LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- இனத்தின் தொன்மை

திருமணப் பொருத்தம் பார்ப்பது தமிழர் மரபா?

திருமணம் செய்துகொள்ளும்  பார்க்கப்படும் பத்துப் பொருத்தங்களாகக் சோதிடர்கள் கீழ்காணும்  பொருத்தங்களை பார்க்கிறார்கள். இவர்கள் இதை எங்கிருந்து அறிந்தார்கள்? இதன் பின்புலம் என்ன என்று பார்ப்போம்.

1.தினப் பொருத்தம் (நட்சத்திரப் பொருத்தம்)

2.கணப் பொருத்தம்

3.மகேந்திரப் பொருத்தம் 

4.ஸ்திரீ தீர்க்கம்

5.யோனிப் பொருத்தம் 

6.ராசிப் பொருத்தம்

7.ராசி அதிபதி பொருத்தம்

8.வசியப் பொருத்தம்

9.ரஜ்ஜுப் பொருத்தம்

10.வேதைப் பொருத்தம்

 

ஆனால் இப்படிப் பொருத்தம் பார்க்கும் முறையினை இவர்கள் எங்கிருந்து "எடுத்து உள்ளனர் தெரியுமா? பத்துப் பொருத்தம் பார்த்து மணம் முடிக்கும் முறையினைத் தமிழர்கள் தொன்றுதொட்டே கொண்டிருந்த்திருக்கின்றனர் தமிழர்கள் இப்படியான முறையினை வகுத்துள்ளார்கள். ஆனால் மேலேயுள்ள வகையிலல்ல. பின் எப்படி? அதனைத் தொல்காப்பியரே விளக்கியுள்ளார் கேளுங்கள்.

"பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு

உருவு நிறுத்த காம வாயில்

நிறையே அருளே உணர்வொடு திருவென

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே"  

                           தொல்... மெய்ப்பாட்டியல் (1224)

 

என்கிறார். இதன் பொருள் என்ன?

1)  ஒத்த  பிறப்பும், (2)  ஒத்த  ஒழுக்கமும், (3)  ஒத்த  ஆண்மையும்,  (4) ஒத்த வயதும், (5) ஒத்த உருவும், (6) ஒத்த அன்பும், (7) ஒத்த நிறையும், (8) ஒத்த அருளும், (9) ஒத்த அறிவும், (10) ஒத்த செல்வமுமாம்!

(இங்கே 'பிறப்பே' என்பது சாதீயப் பிறிவுகளைக் குறிப்பதாகாது. ஒருவன் சார்ந்த தொழில் குடியைப் பொறுத்ததாகும். அதாவது, நல்லொழுக்கம் உள்ள குடியில் பிறந்த எனப் பொருள் கொள்ள வேண்டும்)

 

by Swathi   on 02 Nov 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
04-Nov-2018 10:07:37 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம். தமிழர்கள் அறிவுப்பூர்வமானவர்கள் என்பதை விட இதயபூர்வமானவர்கள் என்பது சாலச்சிறந்தது. அதிலேயே அறிவும், அன்பும் அடங்கி விடும்.அதை விளக்கும் தொல்காப்பியப் பாடல் அருமை. இதை இன்றைய பெற்றோர்கள் உணர வேண்டும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.