தெனாலிராமன் படத்தை தொடர்ந்து நடிகர் வடிவேலு யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடித்து வரும் படம் எலி.
இது 70களில் நடக்கும் கதை. 70களில்தான் ஜெய்சங்கர் ஜேம்ஸ் பாண்ட் கேரக்டர்களில் நடித்தார். வில்லன்கள் கூடாரத்துக்குள் மாறுவேடத்தில் நுழையும் ஜெய் சங்கர், அங்கு இருக்கும் விதவிதமான கதவுகள், குகைகள், பெண்களின் ஆட்டம் இவற்றை கடந்து வில்லன்களை பிடித்து வருவார். அதுமாதிரியான கதையை காமெடியாக காட்டும் படம் எலி.
எலி என்ற தலைப்பு பற்றி இயக்குனர் யுவராஜ் தயாளன் கூறியதாவது: பொதுவாக எதிரியின் கூடாரத்துக்குள் ஒரு காட்டிக் கொடுக்கும் துரோகி இருந்தால் அவனை கருப்பு ஆடு என்பார்கள். அதையே கொள்ளை கூட்டத்தில் எலி என்பார்கள். அதுதான் படத்தின் டைட்டில்.
துப்பறியும் நிபுணரான வடிவேலு ஒரு டெரர் கொள்ளைக்கூட்டத்தை பிடிக்க அவர்களின் கூடாரத்துக்கே செல்கிறார். அங்கு எலியாக இருந்து எப்படி அவர்களது ரகசியங்களை தெரிந்து அவர்களை கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் முளுகதையாம்
|