LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

மரங்களே ...

மரங்களே


மரங்களே....


நீங்கள் மட்டுமே

என்னை

அணு அணுவாய்

சிதைக்கிறீர்கள் ....


அவள் நினைவுகளுக்குள்

உயிரோடு

என்னைப் புதைக்கிறீர்கள் ...


புதிதாய்

கொழுந்துவிட்டு

என் மனதில்

அன்று முளைத்த

அவள் நேசத்தைச்

சொல்கிறீர்கள் ...


காற்றோடு சலசலத்து

என்னோடு மனம்கலந்த

அவள்

பேச்சைச் சொல்கிறீர்கள்  ...


பளீரென்று

பூக்கள் உதிர்ந்து

அவள்

சிரிப்பைச் சொல்கிறீர்கள் ...


எரியும் வெயிலில்

என் மீது நிழலெறிந்து

அவள்

பாசத்தைச் சொல்கிறீர்கள் ....


ஆடாது அசையாது

அவ்வப்போது

அமைதிக் குடை

பிடித்து

அவள் மேளணத்தைச்

சொல்கிறீர்கள் ...


நீர் இருக்கும்

இடமெல்லாம்

வேர் பரப்பி

அவளைக் காணாது

என் தேடலைச்

சொல்கிறீர்கள் ...


கிளைதாங்கும்

விழுது காட்டி

இன்றுவரை

எனைத்தாங்கும்

அவள் ஞாபகங்களைச்

சொல்கிறீர்கள் ...


வாசத்தோடு

அருகே எனை அழைத்து

நான் இழந்த

அவள் நேசத்தைச்

சொல்கிறீர்கள் ...


நீங்கள்

இலை உதிர்த்து

தலை உதிர்த்து

மொட்டை மரமானால்

அவள் இல்லாத

என்னைச் சொல்லாமல்

சொல்கிறீர்கள் ...


மரங்களே

மரங்களே.......


-      குகன்

by Guhan   on 06 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.