LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- ச.ரவிச்சந்திரன்

மறந்துவிடு மனமே

கணவன் கொடூரமானால்
காரிகை என்ன செய்வாள்
கடந்தது எல்லாம் கசப்பாக
நடப்பததாவது இனிமை தேடி அன்பை நாடினால்
காசினி சொல்கிறது -அவள்
நடத்தை கெட்டவளாம்
ஆண் ஆதிக்கம் படைத்த சமூகம் சொல்கிறது
அவள் ஒரு வேசி என்று
அன்பை தேடி பயணிக்கும் உயிர்களில்
பெண் மட்டும் என்ன அந்நியமானவளா?
அவள் உலகத்தில் அன்பு என்ன தடை செய்யபட்ட வார்த்தையா?
ஆண் ஒருவன் நேசித்தால் காதலாம்
அதே
பெண் ஒருத்தி அன்பை யாசித்தால் அது
நடத்தை தவறலா
ஊடங்களும் உலகமும் இதே
பொய்யை சொல்லி சொல்லி
பூமிப்பந்தை களங்கப்படுத்தி வருகிறது
காயப்படுத்தப்பட்ட பெண்மையோ
மருந்துக்காக மூலையில் முடங்கிக்கிடக்கிறது
காயமும் வலியும் அவளுக்கு மட்டும் தானா
இதோ புறப்பட்டுவிட்டது என் கேள்வி
ஏவுகணையாய்
உளுத்து போன சமூகத்தின்
உதவாக்கரை சட்டங்களை தகர்க்க
வன்முறையில்
எனக்கு விருப்பம் இல்லை ஆனால்
வன்முறையை நன்முறையாய் கொண்ட சமூகமே
உன் முறையில் திருப்பித்தருகிறேன் என்பதிலை
பெண்மையின் மென்மையை என்
மனமே மறந்துவிடு

கவிஞர் ச .ரவிச்சந்திரன்  

by Swathi   on 16 Nov 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.