LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மகுடேசுவரன்

மருக்கொழுந்து மனம் ! - கவிஞர் மகுடேசுவரன்

காலையில் மலரும்
தாமரை மனத்தோடிருந்தேன்.
பகல் முடிய முடிய
வாடி வதங்கின அதன் இதழ்கள்.

மாலையில் மலரும்
மல்லிகை மனத்தோடிருந்தேன்.
அவிழும் பொழுதுவரை
உள்பொங்கிய நாற்றத்தால்
வெடித்துச் சிதறுவதுபோல் இருந்தது
மனத்தின் மலர்ச்சி.

இரவில் மலரும்
ஆம்பல் மனம் யாருக்கு வேண்டும் ?
நிலவுக்கு மலர்ந்து
சூடுவாரற்று
மடல் தளர்ந்து மடியும் மௌன வதம் !

மாமாங்கத்திற்கு மலரும்
குறிஞ்சி மனத்தைக் கொள்வதென்றால்
அதுவரை இந்த வனம்
காட்டுத்தீ பற்றி
கருஞ்சாம்பல் ஆகாதிருக்குமா ?

வேண்டுமம்மா வேண்டும்
ஒடிக்க ஒடிக்க
கசங்க கசங்க
தண்டும் தழையும்
ஒன்றி மணக்கும்
மருக்கொழுந்து மனம் !

 

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 20 Dec 2014  0 Comments
Tags: மருக்கொழுந்து   Marikolunthu Kavithai                 
 தொடர்புடையவை-Related Articles
மருக்கொழுந்து மனம் ! - கவிஞர் மகுடேசுவரன் மருக்கொழுந்து மனம் ! - கவிஞர் மகுடேசுவரன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.