கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்தவர்களில் அதிகம் பேர் அரசியலில் இருப்பதாக, அரியானா மாநில காங்கிரஸ் எம்.பி., சவுத்ரி பீரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலத்தில், முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில், கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி., சவுத்ரி பீரேந்தர் சிங் கூறியதாவது, சமீப காலமாக அதிகமாக பணம் சம்பாதிக்கும் வழி தெரியாமல் பலர் தவித்து வருகின்றனர், இவர்கள் பணம் சம்பாதிக்க சிறந்த தொழில் அரசியல் மட்டுமே என கருதுகின்றனர். இதனால், அரசு ஊழியரோ, இன்ஜினியராகவோ, டாக்டராகவோ அல்லது வழக்கறிஞராக வெற்றி பெற முடியாமல் போனவர்கள் பின்னர் அரசியலில் சேர்ந்து நிறைய பணம் சம்பாதிக்கின்றனர்; இந்த வழியில் பணம் சம்பாதித்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர்; அவர்கள் மில்லியன்களில் அல்ல பில்லியன்களிலேயே சம்பாதித்து வருகின்றனர்; இதனால் நேர்மையானவர்கள் அரசியலில் நிலைப்பதில்லை என சவுத்ரி பீரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
|