இயற்கை உணவுக்கருத்தரங்கம் நவீனமாக, பகட்டாக வாழ மனிதன் ஆசைப்பட்டு இயற்கையைப் பலி கொடுத்து விட்டான் செயற்கையான வாழ்க்கைச் சூழல் மனிதர்களை நோயற்களாக மாற்றிவிட்டது. உண்ணும் உணவே நஞ்சாகி விட்டது வருமானத்தின் பெரும்பகுதிமருத்துவத்திற்காக செலவழிக்கப்படுகிறது. மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை மறைந்து விட்டது. மரன பயத்துடன் வாழும் சூழலே காணப்படுகிறது. நோயற்ற வாழ்வு வாழவும், இயற்கையோடு இணைந்து வாழவும் வேதிக் கலப்பில்லாத இயற்கை உணவுகளை உண்ணவும் இயற்கை பொருட்களை உபயோகிக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்திட,
இயற்கை வாழ்வு குறித்து கருத்துக்களை அறிந்திட தெரிந்திட, புரிந்து வாழ்ந்திட ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை திருப்பூர் கருவம்பாளையம் அறிவுத்திருக்கோயில் பின் புறமுள்ள சமரச சுத்த சன்மார்க்க சங்க கட்டிடத்தில் இயற்கை உணவு கருத்தரங்கு நடைபெறுகிறது
இயற்கையோடு வாழ, இயற்கையாய் வாழ ஒன்றிணைந்திட அன்போடு அழைக்கிறோம்.
இயற்கையாய் அனைத்து விவசாய பொருட்களையும் விளைவிக்க பயிற்சிகளும், உதவிகளும் செய்யப்படும்.
சுதேசி இயக்கம்
திருப்பூர் மாவட்டம்
கைப்பேசி: 9042558877
|