்சர் தின்ஷா படேல் விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை மோடியை நேரில் சந்தித்து வழங்கினார். மேலும் விழாவில் தலைமை விருந்தினராக பிரதமர் மன்மோகன்சிங்கும், சிறப்பு விருந்தினராக நரேந்திரமோடியும் பங்கேற்க உள்ளனர்.
|