LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தமிழச்சியின் கத்தி

மன்னன் வந்தான்

எண்சீர் விருத்தம்

காட்டுதீப் போலேசு பேதார் சாவு
    கடிதோடித் தேசிங்கின் காதுக் குள்ளும்
    கோட்டைக்குள் எப்புறத்தும் சென்ற தாலே
    குலுங்கிற்றுக் கோட்டையெலாம்! மார்பில் குத்திப்
    போட்டிருந்த சுபேதரைச் சிப்பாய் மார்கள்
    புடைசூழ்ந்தார். தேசிங்கும் அங்கு வந்தான்.
    கேட்கலுற்றான் 'என்னஇது என்ன?' என்றே
    கிட்டஇருந் தோரெல்லாம் 'தெரியா' தென்றார்.

    'படைவீரர் தமக்குள்ளே நடந்த தென்றால்
    படுகொலைசெய் தோன்யாவன்?' என்று கேட்டான்
    'படைவீரன் அல்லாது பிறரே என்றால்
    பலகாவற் கட்டங்கள் தாண்டி எந்தக்
    கடையன்இங்கு வரமுடியும்? கோட்டை வாசல்
    காத்திருந்தோன் என்னசெய்து கொண்டி ருந்தான்?
    நடைமுறைகள் இப்படியா? பகைவர் கையை
    நத்திடுவோர் இங்குண்டா? புதுமை யன்றோ!

    போட்டசட்டை யைத்துளைத்து மார்பெ லும்பைப்
    புறம்விலக்கிப் பாய்ந்திருக்கும் கத்தி தன்னை
    மீட்காமல் சென்றவனைப் பிடிக்க வேண்டும்;
    விளைவுக்குக் காரணத்தை யறிதல் வேண்டும்;
    கேட்டுகொண் டிருக்கின்றீர்; தெரிந்தி ருந்தால்
    கேடில்லை செப்பிடுவீர் உண்மை தன்னை!
    வாட்டுகின்றீர் என்னுள்ளம்; சூழ்ச்சி தானோ!
    மற்றென்ன மற்றென்ன?' எனத்து டித்தான்!

    கூட்டத்தில் திம்மனுளம் பட்ட பாடு
    கூறத்தான் முடியுமோ? 'அந்தோ அந்தோ!
    காட்டிவைத்தான் எனக்கிந்த வேலை தன்னைக்
    கடல்போன்ற அன்புடையான் என்னி டத்தில்!
    நீட்டிவைத்த வில்லைப்போல், மணித்தேர் போலே
    நிலைகெட்டு வீழ்ந்திட்ட புலியைப் போல
    ஊட்டத்து மார்புடையான் சுபேதார் மண்ணில்
    உயிரின்றிக் கிடக்கின்றான் எவன் செய்தானோ?

    மன்னவரோ அறிவீரோ எனகேட் கின்றார்
    வாய்திறவா திருக்கின்றேன்; வாய்தி றந்தால்
    என்னவரு மோஅறியேன்; வழிதான் என்ன?'
    என்றுபல வாறெண்ணி இருக்கும் போது
    'மன்னவரே பணிகின்றேன்' என்று கூறி
    வந்தெதிரில் நின்றுரைப்பான் ரஞ்சித் சிங்கன்:
    'என்நண்பன் சுதரிசன்சிங்க்! அவனைப் பற்றி
    என்றனுக்கு தெரிந்தவற்றைக் கூறு கின்றேன்:

    திம்மன்எனும் பேருடையான் வளவ னூரில்
    தென்பட்டான் சுதரிசனின் கண்ணில் ஓர்நாள்!
    அம்மட்டே அவனோடு வீடு சென்றான்;
    அங்கோர்நாள் விருந்துண்டான். அவன் மனைவி
    செம்மையுறும் அழகுடையாள்; அவளின் மீதில்
    சுதரிசன்சிங்க் திருப்பினான் உளத்தை! அன்னாள்
    திம்மனையல் லால்வேறு மனிதர் தம்மைத்
    திரும்பியும்பார்ப் பவளில்லை; சுதரிசன் சிங்க்

    திம்மனையும் மங்கையையும் அழைத்துக் கொண்டு
    செஞ்சிக்கு வந்துவிட்டான். ஆசை காட்டித்
    திம்மனுக்கு வேலைதரு வதாகச் சொன்ன
    சேதியினால் திம்மனவன் ஒப்பி வந்தான்.
    அம்மங்கை கணவன்சொல் தட்ட வில்லை!
    அவள்மட்டும் சுபேதாரை நம்ப வில்லை!
    திம்மனையும், வஞ்சியையும் சுபேதார் செஞ்சிச்
    சேரியிலே குடிவைத்தான் வந்த அன்றே!

    குப்பென்றும் முருகிஎன்றும் சொல்லி டும்தன்
    கூத்திமார் இருவரையும் அவர்க ளோடு
    நற்பணியா ளர்போலே இருக்கச் செய்தான்.
    நானுரைக்கும் அப்பெண்கள் இப்பி ணங்கள்!
    அப்பரே இதுதான்நான் அறிவேன்' என்றான்.
    'அழையுங்கள் அழையுங்கள் திம்மன் தன்னைத்
    துப்பியது காயுமுன்னே!' என்று தேசிங்க்
    துடிதுடித்தான் நெருப்புப்பட் டவனைப் போலே.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.