தேவையானவை :
கடலை பருப்பு - 1/4 கிலோ பட்டாணி பருப்பு - 1/4 கிலோ பெரிய வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 3 கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது) சோம்பு - 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 1/2 லிட்டர்
உப்பு -தேவையான அளவு
செய்முறை :
1. கடலைப் பருப்பையும், பட்டாணி பருப்பையும் ஒரு மணி நேரம் தனித்தனியே ஊற வைத்துக் கழுவிக் கொள்ளவும்.
2. பின்னர் இரு பருப்பையும் ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
3. இதனுடன் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, சோம்பு, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு பிசைந்து கொள்ளவும்.
4. சிறு உருண்டையாக எடுத்து தட்டையாக தட்டி எண்ணெயில் இட்டு பொரிக்கவும்.
5. இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வடை சிவந்தவுடன் எடுத்து சூடாக பரிமாறவும்.
|