LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

மற்றுமொரு மரணம்

அந்த சிதைந்த சித்திரம்

சாலையில் வரையப்பட்டிருந்தது

 

அதன் ரத்தக் கறைகள்

 

கோரமாயிருந்தன

 

 

 

உலகில் எந்த ஓவியனும்

 

வரைய இயலாத காட்சியாகத்தான்

 

அது இருந்தது

 

அந்த மரணத்தின்

 

கடைசி நிமிடங்கள்

 

கடந்து செல்ல முடியாதவைகளாக இருந்தன

 

 

 

அந்த இருளில்

 

விட்டு விட்டு விழுந்த

 

வெளிச்சங்கள்

 

எந்த விடியலுக்குமான

 

அறிகுறிகளற்றிருந்தது

 

சில கைப்பேசி படமெடுத்தல்களும்

 

சில காட்சிப் பதிவுகளும்

 

கண்டும் காணா

 

கடப்புகளும்

 

தொடர்ந்து நிகழ்ந்து

 

கொண்டிருந்தன

 

 

 

ஒரு மரணம்

 

இப்படி வேடிக்கை பார்க்கப்படுவது

 

விநோதமாக இருந்தது

 

சோகங்களை தின்று

 

கொண்டிருந்தன பிரமிப்புக்கள்

 

அதன் கண்களில் கசிந்திருந்தது

 

வாழ்வின் கடைசி துளி

 

 

 

இறுதியாக அந்த சித்திரத்தை

 

யாரோ அகற்றுகிறார்கள்

 

அதன் விழிகளில் தெரிந்த

 

இறுதி ஏக்கங்கள்

 

சாலையெங்கும்

 

எஞ்சியிருந்தது

 

 

 

மற்றுமொரு சாலை மரணம்

 

செய்தியானது

 

பிரமிப்பூட்டும்

 

காட்சிப்பதிவுகளுடன்.

 

 

 

நிலாரவி.

 

 

 

 

by Nilaravi   on 31 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.