LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மருதமலை குடமுழுக்கு விழாவில் தமிழிலும் வேள்விகள் நடத்தப்படும் - அறநிலையத்துறை

"மருதமலை குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும்" என்று இந்து சமய அறநிலையத்துறை உறுதியளித்துள்ளது.


கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் 7ஆவது படைவீடு எனப் பக்தர்களால் போற்றப்படுகின்றது.


இந்தக் கோவிலின் குடமுழுக்கு விழா வரும் ஏப்ரல் 4ஆம்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்தக் குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த சண்டிகேஸ்வரர் சேவா அறக்கட்டளைத் தலைவரான டி.சுரேஷ்பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 


நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செயலாளர் விஜயராகவனும் அதேபோன்ற மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், "குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்துவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்த இரு மனுக்களும் நீதிபதி பரதச் சக்கரவர்த்தி அமர்வு முன் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) விசாரணைக்கு வந்தது.

அப்போது, "மருதமலை கோவில் குடமுழுக்கின்போது, சமஸ்கிருதத்துக்கு இணையாகத் தமிழிலும் வேள்விகள் நடத்தப்படும்" என்றும், "தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்" என்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.


மருதமலை கோவில் செயல் அலுவலர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குடமுழுக்கு விழாவில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மந்திரங்கள் ஓதி யாகசாலை பூஜைகள் நடத்தப்படும் .சிவாச்சாரியார், ஓதுவார் ஆகியோர் தமிழ் மந்திரங்கள் ஓதுவர். பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தர் அலங்காரம், திருமுருகாற்றுப்படை உள்ளிட்டவை பாடப்படும்.


யாகசாலையில் சமஸ்கிருதத்துக்கு இணையாகத் தமிழுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். யாகப் பூஜையின்போது 36 யாக குண்டத்தில் தமிழிலும் வேறு 36 குண்டத்தில் சமஸ்கிருதத்திலும் வேள்விகள் நடத்தப்படும்,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள கணபதி தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகி ந.நித்தியானந்த பாரதி, "முதல் முறையாகத் தமிழ் மொழி  இந்து சமய அறநிலையத்துறை கோவிலில் உள்ள வேள்விச் சாலையில் நுழைந்து இருக்கிறது. 72 வேள்விச் சாலையில், சரிபாதி 36 வேள்விச் சாலையில் தமிழில் நடத்த அனுமதி அளித்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியான செய்தி..." என்று தெரிவித்துள்ளார்.  


 

 

by hemavathi   on 29 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இனி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை - வருகிறது புதிய சட்டம் இனி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை - வருகிறது புதிய சட்டம்
பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் காணாமல் போன 165 நீர்நிலைகள் பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் காணாமல் போன 165 நீர்நிலைகள்
தமிழ் வார விழா - குரல் கொடுத்த அமைப்புகளுக்கு நன்றி! தமிழ் வார விழா - குரல் கொடுத்த அமைப்புகளுக்கு நன்றி!
'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா! 'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா!
தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று  - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழறிஞர் உதவித்தொகை உயர்வு - குறமகள் இளவெயினிக்கு திருவுருவச்சிலை -  மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவிப்பு தமிழறிஞர் உதவித்தொகை உயர்வு - குறமகள் இளவெயினிக்கு திருவுருவச்சிலை - மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவிப்பு
மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கக் குழு மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கக் குழு
கடலூர் பெண்  குரூப் -1 தேர்வில் முதலிடம் பெற்று சாதனை கடலூர் பெண் குரூப் -1 தேர்வில் முதலிடம் பெற்று சாதனை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.