|
||||||||
மழை நோக்கு - சேயோன் யாழ்வேந்தன் |
||||||||
எதையும் எதிர்பாராமல் மழை பொழிவதாக
அதனைக் கேட்காமலேயே முடிவு செய்தோம்
வீழும் துளி அண்டம் துளைக்கையில் எழுகின்ற மணம்
நனைகின்ற மலர்கள் சிலிர்க்கும் அழகு
நனைந்தபடி நடக்கும் மாதர்கள் வனப்பு
குளங்கள் எழுப்பும் ஜலதரங்க இசை
சிறகை உதறிப் பறக்கும் பறவைகள்
கதிர் ஒளி சிரிக்கும் வானவில்
இன்னும் எவ்வளவோ எதிர்பார்த்து,
மனிதம் விளைக்கப் பொழியும் மழை -
மானுடம் மலடானதறியாமல்! - சேயோன் யாழ்வேந்தன் |
||||||||
by Swathi on 11 Dec 2015 0 Comments | ||||||||
Tags: மழை கவிதை Mazhai மழை நோக்கு சேயோன் யாழ்வேந்தன் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|