லிங்குசாமி இயக்கத்தில், அஞ்சான் படத்துக்கு பிறகு நடிகர் சூர்யா வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் சூர்யாவுடன், நயன்தாரா, பிரனிதா, பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இதுவரை வித்தியாசமான கதைகளில் தனது பாடிலாங்குவேஜை மாற்றி நடித்து வரும் சூர்யா, முதன்முறையாக ஒரு ஹாரர் கதையில் நடிக்கிறார்.
அதோடு, பிரியாணி தோல்விக்கு பிறகு வெங்கட்பிரபுவும், அஞ்சான் தோல்விக்கு பிறகு சூர்யாவும் இந்த படத்தில் இணைந்திருப்பதால், எப்படியேனும் ஹிட் கொடுத்து மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று படத்தின் கதையை மட்டுமின்றி காட்சிகளையும், பாடல்களையும் மாஸாக படமாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
மேலும், இந்த படத்தில் சூர்யா தோன்றும் சில காட்சிகளில் அவரை மாஸாக காட்டுவதற்காக விததியாசமான எனட்ரி கொடுத்தபடி படமாக்கியுள்ள வெங்கட்பிரபு, படத்தில் அவர் தோன்றும் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளுக்கு ஒரு தீம் மியூசிக் ரெடி பண்ணியுள்ளாராம். அவர் வரும் அந்த காட்சிகள் மிரட்டலாக இருக்க வேண்டும் என்பதற்காக, அந்த இசையை வடிவமைக்க பல நாட்களை செலவு செய்திருக்கிறாராம் யுவன் ஷங்கர் ராஜா.
அதேபோல், படத்தில் சூர்யா, நயன்தாரா இணைந்து ஆட்டம் போடும் ஒரு அதிரடியான மாஸ் பாடலும் உள்ளதாம். "தெறிக்குது தெறிக்குது மாஸ், இது கன்னா பின்னா மாஸ்" என்று தொடங்கும் அந்த பாடலில் அவர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அனல் பறக்கும் ஆட்டம் போட்டிருக்கிறார்களாம். கூடவே படம் முழுக்க காமெடி காட்சிகளில் நடித்துள்ள பிரேம்ஜியும் அந்த பாடலில் அவ்வப்போது என்ட்ரி கொடுத்து நடனமாடியிருக்கிறாராம்.
|