LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

பொருளும் நிகழ்ச்சியும்

 

நீங்கள் எழுதுவதற்காகப் பேனாவைக் கையில் வைத்திருக்கின்றீர்கள். அதையே நம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். பேனாவைப் பார்த்து இது பொருளா அல்லது நிகழ்ச்சியா என்ற வினா எழுப்புங்கள். கையினால் தொட்டு உணர முடிவதாலும் கண்ணால் பார்த்து உணர முடிவதாலும் பேனா ஒரு பொருள்தான் என்று கருத நேரும்.
மேலே செல்வோம். அந்தப் பேனாவை எரியும் நெருப்பிலிட்டால் என்ன ஆகும். எரிந்து சாம்பலாகிப் போகும். பேனா என்ற வடிவம் இப்போது அதற்கு இல்லை. பேனா எங்கே? அழிந்து விட்டது. இவ்வாறு அழிவது பொருளாகுமா? பேனா என்னவாயிற்று? ஆராய்வோம். நெருப்பிலிட்டவுடன் அதில் இணைந்திருந்த பலதரப்பட்ட அணுக்கள் வெப்பத்தால் கிளர்ச்சியூட்டப் பெற்று இயக்க விரைவு பெற்று ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து போயிற்று. அதனால் அணுக்கள் கூட்டால் அமைந்த பேனா என்ற வடிவம் மறைந்து போயிற்று. எது பேனாவாகக் காட்சியளித்தது? அணுக்கள். பேனா பொருளன்று. அணுக்கள் கூடிய ஒரு நிதழ்ச்சி தான் என்பது விளங்கக் கண்டோம். பேனா மட்டுமென்ன? நாம் காணும் இப்பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள், தோற்றங்கள் அத்தனையும் அணுக்களின் கூட்டு இயக்கம் தானே? ஒரு கூட்டுத் தோற்றமாக நாம் காணும் எப்பொருளிலும் ஒவ்வொரு அணுவும் தனித்தனியாகத் தான் இயங்கிக்கொண்டிருக்கிறன. அவற்றின் இடையில் உள்ள இடைவெளியைக் காணும் திறமை புலனறிவுக்கு இல்லை.
அதனால் ஒரே கொத்தாக ஒரு தோற்றம் காட்சியாகின்றது. இவ்வாறு இந்த அடிப்படையில் ஆராய்ந்தால் பிரபஞ்சத் தோற்றங்கள் அத்தனையும் நிகழ்ச்சிகளே என்ற முடிவுக்கு வருகிறோம். அடுத்து ஒரு வினா. எல்லாத் தோற்றங்கட்கும் அடிப்படைத் துகளான அப்பரமாணு பொருளா? நிகழ்ச்சியா? இதனையும் ஆராய்வோம். அப்பரமாணுவின் இயக்கத்தைக் கழித்து யார் அல்லது எது இயங்குகின்றது என்று உணர்ந்து கொள்ளலாமல்லவா? அது தானே பொருளாக இருக்க முடியும்? பரமாணுவின் இயக்கத்தைக் கழித்துப் பார்த்தால் என்ன மிஞ்சும்? ஒன்றுமேயில்லை. வெட்டவெளி தான் மீதி. அகன்று நின்று பூரணமாக இருக்கும் வெட்டவெளி என்ற பொருள் தான் நுண்ணிய இயக்கத்தில், கண்ட நிலையில் பரமாணுவாக இருக்கின்றது. இப்போது பொருள்நிலை விளங்குகிறதல்லவா? வெட்ட வெளி என்ற ஒரு நிலையே பொருள் நிலையாகும். அதன் இயக்க நிகழ்ச்சியே பரமாணுவாகும். மற்ற தோற்றங்கள் யாவும் பரமாணுவாகும். மற்ற தோற்றங்கள் யாவும் பரமாணுக்களின் கூட்டு அல்லது தொடர் நிகழ்ச்சியாகும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

நீங்கள் எழுதுவதற்காகப் பேனாவைக் கையில் வைத்திருக்கின்றீர்கள். அதையே நம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். பேனாவைப் பார்த்து இது பொருளா அல்லது நிகழ்ச்சியா என்ற வினா எழுப்புங்கள். கையினால் தொட்டு உணர முடிவதாலும் கண்ணால் பார்த்து உணர முடிவதாலும் பேனா ஒரு பொருள்தான் என்று கருத நேரும்.

 

மேலே செல்வோம். அந்தப் பேனாவை எரியும் நெருப்பிலிட்டால் என்ன ஆகும். எரிந்து சாம்பலாகிப் போகும். பேனா என்ற வடிவம் இப்போது அதற்கு இல்லை. பேனா எங்கே? அழிந்து விட்டது. இவ்வாறு அழிவது பொருளாகுமா? பேனா என்னவாயிற்று? ஆராய்வோம். நெருப்பிலிட்டவுடன் அதில் இணைந்திருந்த பலதரப்பட்ட அணுக்கள் வெப்பத்தால் கிளர்ச்சியூட்டப் பெற்று இயக்க விரைவு பெற்று ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து போயிற்று. அதனால் அணுக்கள் கூட்டால் அமைந்த பேனா என்ற வடிவம் மறைந்து போயிற்று. எது பேனாவாகக் காட்சியளித்தது? அணுக்கள். பேனா பொருளன்று. அணுக்கள் கூடிய ஒரு நிதழ்ச்சி தான் என்பது விளங்கக் கண்டோம். பேனா மட்டுமென்ன? நாம் காணும் இப்பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள், தோற்றங்கள் அத்தனையும் அணுக்களின் கூட்டு இயக்கம் தானே? ஒரு கூட்டுத் தோற்றமாக நாம் காணும் எப்பொருளிலும் ஒவ்வொரு அணுவும் தனித்தனியாகத் தான் இயங்கிக்கொண்டிருக்கிறன. அவற்றின் இடையில் உள்ள இடைவெளியைக் காணும் திறமை புலனறிவுக்கு இல்லை.

 

அதனால் ஒரே கொத்தாக ஒரு தோற்றம் காட்சியாகின்றது. இவ்வாறு இந்த அடிப்படையில் ஆராய்ந்தால் பிரபஞ்சத் தோற்றங்கள் அத்தனையும் நிகழ்ச்சிகளே என்ற முடிவுக்கு வருகிறோம். அடுத்து ஒரு வினா. எல்லாத் தோற்றங்கட்கும் அடிப்படைத் துகளான அப்பரமாணு பொருளா? நிகழ்ச்சியா? இதனையும் ஆராய்வோம். அப்பரமாணுவின் இயக்கத்தைக் கழித்து யார் அல்லது எது இயங்குகின்றது என்று உணர்ந்து கொள்ளலாமல்லவா? அது தானே பொருளாக இருக்க முடியும்? பரமாணுவின் இயக்கத்தைக் கழித்துப் பார்த்தால் என்ன மிஞ்சும்? ஒன்றுமேயில்லை. வெட்டவெளி தான் மீதி. அகன்று நின்று பூரணமாக இருக்கும் வெட்டவெளி என்ற பொருள் தான் நுண்ணிய இயக்கத்தில், கண்ட நிலையில் பரமாணுவாக இருக்கின்றது. இப்போது பொருள்நிலை விளங்குகிறதல்லவா? வெட்ட வெளி என்ற ஒரு நிலையே பொருள் நிலையாகும். அதன் இயக்க நிகழ்ச்சியே பரமாணுவாகும். மற்ற தோற்றங்கள் யாவும் பரமாணுவாகும். மற்ற தோற்றங்கள் யாவும் பரமாணுக்களின் கூட்டு அல்லது தொடர் நிகழ்ச்சியாகும்.

 

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

 

by Swathi   on 18 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.