மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவர் சாரங்கபாணி இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது தாய்மொழிக் காக்க தன்னுயிரை தீயினுக்குக் கொடுத்து இந்தி ஆதிக்கத்தைத் தடுத்தான் என்பது மொழிப் போராட்ட வரலாறு.
குத்தாலத்தை அடுத்த மருதஞ்சேரயில் கடந்த 1945 ல் பிறந்த சாரங்கபாணி மயிலாடுதுறை ஏ.வி.சி கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் படித்து வந்தார். " தமிழுக்காக உயிர்த்தியாகம் செய்பவர்கள் உண்மையான தமிழர்கள்" என உணர்ச்சிக் கொந்தளிப்போடு தொடர்ந்து மாணவர்களிடம் பேசி மாணவர் போராட்டத்தை வேகப்படுத்தும் வேளைகளில் வேகம் காட்டிய சாரங்கபாணி, அதன் தொடர்ச்சியாக 15.03.1965 அன்று உடலுக்கு தீ வைத்துக் கொண்டு உயிர் துறந்தார்..
சாரங்கபாணி தமிழ் மொழிக்காக செய்த உயிர் தியாகத்தை போற்றும் வகையில் தமிழக அரசு கடந்த 29-01-2007ம் தேதி, அவர் பயின்ற ஏவிசி கல்லூரி வாயிலில் நினைவுத்தூனை நிறுவியது. மேலும் அவரது நினைவாக மயிலாடுதுறையில் ஒரு மேம்பாலம் இருக்கிறது.
|